கொடுமை, மகா கொடுமை …!!! பாவிகள் – மகா பாவிகள் …..

……………………………………..

………………………………………………………………

‘என் மகனை யார் பார்த்துக்கொள்வார்?’:

ஊடுருவல்காரர் எனக் சந்தேகிக்கப்பட்டு மும்பையில் கைது செய்யப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கப் பெண் –

40 வயதான ஷாஹிதா ஃபக்கீர் ஜூலை 18 அன்று மும்பையில், மார்க்கெட்டில் இருக்கும்போது – கைது செய்யப்பட்டார்.

கடந்த 20 ஆண்டுகளாகத் தனது குடும்பத்துடன் நவி மும்பையில் வசித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 40 வயதான ஷாஹிதா ஃபக்கீருக்கு,

ஜூலை 18 அன்று காவல்துறையினர் அவரை “ஊடுருவல்காரர்” என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து, இறுதியில் வங்கதேசத்திற்கு நாடு கடத்தியது ஒரு கொடுங்கனவாக முடிந்தது.

ஹவுசிங் சொசைட்டி பராமரிப்பாளரான கணவர் ஜும்மன் ஃபக்கீர் (45) மற்றும் 7-ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகனுடன், ஷாஹிதா நவி மும்பையின் சன்பாடாவில் வசித்து வந்தார்.

இத்தம்பதியினர் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஸ்வரூப்நகரைப் சேர்ந்தவர்கள். இவர்களது மூத்த மகன் அங்கு மொபைல் பழுதுபார்க்கும் நபராகப் பணியாற்றி வருகிறார்.

“ஜூலை 18 அன்று, அவர் சந்தைக்குச் சென்றபோது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, அவருடைய கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், அவருடைய அனைத்து ஆவணங்களுடனும் செம்பூரில் உள்ள தடுப்பு மையத்திற்குச் சென்று காவல்துறையினருக்கு விளக்க முயன்றோம்” – என்று ஜும்மன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

“அவரது பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பெற்றாரின் நிலப் பத்திரங்கள் மற்றும் பிற அடையாளச் சான்றுகளைக் காண்பித்தோம்.

இருப்பினும், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக எங்களிடம் கூறினர். எங்கள் இரு குடும்பத்தினரும் ஸ்வரூப்நகரைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இந்தியக் குடிமக்கள், கடந்த இருபது ஆண்டுகளாக மும்பையில் எவ்விதச் சிக்கலும் இன்றி வாழ்ந்து வருகிறோம்,” என்று ஜும்மன் மேலும் கூறினார்.

ஷாஹிதா குழுவாக வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு அசாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுக்கிறது. வங்கதேசத்தின் சத்கிராவில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்த அவர், இறுதியில் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டார்.

உதவியளித்த வங்கதேசவாசிகள்

சத்கிராவிலிருந்து தொலைபேசி வாயிலாகப் பேசிய ஷாஹிதா தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“அசாம் எல்லை வழியாக அதிகாலை 1 மணி அளவில் என்னை வங்கதேசத்திற்குள் தள்ளினர். பிரதான சாலையை அடைய சேறும் சகதியுமான வயல்வெளிகளில் 8 மணி நேரம் நடந்தேன். என் நிலையைக் கண்டு உள்ளூர்வாசிகள் உதவினர். சத்கிராவில் உள்ள ஒரு குடும்பம் எனக்கு தங்குமிடம், ஆடைகள் மற்றும் உணவு அளித்தது,” என்றார்.

“உள்ளூர் காவல்துறை இந்த வீட்டை கண்காணித்து வருகிறது. ஆனால் இவர்கள் ஏழை மக்கள்; நான் எவ்வளவு காலம் இப்படி இருக்க முடியும்?

நான் ஒரு இந்தியக் குடிமகள், மீண்டும் வீட்டிற்குத் திரும்ப விரும்புகிறேன். என் மகன் 7-ஆம் வகுப்பு படிக்கிறான்; அவனை யார் பார்த்துக்கொள்வார்?” என்று அவர் வேதனையுடன் வினவினார்.

மேலும், தைராய்டு பிரச்சினை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தான், அடிப்படை மருந்துகளுக்காக அங்குள்ள ஒரு உள்ளூர் மருத்துவரை நம்பியிருப்பதாக ஷாஹிதா கூறினார்.

ஷாஹிதாவின் குடும்பத்தினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளனர்.

“என் சித்தப்பாக்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளனர். அவரை மீண்டும் அழைத்து வர நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்,” என்று ஜும்மன் கூறினார்.

ஷாஹிதாவின் கூற்றுப்படி, அவரது குடும்பத்தினர் முன்னதாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) பங்கேற்றிருந்தனர். “நாங்கள் மூன்று சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள். நாங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். என் சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளன, ஆனால் என் மூத்த சகோதரியின் பெயரும் என் பெயரும் தற்போது தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளன,” என்றார்.

இதற்கிடையில், ‘மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர் ஒற்றுமை அமைப்பு’ (பரிஜயீ ஷ்ரமிக் ஐக்கியா மஞ்சா) ஆகஸ்ட் 8 அன்று வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு (MEA) கடிதம் எழுதியுள்ளது. அதில் ஷாஹிதாவின் ஆவணங்களைச் சரிபார்த்து, அவர் நாடு திரும்புவதற்கு உடனடி இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தியுள்ளது.

“வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் ஒரு இந்தியக் குடிமகள், அவரது ஆவணங்களை உடனே சரிபார்க்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ், நிலப் பத்திரங்கள் மற்றும் பள்ளிச் சான்றுகளைக் கடிதத்துடன் இணைத்துள்ளோம்,” என்று அமைப்பின் செயலாளர் ஆசிஃப் ஃபரூக் தெரிவித்தார்.

“கடந்த காலத்தில், பிற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல மேற்கு வங்கவாசிகள் தவறுதலாக வங்கதேசத்திற்குள் தள்ளப்பட்டு, பின்னர் மீட்டெடுக்கப்பட்டனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

……………………………………………………………

மேலேயுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைச் செய்தி – லிங்க் –

……………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“அவன் காந்தியைப் பார்த்தது கிடையாது – ஆனாலும் “….!!! -அசோகமித்திரன் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………… ……………………………………………………………………………….. அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு  வெகு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

24-25-ல், திமுகவுக்கு வந்த 365 கோடி …!!! வந்ததை ஒப்புக்கொள்பவர்கள் கொடுத்தவர் யார் என்பதை மறைப்பது ஏன் … ???

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. ………………………………………………………………………………… News item from India Today – …….. the DMK, which topped the list with Rs 365.784 crore. More than 99 per cent of the donations received by the Trinamool Congress came through cheques and demand drafts, with … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிவாஜி’யின் சதாரம் தெருக்கூத்து …. நாம் பார்த்திராத காட்சி ….!!!

This gallery contains 1 photo.

1987…Sivaji performs for his family in the US……Nobody expected this…!!! ………………………………. ………………………………. 1987-ல் அமெரிக்கா சென்றிருந்த சிவாஜி ஒரு லேசான தருணத்தில், குடும்பத்தினரின் விருப்பத்திற்காக, சிறு வயதில், பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் தான் நடித்த சதாரம் நாடகத்தின் ஒரு சிறு சாம்பிளை குஷியாக செய்து காட்டியதை, அவரது தம்பி சண்முகத்தின் மகன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆப்பசைத்த குரங்கின் கதை – உதயநிதி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா …???ஆங்கில ஊடகவியலாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் …!!!

This gallery contains 2 photos.

……………………………………… …………………………………… திரு.உதயநிதி அவர்கள் 2 ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு ரூ,100- கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் …. தனது பேச்சைத் தவறாக சித்தரித்து சர்ச்சையை உருவாக்கியதாகக் கூறி ஆங்கில ஊடக செய்தியாளர்களுக்கு உதயநிதி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்ரி சேஷாத்ரியின் செய்தி அலசல் கீழே காணொளியில் …….. ……………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பட்டினத்தார் ….!!!

This gallery contains 5 photos.

………………………………………. …………………………………… ………………………………………. தமிழ்பேசிய பண்டைய சிவபக்தர்களில் முக்கியமானவர் பட்டினத்தார், அவர் சித்தர் வரிசையிலும் உண்டு. ஆழமான தத்துவ போதனைகளை, வாழ்வின் நிலையாமையினை, இன்பங்களின் மாயையினை , லவுகீக மயக்கங்களை மிக மிக எளிய மொழியில் பாடி வைத்தவர் அவர்… ஈசனின் அடியாராக ஒரு கோவணம் மட்டும் கட்டி கையில் கரும்போடு பாரதமெங்கும் சுற்றிவந்து பெரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூப்பர் ஆதவ் அர்ஜுனா …. 900 கோடி ரூபாய் யார் வாங்கினார்கள் …??? மீண்டும் ‘அப்பா’வை காணோம் … !!!

This gallery contains 3 photos.

………………………………….. …………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக