…………………………………….

the above photo was a later addition based on latest news 😒
………………………………………………………………………………………………………………………………….

………………………………..
கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது…!!!
மேன்மேலும் இந்த மாதிரி பாசிடிவ்வான அம்சங்களை பார்க்கும் போது…!!!
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்களை நியமித்து அடிமாட்டுச் சம்பளம் தந்து வந்தனர்.
இந்தச் சூழலில் தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையில், ”மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான பேராசிரியர் காலிப் பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிரப்புவதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்” எனச் சொல்லப்பட்டதும்,
இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களும்,
”ஊழல் முறைகேடுகள், லஞ்சம் தவிர்த்து நேர்மையாக பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும்,
ஆசிரியர் பணி மாறுதல்களுக்கு கலந்தாய்வுகள் நடந்து செலவில்லாமல் மாறுதல்கள் உறுதிபடுத்தப்படும்” என்று சொல்லி உள்ளதும் உள்ளபடியே அனைவரையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள லஞ்சதில் தோய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே இந்த நோக்கம் நிறைவேறும்.
அத்துடன் ஏற்கனவே பல்லாண்டுகள் இந்தக் கல்லூரிகள் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றிவர்களுக்கு போட்டி தேர்வில் நீதிமன்றம் குறிப்பிட்டது போல 15 மதிப்பெண்கள் வரை அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் ’வெயிட்டேஜ் மார்க்காக’ தரவேண்டும்.
இதை நேர்மையாக செய்துமுடித்தாலும் கூட, இந்த நல்ல நோக்கத்தை அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர் நியமனங்களில் அமல்படுத்துவது பெரும் சவாலாகும்.
காரணம், அந்த காலத்தில் கல்வியை வளர்க்க எண்ணிய வசதிபடைத்த சான்றோர்கள் தங்கள் உன்னத நோக்கம் நிறைவேற தங்களின் நிலத்தை தந்து கட்டிடம் எழுப்பி உயர்கல்வி தந்தனர்.
ஆனால், இன்றோ, அவர்களின் வாரிசுகளில் பெரும்பாலோர் இந்தக் கல்லூரிகளை வணிகமாக கருதுகின்றனர். இதனால், அரசு சம்பளத்தை சுளையாக பெறப்போகும் பேராசிரியர்களிடம் பணி நியமனத்திற்கு 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை லஞ்சம் பார்த்து, அதில் அதிகாரிகள், அமைச்சருக்கும் பங்கு தருகின்றனர்.
’’அமைச்சர் லஞ்சம் வேண்டாம் என்று சொல்கிறாரா? ரொம்ப சந்தோஷம்’’ என்று சொல்லி, அந்த லஞ்சப் பணத்தை தங்கள் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள்…!
இவர்கள் எல்லாம் ஈவு இரக்கமற்று மற்றவர்களின் உழைப்பெனும் ரத்தத்தை உறிஞ்சி குடித்துப் பழகிய அட்டைப் பூச்சிகள்…!!!
ஆகவே, ஆசிரியர் நியமனங்களில் இருந்து இந்த தனியார் நிர்வாகத்தை முழுமையாக விலக்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் நேர்மையான பேராசிரியர்கள் நியமனம் என்பது சாத்தியப்படும்.
நேர்மையான ஆசிரியர்களால் தான் நேர்மையான மாணவ சமுதாயம் உருவாகி, நாளை இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படும்.
புதிய தவெக அரசாங்கம் ஊழல் முறைகேட்டை தவிர்க்கும் இது போன்ற
சில முன்னெடுப்புகளை செய்யும் போது அதற்கு ஆதரவான எதிர்வினைகள் சமூக தளத்தில் வலுவாக எழுந்து, மக்களும் கைகோர்த்தால் மட்டுமே நேர்மையான நிர்வாகம் சாத்தியமாகும். ( நன்றி – சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு ….. )
……………………………………………………………………………………………………………………………………….









எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…