கண்ணதாசனின் மகன் – அண்ணாதுரை … ??? – !!!

……………………………..

(அண்ணாதுரை – கண்ணதாசன் …!!!)

………………………………

( இது காந்தி கண்ணதாசன் ….)

…………………………………

அண்ணாதுரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார்.

அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும் போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாதுரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது’’.

அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்?’’ என்றார், அப்பா.

“என் முன்னாலேயே டேய் அண்ணாதுரை என்று கூப்பிடுவதற்குத் தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.

ஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை.

கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்?’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.

காங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லி விடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம்.

அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.

வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக் கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன்.

வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்து கொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.

”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமேல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக் கொண்டார்.

“நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார்.

அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன.

ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான். (காந்தி கண்ணதாசன்… )

……………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!!

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். “என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் … !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ … !!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… ……………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓஷோ சொன்ன ஒரு ஜென் கதை……!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………………………. ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்… ஆனால் அவனுக்கு அவசரம்… ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்…. தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன்… பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கேள்விப்படாத கதை …. திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு …. !!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………. பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர். கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான் பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது. அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் ….

This gallery contains 1 photo.

…………………………………………………………. …………………………………………………………… இதற்கு முந்தைய பதிவில்,கவிஞர் வாலி சொல்லியிருந்த –3 இஸ்லாமியர்கள் சேர்ந்து உருவாக்கிய,மனதை உருக்கும் –சிவனைக் குறித்த – பக்திப்பாடல் இது தான்….( -என் விருப்பம்-7 பதிவிலிருந்து – ) …………………………………………………….. பாய்ஜூ பாவரா (baiju bawara ), 1952-ஆம் ஆண்டு வெளிவந்து100 வாரங்களுக்கு மேல் ஓடிய ஒரு ஹிந்தி திரைப்படம்.பாரத்பூஷன், மீனாகுமாரி நடித்தது.பேரரசர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

This gallery contains 2 photos.

………………………………………….. ………………………………………… கவிஞர் வாலி அவர்கள் விகடனில்எழுதிய ஒரு கட்டுரையில் “நிஷ்காம்ய கர்மா” விற்கானமிக சுவாரஸ்யமான நடைமுறை விளக்கங்களைதந்திருந்தார் …. கீழே -முதலில் வாலி அவர்களின் கட்டுரையும்பின்னர் வேறு சிலவும்…. ——————————————————————- ‘கடவுள் இல்லை;கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு!எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக