5,846 -ஏக்கரில் 1,802 ஏக்கர் என்பது 90 % -ஆ..?? பொய்யர்களே – உங்களால் அந்த பணத்தை அனுபவிக்க முடியுமா ….. ???

………………………………………

…………………………

என்னே ஒரு தைரியம்!

அப்பட்டமான பொய்களை அடித்துப் பேசுவது,

அம்பலப்பட்டாலும், அவமானப்படாமல் மீண்டும் ஊளையிடுவது..என்பதில் இவர்களை மிஞ்ச உலகத்திலேயே ஆளில்லை!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக 90 சதவிகித நிலங்களை வாங்கிவிட்டார்களாம்! இந்த நிலையில் திட்டத்தை ரத்து செய்தால் எப்படி? என எப்படித்தான் துணிந்து பொய் பேச மனம் வருகிறதோ..?

இன்றைக்கு சட்ட சபையில் அமைச்சர் நிர்மல்குமார் துல்லியமான விவரங்களை தெரிவித்துள்ளார்.

முன்னதாக விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா? என்றால், முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார் என அமைச்சர் தெளிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா சம்பந்தப்பட்ட பகுதியில் 381 ஏரி, குளங்கள்..என நீர் நிலைகள் இருக்கின்றன” என்றார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தேவைப்படுவதாக கூறப்படும் 5,846 ஏக்கர் நிலத்தில் ( நியாயப்படி இவ்வளவு அதிக நிலங்கள் மிக அதிகம்) 1,802 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது!

அதுவும் ஏகனாபுரம், காரை, தண்டலம், சிறுகூடல் போன்ற பகுதிகளில் ஒரு செண்ட் நிலத்தை தரக் கூட மக்கள் முன்வரவில்லை.

மேலும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததாக பொய்யை கூறி உள்ளனர். சுற்றுச் சூழல் தொடர்பான மதிப்பீடே செய்யவில்லை. காரணம் செய்தால் அம்பலப்பட்டுவிடுவார்கள்!

சர்வதேச சுற்றுச் சூழல் விதிகளின்படி வனம், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மொத்த நிலப்பரப்பில்,

# 1,425 ஏக்கர் (26.5 சதவிகிதம்) நீர்நிலைகளை அழித்து,

# இந்தப் பகுதியில் தழைத்தோங்கி வளர்ந்துள்ள 36,635 எண்ணிக்கையிலான மரங்களை வெட்டிச் சாய்த்து,

# 63.86 சதவிகிதம் விவசாய நிலங்கள்! அதில்

3 போகம் விளையக் கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் உள்ளது.

இங்கே விமான நிலையத்தை உருவாக்க எப்படி சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்கும்…?

ஆனால், ’மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மாநிலத்தில் உள்ள தங்கள் அடிவருடியாயிருந்த ஆட்சியாளர்களை பயன்படுத்தி, அவர்களின் ரியல் எஸ்டேட் பேராசைகளுக்கு தீனி போட்டு, சூழலியல், இயற்கை பேரழிவு போன்ற அத்துமீறல்களுக்கு கூட சட்ட அங்கீகாரம் தந்து திட்டத்தை நிறைவேற்றத் துடித்தார்கள்’ என்பது உண்மை!

இதற்காக இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே, குறைந்தபட்சம் 150 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் மீறத் துடித்தனர்.

’’ஒருவேளை இது நிகழ்ந்திருந்தால் நீர் நிலைகள் அழிப்பின் விளைவாய் பெருமழை காலத்தில் அந்த விமான நிலையமும், சென்னை பெரு நகரமும் வெள்ளத்தில் மூழ்குவது திண்ணம்’’ என்கிறார்கள், சுற்றுச் சூழலியல் நிபுணர்கள்!

அந்த வகையில் தற்போதைய விமான சென்னை விமான நிலையத்தையே தற்போது 30 மில்லியன் மக்களை கையாளும் திறனைக் கடந்து 55 மில்லியன் மக்களை கையாளும் வகையில் தெர்மல் பிளாண்ட் 3ம், 5ம் ரெடியானதும் தகுதிபடுத்திவிடுவார்களாம். தேவைப்பட்டால் திருப்போரூர் பகுதியை பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

பொய்களே மூலதனமாக்கி, புரட்டுகளே தொழிலாக்கி, பைகளை நிரப்புவதே ஆட்சியென்றாக்கி, பாவம் செய்தலையே தர்மமென்றோர் இன்று தலை கவிழ்ந்தார்.

”பறிக்கப்பட்ட நிலங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் வேளாண்மை” என்பதே வேளாண்குடிகளின் வேண்டுகோளாகும்.

அங்கு தமிழக அரசே ஒரு விவசாய கூட்டுப் பண்ணையை உருவாக்கி, பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவிக்கலாமே!

இங்கே பெரும் அளவில் ஆடு, மாடுகளை வளர்த்து .36000 மரங்களில் கிடைக்கும் இழை,தழைகளை பயன்படுத்தி இயற்கை உரத் தயாரிப்பிலும் ஈடுபடலாமே! ( நன்றி – அறம் …சாவித்திரி கண்ணன் … )

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக