…………………………………

……………………………….

……………………………………..
சென்னை, ஜூலை 30 – முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான
வி. செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்த
புதிய ஊழல் வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்கூட்டிய ஜாமீன் மனுவை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இன்று (ஜூலை 30)
தள்ளுபடி செய்துள்ளார்.
பொதுமக்களின் நிதிக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில்,
குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று நீதிபதி கூறினார்.
மேலும், மாநில அரசு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன்,
‘ரூ.17 கோடி என்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே. விசாரணையில்
குறைந்தது ரூ.100 கோடி முறைகேடு வெளிச்சத்திற்கு வரும்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
- பின்னணி –
செந்தில் பாலாஜிக்கு எதிரான புதிய DVAC வழக்கு –
கடந்த சில நாட்களுக்கு முன்னர், டாஸ்மாக் மதுபான கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், DVAC செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் (ஐஏஸ்) உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், ‘Party Fund’ என்ற பெயரில் மதுபான உற்பத்தி
ஆலைகளிடமிருந்து மாதந்தோறும் ரூ.102 கோடி பணம் முறைகேடாக
வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஜூலை 29-ம் தேதி, மாநிலம் முழுவதும் 41 இடங்களில் DVAC அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது உதவியாளர்
இல்லம் மற்றும் டி.ஆர். பாலுவின் மதுபான ஆலை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, செந்தில் பாலாஜி
முன்கூட்டிய ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- முக்கிய நிகழ்வுகள் – நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள்-
இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்த செந்தில் பாலாஜியின் முன்கூட்டிய
ஜாமீன் மனுவில், அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி,
‘இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்றும், ‘DVAC
சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை’ என்றும் வாதிட்டார். ஆனால்,
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி இளந்திரையன், பின்வரும் கருத்துகளை பதிவு செய்தார்:
- காவலில் விசாரணை அவசியம்:
‘பொதுமக்களின் நிதிக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
உள்ளது. இது ஒரு தீவிரமான ஊழல் வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவரை
காவலில் வைத்து விசாரிப்பது அவசியம்’ என்று நீதிபதி கூறினார். - அரசு வழக்கறிஞரின் எச்சரிக்கை: மாநில அரசு வழக்கறிஞர்
ஆர். ஜான் சத்யன், ‘ரூ.17 கோடி என்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே.
இந்த வழக்கில் விசாரணையின் போது குறைந்தது ரூ.100 கோடி முறைகேடு
வெளிச்சத்திற்கு வரும்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும்,
‘காவலில் விசாரணை இல்லாமல் இந்த வழக்கின் முழு உண்மையையும்
கண்டுபிடிக்க முடியாது’ என்றும் அவர் கூறினார். - இடைக்கால பாதுகாப்பு மறுப்பு: செந்தில் பாலாஜிக்கு எந்தவிதமான
இடைக்கால பாதுகாப்பும் (interim protection) வழங்க மறுத்த நீதிபதி,
மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தார்.
……………………………………..
இதையடுத்து எந்த நேரமும் மாநில போலீஸ் காவலில் எடுக்கும் என்பதை எதிர்பார்த்த ஜெகதலப்பிரதாபன் செ.பா. உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு அப்பீலில் செல்ல முயற்சிகள் எடுத்துள்ளார்….
ஆனாலும், சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படட 3-4 நாட்களாவது ஆகும் என்பதால், அதுவரை போலீசிடமிருந்து தப்பிக்க நினைத்தவருக்கு,
உடனடியாக நெஞ்சு வலி உதவிக்கு வந்தது…..செ.பா.க்கு பழக்கமான திமுக பிரமுகர் ஒருவரின் மிகவும் வசதி படைத்த, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது…..
அடுத்தபடியாக யாருக்கு மாரடைப்பு ஏற்படும் என்று தெரிந்துகொள்ள மீடியாக்கள் ஆர்வமாக இருக்கின்றன.
………………………………………………………………………………………………………………………………………………..



பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…