— உள்ளுணர்வா …அறிவியலா …??? எது சரி .. ???

……………………………………..

……………………………………..

ஒருமுறை சார்லஸ் டார்வினுக்கும் அவர் நண்பருக்கும் ஒரு பெரிய விவாதம்……

உள்ளுணர்வா அறிவியலா??? என்பது அந்த விவாதம்…..

அறிவியல் தான் என்றார் டார்வின் – உள்ளுணர்வு தான் என்றார் நண்பர்…..

இவ்விவாதம் நடைபெற்றது ஒரு மிருகக்காட்சி சாலையில்……

…………..

அவர்கள் நடந்துக்கொண்டே தீவிரமாக விவாதிக்கொண்டே வருகையில்

கண்ணாடியால் ஆன ஒரு பாம்புக் கூண்டு வந்தது……அக்கூண்டில் கடுமையான விஷம் கொண்ட பாம்பு இருந்தது……

அக்கண்ணாடியில் தன் கன்னத்தை வைக்கச் சொன்னார் டார்வினின் நண்பர்……

டார்வின் கன்னத்தை வைத்தார்…..

உடனே அந்த பாம்பு ஓடிவந்து டார்வினின் கன்னத்தில் கொத்தியது…..

டார்வின் விருட்டென தன்முகத்தை எடுத்துக்கொண்டார்……

நண்பர் சிரித்தார்……

………………………….

“டார்வின் அவர்களே இந்த கனமானக் கண்ணாடியைத் தாண்டி பாம்பு உங்களை கொத்த முடியாது என்பது அறிவியல் உண்மை…..அது உங்களுக்கும் தெரியும்…..ஆனாலும் முகத்தை சட்டென எடுத்தீர்களே ஏன்???

உள்ளுணர்வு தானே காரணம்???”

என்றார் நண்பர்……

டார்வினும் ஆமோதிக்கும் வகையில் சிரித்தார்…….

…………………………………………….

எப்போதுமே உள்ளுணர்வு தனக்கான எளிமையான பாதையைத் தான் தேர்ந்தெடுக்கும்……

அதாவது கண்ணாடிக் கடினமானது. அது விஷப்பாம்பின் கடியை எதிர்க்கும் வல்லமையுடையது என்பதைவிட –

முகத்தை கண்ணாடியை விட்டு எடுத்து விட்டால், எளிதில் தப்பிக்கலாம் என்பது தான் உள்ளுணர்வு சொல்லும் பாடம்……

இதனாலேயே அறிவியலை அவ்வளவு எளிதில் உள்ளே அனுமதிக்காது உள்ளுணர்வு……

அதாவது உங்கள் வீட்டின் அருகே ஒரு சுபநிகழ்ச்சி….80டெசிபலில் பாட்டுப் போடுகிறார்கள்……நீங்கள் அதனைக் கேட்டுப் பழகுகிறீர்கள்……இரவு முழுக்க அந்த டெசிபலில் பாடல் ஓடினாலும் உங்கள் உள்ளுணர்வு இது ஆபத்தான ஒலியல்ல என்பதை உணர ஆரம்பித்து உங்களை உறங்க வைக்கும்…..நீங்களும் அந்த ஒலியின் சத்தத்திலும் உறங்கிவிடுவீர்கள்……

ஆனால் நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது அதே டெசிபலில் –

தூக்கத்தின் இடையில் பாட்டுப்போட்டால் திடீரென எழுந்துக்கொள்வீர்கள்…… அறிவியல்படி அதே டெசிபல் தான்…..ஆனால் திடீரென வருவதால் உங்கள் உள்ளுணர்வு உங்களை எச்சரிக்கிறது……

………………………………

இந்த எச்சரிக்கை உணர்வு தான் அக்காலங்களில் வேட்டை விலங்குகளில் இருந்து

நம்மைப் பாதுகாத்தது……

பாதுகாத்தும் வருகிறது…….

அதாவது ஒரு நான்கு பேர் பதற்றமாக ஓடிவருகிறார்கள்……

என்ன என்று நீங்கள் கேட்கும் போது

“புலி வருகிறது ஓடு”

என்றுவிட்டு ஓடுகிறார்கள்……

உடனே நீங்களும் ஓடுவீர்கள்……

வருவது ஆண் புலியா பெண் புலியா அல்லது குட்டியா ….??? நம்மால் சமாளிக்க முடியுமா???

நம் பகுதியில் புலி வாழ்கிறதா … ???

என்று அறிவியல்பூர்வமாக கணக்குப்போட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள்…….

ஏனெனில் அவர்களுடன் ஓடினால் பாதுகாப்பு என்று உள்ளுணர்வு நமக்கு சொல்லும்…….

இது என்னவகையான நம்பிக்கை….???

மூடநம்பிக்கையா … ???

…………………………….

இல்லை – இது தான் உள்ளுணர்வின் ஆதிக்கம்…….

ஆனால் பிறகு உள்ளுணர்வு அறிவியலுடன் தொடர்புக்கொண்டு நடத்தையை சீர்செய்ய ஆரம்பிக்கும்……..

இந்த உள்ளுணர்வீன் அதீத ஆதிக்கம் தான் –

108 தடவை அங்கபிரதட்சனம் செய்தால் பாஸாகிவிடலாம் என்பது போன்ற நம்பிக்கைகள்……..

ஏனென்றால் உள்ளுணர்வு எப்போதும் எளிய பாதையைத் தான் தீர்மானிக்கும்…….

ஆனால் அதன்பிறகும் – அறிவியலை ஏற்காமல் இருப்பதன் பெயர் தான் மூடநம்நம்பிக்கை ஆகும்……

அந்த வகையில் பல விஞ்ஞானிகள் கூட மூடநம்பிக்கையாளர்கள் தான்…..!!! (உதவி – வலைத்தளம்…. )

……………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சந்தோஷப்பட்டு விடாதே – இடையில் எவனாவது தட்டி விடுவான் …..60 வருடங்களுக்கு முன், சிவகுமார் கற்றுக்கொண்ட முதல் பாடம் … !!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………. 1964 ஜூலை 22-ம் தேதி ஏவிஎம்மில் முதன்முதலாக மேக் அப் டெஸ்ட். ஸ்டுடியோவுக்குள் செல்ல கொஞ்சம் கெளரவமான உடை இருக்க வேண்டும் என்று எழும்பூர் நெடுஞ்சாலை சிக்னலிலிருந்து மேற்காகச் செல்லும் கெங்குரெட்டி ரோடில் GAYLORD என்ற தையல் கடையை வக்கீல் நண்பர் பாலா பழனூர் அறிமுகம் செய்து வைத்தார். ‘லாங்கிளாத்’-தில் வெள்ளை முழுக்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மா உணவகம் – இன்றைய நிலை ….

This gallery contains 6 photos.

………………………………….. ………………………………………….. …………………………………………. ……………………………………. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு அபூர்வ மனிதரின் பேட்டி – ” நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். அதுலே பெருமைப்படுகிறேன், அதைப் பற்றி எனக்கு – கர்வமும், ஒருவித தலைக்கனமும் கூட உண்டு….”

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. `தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்புகளை ஏற்றுள்ளதோடு, அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் சந்திரபாபு. அதுமட்டுமல்ல, நடன ஆசிரியராகவும், பின்னணிப் பாடகராகவும் பணிபுரிந்திருக்கிறார். இதுவரை யாருமே செய்யத் துணிந்திராத ஒரு பெரும் சாதனைதான் இது. இந்தப் படத்தில் ஊமையாக வரும் சந்திரபாபுவின் உணர்ச்சி மிக்க நடிப்பைப் பார்த்த பிறகு, இந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் – ( அஜயன் பாலா சிறுகதை … )

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………….. ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள் ஊஞ்சல்கட்டிக்கொண்டது. பண்டிகைக்காலஙகளுக்கென்றே முளைக்கும் விசேஷ றெக்கை இப்போதே துளிர்விட்டது போல கண்ணாடியை எடுத்து ஜன்னலருகே கொண்டுவந்து வைத்து தன் முகத்தை பார்த்தாள். கன்னத்தில் மினுக்கம் கூடி சிமிட்டியது. கண்ணாடியில் தனக்கு தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துன்பம் நேர்கையில் ………..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூடஇந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியைபெறவில்லை… ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலைபடத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாரதிதாசனின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

SP வேலுமணி பின்வாங்கிய பின்னணி, விஜயபாஸ்கர் எடுக்கப் போகும் முடிவு – புகழேந்தி பேட்டி ….

This gallery contains 2 photos.

……………………………………………….. ………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக