—வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!

………………………………………

………………………………………………………….

………………………………………………………

(பல இன்றும் ரசிக்கலாம்…….. கடைசி ஜோக் -ஸூப்பர் …!!! )

(1929, ஏப்ரல்)

ஒரு வெள்ளைக்காரனிடம் பரிசாரகன் வேலை பார்த்திருந்த மந்தோனியின் நாய் இறந்துபோனதற்கு அவன் மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தான்.

நண்பன்:- நாய் இறந்துபோனதைக் குறித்தா இவ்வளவு விசனப்படுகிறாய்?

மந்தோனி:- அது இறந்ததைப் பற்றி விசனிக்கவில்லை. இப்போது ஒரு வேலை அதிகமாயிற்றே என்பதற்குத்தான் விசனப்படுகிறேன்.

நண்பர்:- என்ன வேலை அதிகமாகிவிட்டது?

மந்தோனி:- துரைகள் சாப்பிட்ட பின் பிளேட்டுகளை அந்த நாய் சுத்தமாக நக்கி வைத்துவிடும். இப்போது அவற்றையெல்லாம் கழுவித் துலக்கவேண்டிய வேலை ஒன்று அதிகமாயிற்று.

…………………………………………………………………………….

ஒரு சர்க்கஸ் கொட்டகையில், ஒரு சர்க்கஸ் பெண்மணியின் கையிலிருந்த சர்க்கரையை சிங்கம், பூனைக்குட்டியைப் போல் அடங்கி ஒடுங்கி நக்கித் தின்பதைக் கண்ட ஒருவன், ‘‘இது என்ன பெரிய காரியமா! இதைப்போல் யாரும் எளிதில் செய்யலாமே” என்றான்.

சர்க்கஸ் பெண்:- (வியப்புடன்) உன்னால் இது செய்ய முடியுமென்றா சொல்லுகிறாய்?

அவன்:- சந்தேகமில்லாமல் சிங்கத்தைவிட நன்றாய் செய்ய என்னால் முடியும்…!!!

………………………………………………..

அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பார்ந்த ஐயா, தாங்கள் அனுப்பிய `கம்ப ராமாயணம்’, `வால்மீகி ராமாயணம்’, `வில்லிபுத்தூரார் பாரதம்’ முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவை மிகவும் நன்றாய் இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக ஏதாவது புஸ்தகங்கள் எழுதினால் உடனே வி.பி-யில் அனுப்பிவையுங்கள்.

…………………………………………………………………………

உபாத்தியாயர்:- ஒரே காலத்தில் சம்பவித்த காரியம் ஒன்று சொல், பார்க்கலாம்.

பையன்:- என்னுடைய தாயார், தகப்பனார் கல்யாணம்.

………………………………………………………………………………

தம்பியப்பா:- சீமையிலிருந்து நான் ஒரு இயந்திரம் வரவழைத்திருக்கிறேன். அதில் ஒரு ஆட்டுக்குட்டியை அப்படியே போட்டுவிட்டால் துண்டு துண்டாக வந்து விழும்.

நம்பியப்பா:- ஜெர்மனியிலிருந்து நான் ஒரு இயந்திரம் வரவழைத்திருக்கிறேன். அதில் ஒரு ஆட்டைப் போட்டால் சமைத்து, குழம்பு, வறுவல், சட்னி இவையாக வெளியே வரும்.

கம்பியப்பா:- அமெரிக்காவிலிருந்து நான் ஒரு நேர்த்தியான இயந்திரம் வரவழைத்திருக்கிறேன். அதில் ஒரு ஆட்டுக்குட்டியைப் போட்டால் சமைத்துச் சாப்பிடுவதற்கு தயாராகச் செய்து வெளியே அனுப்பும். அது வாய்க்கு ருசியாக இல்லாவிட்டால் அதைத் திருப்பி இயந்திரத்தில் ஊற்றினால் மறுபடியும் ஆட்டுக் குட்டியாகவே வெளியே வரும்.

(1929, ஜனவரி)

……………………………………………………………………………..

டாக்டர்: (நோயாளி கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு) பிராணன் போய்விட்டதென்றே நினைக்கிறேன். பாடைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

நோயாளி: இல்லை, இல்லை, நான் உயிருடன்தான் இருக்கிறேன்.

நோயாளியின் பெண்சாதி: அடே முட்டாளே, சும்மாயிரு. டாக்டர் சொன்னதுதான் சரி. உன்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை மறந்துவிடாதே.

(1929, பிப்ரவரி)

……………………………………………………………………………

சின்னஞ்சிறு தமாஷ்

விறகு விலை உயர்ந்தது!

சென்னையில் பக்கிம்காம் கால்வாயை அடைத்துவிட்டதன் பயனாய் விறகு விலை இருமடங்காக உயர்ந்துவிட்டது. இது குறித்து சட்டசபையில் கேள்வி கேட்டார்கள். ரயில்வே கம்பெனியார் விறகு கொண்டுவருவதற்கு உதவி செய்யவில்லையென்று குறை கூறப்பட்டது.

நாடெங்குமுள்ள இயற்கை வைத்தியர்கள் கூட்டங்கூடி அரசாங்கத்துக்கும், ரயில்வே கம்பெனிக்கும் நன்றி செலுத்தியிருப்பதாக அறிகிறோம். ஜனங்களைப் பச்சை உணவு உட்கொள்ளும்படி செய்ய இதுதான் சரியான வழி என்று அவர்கள் சந்தோஷப்படுகிறார்களாம்.

(1929, மார்ச்)

……………………………………………………………………………

தண்ணீரே சிறந்தது!

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த பூனைக்கால் ஜான்ஸன் ‘‘உலகில் தண்ணீரைவிடச் சிறந்த பானம் வேறில்லை’’ என்று தெரிவித்தார். சென்னையிலுள்ள பால்காரர்களுக்கு இந்த உண்மை வெகுநாளாகத் தெரிந்திருப்பதாக நகரவாசிகள் `விகட’னிடம் முறையிடுகிறார்கள்.

(1929, மார்ச்)

…………………………………………………………………………..

வருந்தும் பத்திரிகைகள்!

சென்னை மௌண்ட் ரோட்டில் சூதாட்டத்தில் ஆயிரம் ரூபாய் தோற்ற ஒரு முஸ்லிம், அந்தப் பணத்தை ஜெயித்த மற்ற இரு முஸ்லிம்களைக் காயப்படுத்தினானாம். அதன்மேல் அவன் கைதுசெய்யப்பட்டான். இவர்களில் எல்லோரும் முஸ்லிம்களாயிருந்துவிட்டார்களேயென்று ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் வருத்தப்பட்டதாக ஒரு ரகசியச் செய்தி கூறுகிறது. ஒருவன் மட்டும் ஹிந்துவாயிருந்தால் `ஹிந்து – முஸ்லிம் கலவரம்’ என்பதாகப் பெரிய தலைப்புகளுடன் போட்டிருக்கலாமல்லவா?

(1929 ஏப்ரல்)

.

நாலணா வக்கீல்!

நீதிபதி ஒருவர் சாதுர்யமாகப் பேசுவதில் தமக்கு இணையில்லையென்ற எண்ணங்கொண்டவர். ஒரு வழக்கில் பிரதிவாதியைப் பார்த்து ‘‘உன் வக்கீல் எங்கே?’’ என்று அவர் கேட்டார். ‘‘சுவாமி! நான் ஏழை, வக்கீல் வைக்க சக்தியில்லை’’ எள்று பிரதிவாதி கூறினான். ‘‘அடே மடசாம்பிராணி! நாலணா வக்கீல்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே… பார் ரூமிலே போய் யாரையாவது அழைத்து வா’’ என்று நீதிபதி சாதுர்யமாகப் பேசி நகைத்தார்.

பிரதிவாதி ரூமிலே போய் நாலணா வக்கீல் யாரென்று ஒவ்வொருவராக விசாரித்தான், வக்கீல்களுக்குக் கோபத்தினால் முகம் சிவந்தது. கடைசியில் கிழப்புலி வக்கீல் ஒருவர் அவனை அழைத்துக் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லி அனுப்பினார்.

பிரதிவாதி நீதி மண்டபத்துக்குள் வந்ததும், ‘‘எங்கே வக்கீல்?’’ என்று நீதிபதி கேட்டார். அவன் பதில் அளித்ததாவது: ‘‘பிரபுவே! என் செய்வேன்… நாலணா வக்கீல்களெல்லாரும் ஜட்ஜுகளாகி விட்டார்களாமே!’’ (விகடனுக்கு நன்றி… )

……………………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

– -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’

…………………………………………. கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சில நடுகற்கள், தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மை இயல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………….. “சரித்திரத்தில் சில நிமிர்வுகள்” – வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை பிரபஞ்சன். தமிழ்வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை ஏற்படுத்திவிட்டு மறைந்த பிரஞ்சன் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை இது. தமிழக வரலாற்றோடு இணைந்த ஒரு நிகழ்வை சிறுகதையாகத் தொடர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….???

This gallery contains 2 photos.

……………………………………… ””””””””””””””” ………………………………………. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் பல ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகம் இழந்து விட்டது எனும் குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைக்கிறது திமுக. விஜய் ஆட்சிக்கு எதிராக ஒரு நேரெட்டிவை செட் செய்ய முதல் நாளில் இருந்தே உழைக்க தொடங்கி விட்டனர். திமுகவின் எதிரிகளின் மீது எப்படி நேரேட்டிவ் செட் செய்யப்படுகிறது என்பதற்கு இதெல்லாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது நிஜம், எது நடிப்பு .. ??? – திருமதி லதா, ரஜினிகாந்த் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. சிலர் நாடகம், திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார்கள்…. சில அரசியலாதிகள் மேடையிலும் நடிப்பார்கள்…. ஆனால், இயல்பாக பேசுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பழகும் சாமர்த்தியம் ஒரு சிலருக்கு உண்டு….. சிலர் அதில் ஸ்பெஷலிஸ்டுகள்…. கடந்த 40 ஆண்டுக்காலத்தில் தமிழ்நாட்டில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களில், தமிழக மக்களுக்காக இவர்கள் எவ்வளவு செலவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ராகுல் காந்தி – Is Rahul Gandhi a Failure … ??? Why Rahul Still Matters…. ??? Rajdeep Sardesai –

This gallery contains 2 photos.

………………………………………………………….. …………………………………………………………… …………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“மர்மமாக ஆஃப் ஆகும் சிக்னல்கள்…” கேபிள் டிவி பிரச்சினைக்கு விஜய் அரசு காரணமா … ???

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………………………………….. ஜூனியர் விகடன் சொல்லும் செய்தி …. அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கும் சர்ச்சைகளுக்கும் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. அவ்வப்போது, அதன் கேபிள் சேவைகள் தடைப்படுவதும், அரக்கப் பரக்க அரசு அதிகாரிகள் வேகமெடுக்க, தடைப்பட்ட சேனல்கள் மீண்டும் இணைப்புக்குள்ளாவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஆட்சியில் நடந்த அதே அவலங்கள், இந்த த.வெ.க ஆட்சியிலும் தொடர்கதையாகியிருப்பதுதான், சர்ச்சையாக வெடித்திருக்கிறது. “மர்மமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக