வாலி சொன்ன மொஹம்மது ரஃபியின் “அந்த” HINDI பாடல் ….

………………………………………………………….

……………………………………………………………

இதற்கு முந்தைய பதிவில்,
கவிஞர் வாலி சொல்லியிருந்த –3 இஸ்லாமியர்கள் சேர்ந்து உருவாக்கிய,
மனதை உருக்கும் –
சிவனைக் குறித்த – பக்திப்பாடல் இது தான்….
( -என் விருப்பம்-7 பதிவிலிருந்து – )

……………………………………………………..

பாய்ஜூ பாவரா (baiju bawara ), 1952-ஆம் ஆண்டு வெளிவந்து
100 வாரங்களுக்கு மேல் ஓடிய ஒரு ஹிந்தி திரைப்படம்.
பாரத்பூஷன், மீனாகுமாரி நடித்தது.
பேரரசர் அக்பரின் காலத்தில் நடந்ததாகச்
சொல்லப்படும் ஒரு கதையை அடிப்படையாக கொண்டது.

“ஓ துனியா கே ரக்வாலே” –இந்த உலகை ரட்சிக்கும் பகவானே –
என்று ஆண்டவனை வேண்டி பாடப்பட்ட பாடல்.
மனதைப் பிழியும்…குரல், இசை, ராகம்…!!

சாஸ்த்ரீய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் –
அமைந்த இந்த பாடலைஎழுதியவர் ஷகீல் பதாயுனி,
இசையமைத்தவர் நௌஷாத்,
பாடியவர் மொஹம்மத் ரஃபி–

ஆக மூன்று பேரும் இஸ்லாமியர்கள்….


………….


பாடல் இந்துக் கடவுளான சிவனைக் குறித்தது….!!!

இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?

திரைப்படத்தில் வரும் பாடல் காட்சியே கிடைத்தது…

இருந்தாலும், ரஃபி அவர்கள் நேரில் பாடுவதை நண்பர்களுக்கு
காட்ட வேண்டுமென்று நினைத்தேன்…
படம் வெளிவந்து 25-30 ஆண்டுகளுக்கு பிறகு, பம்பாயில்,இசையமைப்பாளர் நௌஷாத் அவர்களும், ரஃபியும் சேர்ந்து
நிகழ்த்திய ஒரு live orchestra பதிவை கீழே தந்திருக்கிறேன்…

மொஹம்மது ரஃபி எவ்வளவு உணர்வுபூர்வமாக
இந்தப் பாடலை மேடையில் பாடுகிறார் என்பதை
நம்மால் உணர முடிகிறது.அந்தக் காலத்தில், அவரை புகழின் உச்சிக்கே
கொண்டு சென்றன இந்தப் பாடலும், கீழே தந்திருக்கும்
இன்னொரு பாடலும்..


பாடல்களுக்காகவே 100 வாரங்கள் (நாட்கள் அல்ல வாரங்கள்…!!! )
ஓடியது பாய்ஜூ பாவாரா.…..

…………………………………….

……………………………………

-அதே படத்தில் –

இதே – 3 இஸ்லாமியர்களின் கூட்டணியில் உருவான
இன்னொரு அற்புதமான மனதை உருக்கும் பக்திப் பாடல் …

“ஹரி ஓம்”

………………………………………..

………………………………………………..

இந்தப் பாடல்களை இயற்றிய, இசையமைத்த, பாடிய –
ஷகீல் பதாயுனி, நௌஷாத் மற்றும் மொஹம்மது ரஃபி,
ஆகியோருக்கு இருந்த

புரிதலும்,
பக்குவமும் –

நமது ஏ.ஆர். ரெஹ்மான் அவர்களுக்கு இல்லாமல் போனது
நமது துரதிருஷ்டமே.

இசைக்கு ஏது மொழியும், இனமும், மதமும்…?

.
————————————————————————————————————————————

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஏ.ஆர்.ரெஹமான் சொன்னதற்கு – வாலியின் விளக்கம்… “நிஷ்காம்ய கர்மா” –

This gallery contains 2 photos.

………………………………………….. ………………………………………… கவிஞர் வாலி அவர்கள் விகடனில்எழுதிய ஒரு கட்டுரையில் “நிஷ்காம்ய கர்மா” விற்கானமிக சுவாரஸ்யமான நடைமுறை விளக்கங்களைதந்திருந்தார் …. கீழே -முதலில் வாலி அவர்களின் கட்டுரையும்பின்னர் வேறு சிலவும்…. ——————————————————————- ‘கடவுள் இல்லை;கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு!எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யுனெஸ்கோ புகழ்பெற்ற கோட்டை – Alhambra ….. !!!

This gallery contains 4 photos.

………………………………….. …………………………………… ……………………………………….. …………………………………………………………………………………. History of Alhambra – in short 1) It started as a fortress in the 9th century. 2) In the 13th century, the Nasrid dynasty transformed it into the stunning palace we see today. 3) After the Reconquista in 1492, the … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உலகை ஏமாற்றும் அமெரிக்கா –  R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2)

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………….. பகுதி 2 5. வெனிசுலா மற்றும் ‘லோக்கல் தாதா’ அமெரிக்கா – வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைப் பற்றி சூட் பேசுகிறார். “முன்பு அவர்கள் அமைதி காப்பவர்களாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுப்பவர்களாகவும் நடிக்க அதிக சிரத்தை எடுத்தார்கள். இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களின் நிலைப்பாடு: ‘நான் ஒரு லோக்கல் தாதா. எனக்குத் தோன்றியதைச் செய்வேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1)

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………. ஸ்வராஜ்யா பத்திரிகையில் வந்த மிக சுவாரசியமான ஒரு கலந்துரையாடல். மிகவும் விறுவிறுப்பாக இருந்த காரணத்தால் இதை முழுதும் மொழிபெயர்த்து பகிர வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அதிக பக்கங்கள் கொண்ட காரணத்தால் இதை இரண்டாகப் பிரித்து பகுதி ஒன்று பகுதி இரண்டு என்று பகிர்கிறேன். இந்த உரையாடல் அவரது சமீபத்திய புத்தகமாகிய கிரேட் பவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!!

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார் ஓரு மத்திய அமைச்சர். ’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார் ஒரு பெண் எம்.பி. ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார் இன்னொரு அரசியல்வாதி … இன்னும் சிலர் -நேரு நினைவு அருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர் …. நாடாளுமன்றத்திலும் வாய்ப்பு கிடைக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக