ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1)

……………………………………………….

………………………………………………….

ஸ்வராஜ்யா பத்திரிகையில் வந்த மிக சுவாரசியமான ஒரு கலந்துரையாடல். மிகவும் விறுவிறுப்பாக இருந்த காரணத்தால் இதை முழுதும் மொழிபெயர்த்து பகிர வேண்டும் என்ற ஆசைப்பட்டேன்.

அதிக பக்கங்கள் கொண்ட காரணத்தால் இதை இரண்டாகப் பிரித்து பகுதி ஒன்று பகுதி இரண்டு என்று பகிர்கிறேன். இந்த உரையாடல் அவரது சமீபத்திய புத்தகமாகிய கிரேட் பவர் கேம்ஸ் ஃபிரம் வெஸ்டர்ன் டிக்லைன் டூ ஈஸ்டர்ன் அசண்ட் ( Great Power Games – From Western Decline to Eastern Ascent) என்கிற புத்தகத்தில் இருந்து தொடங்குகிறது.

இதற்கு முன்னர் அவர் தி அல்டிமேட் கோல் The ultimate goal) மற்றும் தி அன் எண்டிங் கேம் The Unending Game)போன்ற இரண்டு புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

அந்த வீடியோ அழைப்பு இணைக்கப்பட்ட போது, விக்ரம் சூட்டின் முகம் திரையில் தெரிகிறது. அவருக்குப் பின்னால் ஒரு மின்விசிறி, வெள்ளைச் சுவர்களில் சில ஓவியங்கள். ஒரு முன்னாள் உளவுத்துறைத் தலைவரின் வீட்டில் ரகசிய அறைகளோ, சுவர்க் கணினிகளோ, வரைபடங்களோ இல்லை. வெளிர் நீல நிறச் சட்டை அணிந்த 82 வயது முதியவர் ஒருவர் தனது வரவேற்பறையில் இருந்து பேசுகிறார்.

ஓய்வு பெற்ற ஒரு ‘ரா’ தலைவரைப் பார்ப்பதற்கு ஜேம்ஸ் பாண்ட் போலவோ அல்லது ஜார்ஜ் ஸ்மைலி போலவோ அவர் இல்லை. “ஜேம்ஸ் பாண்ட் என்பது ஒரு கற்பனை” என்று சூட் முன்பே சொல்லியிருக்கிறார்.

பதான், ஏக் தா டைகர் போன்ற பாலிவுட் ஸ்பை த்ரில்லர்களைப் பற்றி அவர் மிக வெளிப்படையாக, “அது ஒரு நகைச்சுவை” என்கிறார்.

‘ரா’ மற்றும் ‘ஐஎஸ்ஐ’ ஏஜெண்டுகள் காதலிப்பதாகக் காட்டப்படும் கதைகளைப் பற்றி, “அப்படிச் செய்தால் அவன் சுடப்படுவான்” என்று யதார்த்தத்தைச் சுடுகிறார்.

2000 டிசம்பர் முதல் 2003 மார்ச் வரை இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ‘ரா’வை அவர் வழிநடத்தினார்.

கார்கில் போருக்குப் பிந்தைய காலம், நாடாளுமன்றத் தாக்குதல், 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய உலக மாற்றங்கள் என இந்தியாவின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் வாஜ்பாயின் கீழ் பணியாற்றினார்.

அதற்கு முன் 31 ஆண்டுகள் அதே அமைப்பில் அனுபவம் பெற்றவர்.அவரது உளவுத்துறைப் பயணம் தற்செயலானது. செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம், பிறகு தபால் துறையில் பணி, அதன் பிறகு ‘ரா’வின் உயர் மட்ட அதிகாரியுடனான ஒரு நேர்காணல் – அதன் பிறகு நடந்தது அனைத்தும் ‘ரகசியம்’.

தற்போது ஓய்வு பெற்று 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சூட் ஒரு எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.

அவரது சமீபத்திய நூலான ‘Great Power Games: From Western Decline to Eastern Ascent’ (அக்டோபர் 2025), அவரது முந்தைய நூல்களான The Unending Game (2018) மற்றும் The Ultimate Goal (2020) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு முழுமையான தேடலை நிறைவு செய்கிறது. உளவுத்துறையின் செயல்பாடுகள், கதையாடல் போர் (Narrative Warfare), மற்றும் உலக அதிகார மாற்றங்கள் என அவரது சிந்தனைத் தடம் விரிவடைகிறது.

ஜனவரி 16 அன்று ஸ்வராஜ்யா குழுவினருடன் (தீக்ஷா யாதவ், பிரகர் குப்தா மற்றும் அன்மோல்) அவர் உரையாடினார். மங்களூரு இலக்கிய விழாவில் அவர் பாகிஸ்தானை “அணு ஆயுதம் கொண்ட பனானா ரிபப்ளிக்” என்று விமர்சித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

அதிகாரத்தின் நிழல்கள்: முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவர் விக்ரம் சூட்டின் உலகளாவிய பார்வைகள்

பகுதி 1

1. போர்களின் லாபம் மற்றும் அமைதியின் விலை….

உலகம் இப்போது மிகவும் குழப்பமாக இருப்பதாக உரையாடலின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போது, சூட் மிகவும் நிதானமாகப் பதிலளித்தார். “இது இவ்வளவு குழப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறிவிட்டு ஒரு நிமிடம் நிறுத்தினார்.

அவரது மையக் கருத்து மிகவும் கடுமையானது: “போர்கள் லாபகரமானவை. அமைதி….? இல்லவே இல்லை. நோய்வாய்ப்படுவது லாபகரமானது, ஆனால் நல்ல ஆரோக்கியம் லாபகரமானது அல்ல.” இதுதான் சூட்டின் பாணி; எளிய வார்த்தைகளில் சொல்லப்படும் மிக ஆழமான உண்மைகள்.

“மேற்குலகு கார்ப்பரேட் பாணியில் வளர்ந்தது.

ராக்ஃபெல்லர்ஸ், கார்னகிஸ், ஜே.பி. மோர்கன் போன்ற கார்ப்பரேட்டுகள்தான் அமெரிக்காவை ஒரு வல்லரசாக மாற்றினார்கள். சோவியத் மாடல் என்பது அரசு சார்ந்தது. நாம் அதன் இடையில் சிக்கிக்கொண்டோம், அதனால் தேக்கமடைந்தோம்,” என்று ஒரு சிறு புன்னகையுடன் கூறுகிறார்.

“நாம் ஒரு கலப்புப் பொருளாதாரமாக (Mixed economy) இருக்க விரும்பினோமா என்பது தெரியவில்லை, ஆனால் கடைசியில் குழப்பமான பொருளாதாரமாக (Mixed-up economy) மாறிவிட்டோம்.”

சீனாவைப் பற்றி அவர் கூறும்போது, “சீனா பணக்கார நாடாக மாறினால் தானாகவே ஜனநாயகம் வந்துவிடும் என்று மேற்குலகம் நினைத்தது.

ஆனால் உண்மையில் அவர்கள் கூலி மற்றும் வேலை நேரக் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு நாட்டில் இருந்து மலிவான பொருட்களைத் தேடிச் சென்றனர். உலகிற்கு மலிவான பொருட்களை வழங்க அடிமை உழைப்பை (Slave labour) அவர்கள் பயன்படுத்தினர்.

இதன் விளைவாக, அமெரிக்கா வெறும் மென்பொருள் மற்றும் சமூக நலன் சார்ந்த நாடாக மாறியது, சீனா உற்பத்தியைக் கைப்பற்றியது,” என்கிறார்.

அவரது கருத்துப்படி: “சொந்த நாட்டில் உற்பத்தியைத் தொடங்காத வரை நீங்கள் உண்மையான வல்லரசாக முடியாது.”

2. கதையாடல் போர் (Narrative Warfare):

ஈராக் முதல் உக்ரைன் வரை

அதிகாரத்தைப் பிடிப்பதற்கு உற்பத்தி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ‘கதையாடல்களை’ (Narratives) உருவாக்குவது. இதற்கு ஈராக் போரை அவர் உதாரணமாகக் காட்டுகிறார். 9/11 தாக்குதலுக்குப் பிறகு, டொனால்ட் ரம்ஸ்பீல்டுக்கு அல்கொய்தாவைப் பற்றித் தெரிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை,

அவருக்கு ஈராக்கைப் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டன. சதாம் உசைனுக்கும் அந்தத் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என்றாலும், ‘பேரழிவு ஆயுதங்கள்’ (WMD) மற்றும் ‘பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்’ என்ற பொய்க் கதைகள் உலகிற்கு விற்கப்பட்டன.

உண்மையான காரணம் என்ன?

சதாம் உசைன் எண்ணெய்க்கான விலையை டாலருக்குப் பதில் யூரோவில் நிர்ணயிக்கத் தொடங்கினார். மே மாதத்திற்குள் அது சரிசெய்யப்பட்டது. ஜார்ஜ் புஷ் கப்பலில் ஏறி ‘பணி முடிந்தது’ (Mission accomplished) என்று அறிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போரைப் பற்றிப் பேசும்போது சூட் விவரிப்பதில்லை, மாறாகக் கேள்விகளை எழுப்புகிறார்: “உக்ரைன் நேட்டோவில் சேர்க்கப்பட்டதா? இல்லை.

உக்ரைன் ரஷ்யர்களைப் பின்னுக்குத் தள்ளியதா? இல்லை. ஐரோப்பியர்கள் தங்கள் வீரர்களை அனுப்பினார்களா? இல்லை. ரஷ்யா நிலப்பரப்பைக் கைப்பற்றியதா? ஆம்.

அவர்கள் அழுத்தங்களைத் தாங்கி நின்றார்களா? ஆம். அப்படியென்றால் ரஷ்யா ஜெயித்துவிட்டது என்றுதான் அர்த்தம். இது அறிவிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மட்டுமே.”

இந்த மோதலால் யாருக்கு லாபம்?

“யாருக்கு ஆயுதம் விற்கப்படுகிறது? அதை யார் பயன்படுத்துகிறார்கள்? அதை மீண்டும் நிரப்புவது யார்? இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால், உண்மை விளங்கும்.” அந்தப் பதில் அமெரிக்கா என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

3. அமெரிக்காவின் ‘டீப் ஸ்டேட்’ (Deep State)

அமெரிக்க மக்களுக்கும், சூட், ‘வால் ஸ்ட்ரீட் வெளியுறவுத் துறை’ (Wall Street State Department) என்று அழைக்கும் ஒரு குழுவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இது பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற நலன்களின் ஒரு பிணைப்பு.

இதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் தாண்டி கொள்கைகளை உருவாக்குகிறது. இதையே அவர் ‘டீப் ஸ்டேட்’ என்கிறார். இது ஒரு சதித்திட்டம் அல்ல, அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விளக்கம்.

“உக்ரைன் என்பது ரஷ்யாவுக்கு ஒருபோதும் நுழையக் கூடாத பகுதி (Nyet-Nyet) என்று சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் முன்பே எச்சரித்தார். ஆனால் அதிகாரம் தலைக்கேறிய போது, ரஷ்யாவை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நினைத்தார்கள். இன்று ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், அவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் அல்ல,

ஆனால் லாபம் அமெரிக்காவினுடையது.”

4. ஈரான், வங்கதேசம் மற்றும் ‘தோட்டமிட்ட’ போராட்டங்கள் ….

ஈரானில் நடக்கும் போராட்டங்கள் குறித்துப் பேசும்போது, இந்தியா யாரை விரும்பும் என்ற கேள்விக்கு, “இந்தியாவின் விருப்பத்திற்கு இங்கு வேலையில்லை. அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுடன் நாம் பழக வேண்டும். அமெரிக்கா தனது தேசிய நலனை மட்டுமே பார்க்கிறது, இன்று அவர்களின் நலன்கள் ஏகாதிபத்தியமாக உள்ளன,” என்கிறார்.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை, ஷேக் ஹசீனா தனது கட்டுப்பாட்டை இழந்ததாக அவர் கருதுகிறார். ஆனால் ஒரு வரலாற்றுச் செய்தியை அவர் நினைவுபடுத்துகிறார்:

“ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக்கின் ஆரம்ப கால பெயர் ‘முஸ்லீம் அவாமி லீக்’. உருதுவைத் தேசிய மொழியாக அறிவித்ததற்கு எதிராகத்தான் அவர்கள் முதல் போராட்டத்தைத் தொடங்கினர். அதன் பிறகே அவர் கட்சியை மதச்சார்பற்றதாக மாற்றினார்.”

போராட்டங்களின் தன்மையைப் பற்றி அவர் கூறுகையில், “எந்தப் போராட்டமும் தானாக உருவாவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன. அதற்கு ஒரு நிதி, ஒரு அமைப்பு மற்றும் ஒரு திட்டம் இருக்க வேண்டும்.” (நன்றிகள் பல – இதனைப் படைத்த – திரு டி.கே.எல்.ஸ்ரீராம் அவர்களுக்கு … )

நாளை தொடரும்…….( பகுதி-2-ல் )

………………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!!

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார் ஓரு மத்திய அமைச்சர். ’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார் ஒரு பெண் எம்.பி. ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார் இன்னொரு அரசியல்வாதி … இன்னும் சிலர் -நேரு நினைவு அருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர் …. நாடாளுமன்றத்திலும் வாய்ப்பு கிடைக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று. பாசமலர்…..திரைப்படம். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இந்தப் பாடலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………………….. $400 பில்லியன் ‘சூப்பர்மேன்’ விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்… அமெரிக்காவின் பெருமை, ‘அசைக்க முடியாத சக்தி’, ‘எதிரி கண்களுக்குத் தெரியாத மாயாவி’ என வர்ணிக்கப்பட்ட எஃப்-35 (F-35) போர் விமானத்தின் பிம்பம், ஈரான் வான்பரப்பில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது.. சுமார் 30 ஆண்டுகால உழைப்பு, 400 பில்லியன் டாலர் முதலீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரமலான் வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………….. இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும் – இந்த வலைத்தளத்தின் சார்பிலும்,என் சார்பிலும், உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!!

This gallery contains 2 photos.

………………………………………………………. ………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக