…………………………………..

……………………………………

………………………………………..

………………………………………………………………………………….
History of Alhambra – in short
1) It started as a fortress in the 9th century.
2) In the 13th century, the Nasrid dynasty transformed it into the stunning palace we see today.
3) After the Reconquista in 1492, the Catholic Monarchs made it part of the Spanish crown …
4) Today, it is a UNESCO World Heritage Site and one of Spain’s most visited monuments.
…………………………………………………………………………………
1491 –
ஸ்பெயினின் அல்காப்ரா (Alhambra) கோட்டை முன்பு அந்தப் பெரும்படை நின்றிருந்தது. அரகான் (Aragon) மற்றும் காஸ்டீல் (Castile) என்ற இரு நாடுகளின் மன்னர் பெர்டினாண்ட் (Ferdinand II) மற்றும் அரசி இசபெல்லா (Isabella I) அந்தப் படைக்குத் தலைமை தாங்கினார்கள்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். கிரனடா (Granada) மாகாணத்தைப் பிடித்தால் ஸ்பெயினை ஒன்றிணைத்துவிடலாம். அதன்பின் இவர்கள் தான் ஒன்றுபட்ட ஸ்பெயினின் சார்பில் கொலம்பஸை அமெரிக்காவுக்கு அனுப்பி உலக வரலாற்றை மாற்றவிருக்கிறார்கள்.
கிரனடா மன்னர் போஆப்டில் (Boabdil) பெரும் கவலையில் இருந்தார். வழக்கமாக இப்படிப் படைகள் வந்தால் வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ மற்றும் எகிப்திலிருந்து உதவி வரும். இம்முறை மொராக்கோ மன்னர் ஸ்பெயினுக்கு ஒரு சிறு கண்டனத்துடன் நிறுத்திவிட்டார். எகிப்தின் மம்லுக் (Mamluk) மன்னர் துருக்கிய ஆட்டோமான் (Ottoman) பேரரசுடன் போரில் இருந்தார்.
ஆனால் கிரனடாவை அத்தனை எளிதில் பிடிக்க முடியாது. ஏறத்தாழ 700 மீட்டர் உயர மலை உச்சியில் அந்தக் கோட்டை அமைந்திருந்தது. மலையின் பின்புறம் 3000 மீட்டருக்கும் அதிகமான உயரமான சியர்ரா நெவாடா (Sierra Nevada) மலைத்தொடர். அந்த மலைகளில் எல்லாம் ஏறிப் பின்புறம் தாக்க முடியாது. நேரடியாக மலை மீது ஏறித்தான் தாக்க வேண்டும். அதுவும் 300 மீட்டர் தூரம் வரை சரியாகச் சுடும் பீரங்கிகள் எல்லாம் அப்போது கிடையாது. அந்தப் பீரங்கிகளை மலை மேலும் ஏற்ற முடியாது.
30 கிலோ ஆயுதங்கள், கவசங்களைச் சுமந்துகொண்டு மலை ஏறும் எத்தனை பெரிய படை மீதும் மேலிருந்து துப்பாக்கியால் சுடலாம், அம்புகளை எய்யலாம், கற்களை உருட்டிவிடலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி மலை ஏறினாலும் கோட்டைச் சுவரில் முட்டிக்கொண்டுதான் நிற்க வேண்டும்.
குளிர்காலம் துவங்கும் வரை முற்றுகையிடுவதும், அதன்பின் கொடுங்குளிர் துவங்கியதும் பின்வாங்கி ஓடிப்போவதும் தான் அதுவரை ஸ்பெயினில் வழக்கமாக இருந்தது. இவர்கள் என்ன செய்து கோட்டையைப் பிடிப்பார்கள் என்று பார்க்கலாம்.
கீழே சமவெளியில் பெர்டினாண்ட்டுக்கும் இசபெல்லாவுக்கும் அதே யோசனைதான். கோட்டையைப் போரிட்டு எல்லாம் பிடிக்க முடியாது. உணவு தீரும் வரை முற்றுகையிடுவதுதான் ஒரே வழி. ஆனால் குளிர்காலம் துவங்கினால் என்ன செய்வது?
இருவரும் ஒரு முடிவெடுத்தார்கள். குளிர்காலம் துவங்கினால் போவது எல்லாம் கிடையாது. கீழே சமவெளியில் ஒரு நகரையே அமைப்போம் என்று முடிவெடுத்து சாண்டா ஃபே (Santa Fe) என்ற நகரையே உருவாக்கினார்கள். அங்கே குளிர்காலத்திற்கு வேண்டிய விறகுகள், உணவு எல்லாவற்றையும் சேமித்தார்கள்.
அதன்பின் போரையே துவக்காமல் முற்றுகையிட்டு, கற்களைக் கொண்டுவந்து குளிரைத் தாங்கும் வண்ணம் கல் வீடுகளைக் கட்டினார்கள். உணவும் விறகும் வண்டி வண்டியாக வந்து இறங்கியது. ராணுவ வீரர்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.
மேலே கோட்டையில் உணவு தீர்ந்துகொண்டிருந்தது. ஒன்பது மாத முற்றுகை. தளபதிகள் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் ஒரு யோசனை சொன்னார்கள்: இருக்கும் வீரர்களை எல்லாம் திரட்டி மலையிலிருந்து இறங்கிப் போரிட்டு வீரமரணம் அடைவது.
மன்னர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தையைத் துவங்கினார். சரணடைந்து கோட்டையை ஒப்படைத்தால் அனைவரையும் மொராக்கோவுக்கு அனுப்புவதாக பெர்டினாண்ட்டும் இசபெல்லாவும் வாக்குறுதி அளித்தார்கள்.
அனைத்துத் தளபதிகளும் வீரர்களும் மன்னர் குடும்பமும் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்க, கடைசியில் மன்னர் போஆப்டில் உறுதியாக இருந்து அதை ஏற்றார்.
கோட்டையை ஒப்படைத்துவிட்டு மன்னரும், அவரது தாயும், குடும்பத்தினரும், வீரர்களும், தளபதிகளும் மொராக்கோ செல்ல கடற்கரையில் நிற்கும் கப்பல்களை நோக்கி நடந்தார்கள்.
கோட்டை மறையும் வரை அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மன்னர் போஆப்டில், அதன்பின் கண்ணீர் விட்டு அழுதார். 800 ஆண்டு கால சாம்ராஜ்ஜியம் தன் காலத்தில் இப்படி அழிகிறதே என்று வருந்தினார்.
அவர் அழுத அந்த இடம் இன்றும் “மூர் மன்னனின் கடைசிப் பெருமூச்சு” (The Moor’s Last Sigh) என்று அழைக்கப்படுகிறது.
அவர் அழுததை அவரது தாய் ஆயிஷா (Ayesha) அசூயையுடன் பார்த்தார். அதன்பின் சொன்னார்:
“ஒரு ஆணாக உன்னால் காப்பாற்ற முடியாததை இழந்ததற்கு, ஒரு பெண்ணைப் போல் அழாதே.”
மன்னர் போஆப்டில், அவரது தாய் எல்லாம் அதன்பின் வரலாற்றிலிருந்து மறைந்துவிடுகிறார்கள். மொராக்கோ மன்னரின் விருந்தினர்களாகத் தங்கி அதன்பின் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்தாலும், அவரது தாய் அவரைத் திட்டிய அந்த கடுமையான வார்த்தைகளால் போஆப்டில் ஒரு கோழையாக வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.
ஆனால் அந்தச் சூழலில் அவர் செய்திருக்கக்கூடியது எதுவும் இல்லை. தன்னை நம்பியிருந்தவர்களை எல்லாம் பலியிட்டுத் தானும் மரணமடைந்து ஒரு வீரனாக வரலாற்றில் இடம்பிடித்திருக்கலாம், அல்லது அனைவரையும் காப்பாற்றி ஒரு கோழையாக வரலாற்றில் இடம்பிடிக்கலாம்.
நம்மை நம்பியிருப்பவர்களே நம்மை இப்படி வார்த்தைகளால் சுடுவார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுதான் ஒரு மன்னரின் கடமை.
வரலாறு இன்று இல்லாவிடினும் ஒரு நாள் நம்மைப் புரிந்துகொள்ளும், அல்லது புரியாமலும் போகலாம். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து வருபவர்களின் தீர்ப்புகள் நமக்கு அவசியமில்லை. அன்றைய வாழ்க்கைக்கான வழியே முக்கியம்.
போஆப்டில் சத்திரியரும் அல்ல, சாணக்கியரும் அல்ல; தன் பலம் மற்றும் பலவீனத்தைச் சரியாக உணர்ந்தவர். ( உதவி – நியாண்ட்ர் செல்வன் …. விக்கிபீடியா, மற்றும் வலைத்தளம் ….))
……………………………………………………………………………………………………………………………………………………
When was the Alhambra built?
The Alhambra was built in the 13th and 14th centuries by the Nasrid dynasty, the last Muslim dynasty to rule over Granada. This was a period of incredible cultural and architectural flourishing, with a mix of Islamic art, Christian influences, and Jewish elements. The Nasrid rulers sought to create a symbol of their power, blending fortress and palace architecture in one extraordinary site.
The construction of the Alhambra began in 1238 under Muhammad I, the founder of the Nasrid dynasty, who started by building the Alcazaba, the military fortress, to defend Granada. However, it wasn’t until his descendants, like Muhammad V, that the palaces and gardens were added, making the Alhambra the stunning architectural marvel we see today.
When the Catholic Monarchs, Ferdinand and Isabella, took Granada in 1492, they brought an end to Muslim rule in Spain, marking the final chapter of the Reconquista. As part of their influence, the Renaissance style was incorporated into the Alhambra, especially in rooms like the Palace of Charles V, built within the Alhambra complex. This mix of Islamic and Renaissance architecture gives the Alhambra its unique charm and character.
……………………………………………………………………………………………………………………………………………………









Well Said KM sir. Thank you