புத்தரின் கடைசி நாள் …..!!!

………………………………………………

…………………………………………………

……………………………………………….

அவர் தம் சீடர்கள் அனைவரையும் அழைத்தார்…

புத்தர் இறந்த போது இது நிகழ்ந்தது…

ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்களிடம் பேசும்போது வழக்கமாக அழைப்பதைப் போலவே அழைத்தார்….

அவர்கள் எல்லாரும் கூடினார்கள்… அப்போது அவரது மரணம் குறித்து அவர்களில் எவரும் சிந்தித்தும் பார்க்கவில்லை….

அப்போது புத்தர் சொன்னார்…

“இதுதான் உங்களுக்கு என் கடைசி போதனை.. உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய யாவற்றையும் சொல்லிவிட்டிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக உங்களிடம் நான் பேசி வந்திருக்கிறேன்… என் முழு இதயத்தையும் உங்களிடம் திறந்து ஊற்றி யிருக்கிறேன்….

இப்போது, யாருக்காவது ஏதாவது கேள்வி கேட்பதற்கு மிச்சம் இருந்தால் அவர் அதைக் கேட்டுக்கொள்ளலாம்..

ஏனெனில் இதுதான் என் வாழ்வின் கடைசிநாள். இன்றுநான் அக்கரைக்குக் கிளம்புகிறேன்…

என் படகு வந்துவிட்டது…”

அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்… தினசரி பேருரையைக் கேட்பதற்காகத்தான் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் சாகப்போகிறார்.. சாவதைக் குறித்து துளியும் அலட்டிக் கொள்ளாமல் போகப்போகிறார் என்பதை அவர்கள் நினைத்தும் இருக்கவில்லை…

அது வெறுமனே ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்தது…

“எனது படகு இக்கரை சேர்ந்திருக்கிறது. நான் புறப்பட்டாக வேண்டும் ஏதாவது கேள்வி விட்டுப் போயிருந்தால் இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டால் போதும்… நான் உங்களுக்குள்… என்னிடம் இப்போது கேட்காவிட்டால் இனி எப்போதும் நான் உங்களுக்குக் கிடைக்கமாட்டேன்….

பின் அந்தக் கேள்வி உங்களிடம் அப்படியே தங்கி விடும்…

எனவே தயவுசெய்து, அன்புகூர்ந்து கேளுங்கள் தயக்கம் கொள்ளாதீர்கள்” என்ற சாதாரண அறிவிப்பாகவே அது இருந்தது….

அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்…

புத்தர் சொன்னார்…

“இந்த அபத்தத்தை எல்லாம் நிறுத்துங்கள்… அழுது புலம்புவதில் வீணாக்குவதற்கு இப்போது நேரம் இல்லை.. ஏதாவது கேட்பதற்கு இருந்தால் கேளுங்கள்… இல்லாவிட்டால் நான் போகிறேன். நேரம் வந்துவிட்டது… இனியும் நான் தாமதிப்பது முடியாது.”

அவர்கள் சொன்னார்கள்…

“நாங்கள் கேட்பதற்கு ஒன்றுமில்லை நாங்களாக கேட்டிருக்கக் கூடியதை விடவும் அதிகமாகவே நீங்கள் தந்திருக்கிறீர்கள்..

நாங்கள் கேட்ட, எங்களால் கேட்க முடிந்திருக்கக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்திருக்கிறீர்கள்..

இனிவரும் நூற்றாண்டுகளிலும் உண்மையைத் தேடப்போகும் எல்லாவிதமானவைகளுக்கும் நிறைவளிக்கும் பதில்களை நீங்கள் அளித்துவிட்டீர்கள்..”

அதற்கு புத்தர் சொன்னார், “அப்படியானால் உங்களிடம் நான் விடைபெறுகிறேன்.. வாழ்த்துக்கள்..”

பின் அவர் தன் கண்களை மூடினார்… பத்மாசனத்தில் அமர்ந்தார்…

அக்கரை நோக்கிப் போக ஆரம்பித்தார்…

முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்….

இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்….

மூன்றாவதாக தன் இதயத்தை விட்டு நீங்கினார்….

நான்காவதாக தன் ஆன்மாவை விட்டு நீங்கினார்….

எவ்வளவோ அமைதியாக, சமாதானமாக, ஆனந்தமாக அவர் பிரபஞ்சத்துள் மறைந்தார்….

பறவைகள் இன்னிசை பாடிக் கொண்டிருந்தன…

அதிகாலை ஆகி இருந்தது…

சூரியன் இன்னமும் அடிவானத்தில்தான் இருந்தான்….

அவ்வளவு இனிமையான ஒரு முறையில் புத்தர் இறந்து கொண்டிருந்ததை பத்தாயிரம் சந்நியாசிகளும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்…

சாவைப்பற்றி எப்போதும் அவர்கள் கருதி வந்திருந்த விதமாக அங்கு எதுவும் நிகழவில்லை….

அது அத்தகைய அசாதாரணமான ஒரு அனுபவமாக இருந்தது….

ஏராளமான தியான ஆற்றல் அப்போது வெளியாகியது….

அதில் அன்றே அக்கணமே ஏராளமானவர்கள் ஞானநிலை அடைந்தார்கள்….

விளிம்பு வரைக்கும் வந்துவிட்டவர்கள் அப்படியே அறியாததுக்குள் தள்ளப்பட்டார்கள்…

புத்தரின் அழகான மரணத்தின் மூலமாக ஆயிரக் கணக்கானோர் ஞானநிலை அடைந்தார்கள்….

அதை நாங்கள் ‘சாவு’ என்பதில்லை. ‘மகாபரிநிர்வாணம்’ என்றே அழைக்கின்றோம்….

பனிக்கட்டியானது உருகி சமுத்திரத்துடன் கலந்து விடுவது போல அவர் முழுமைக்குள் கலந்துவிட்டதை அவ்வாறு குறிப்பிடுகிறோம்…

அவர் தியானத்தில் வாழ்ந்தார்…. தியானத்தில் மறைந்தார்….!!!

— ஓஷோ

………………………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொந்தளிக்கும், கொதிக்கும் – இளைஞர் கூட்டம் …. !!! – இது எங்கே போய் முடியும் … ???

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நடுக்கடலில் – பேய்க் கப்பல் –

This gallery contains 1 photo.

……………………….. …………………………. நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்…. !!!! 1872-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மேரி செலஸ்டி – கப்பல், இத்தாலியின் ஜெனோவாவுக்கு 1,700 பீப்பாய்கள் மதுபானங்களுடன் புறப்பட்டது. கப்பலில் கேப்டன் பெஞ்சமின் பிரிக்ஸ் (Benjamin Briggs), அவரது மனைவி, மகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 10 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆசைமுகம் – ( பெருமாள் முருகன் சிறுகதை )

This gallery contains 1 photo.

……………………………………………………. ………………………………………………. சரஸ்வதி எதையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. காதுகளில் துண்டு துண்டாக விழுந்தவற்றை வைத்து ஊகம் செய்தாள். ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் அர்விந்த் சுவாமியைப் பற்றிய செய்தி, பேட்டி அல்லது எதுவோ வந்திருக்கிறது. அதில் ஒரு வரி படிப்பதும் சரஸ்வதியை ஒரு பார்வை பார்ப்பதும், பின் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு சிறு சத்தத்தோடு சிரிப்பதுமாக இருந்தனர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1870-களில் ஸ்ரீரங்கமும், மதுரையும் …..அழகான பழைய புகைப்படங்கள் …!!!

This gallery contains 4 photos.

……………………………………. ………………………………………… 1870–1890 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படம், திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலின் ராஜகோபுரங்களில் ஒன்றை அதன் முழுக் கம்பீரத்துடன் பதிவு செய்கிறது. கோபுரத்தை நோக்கிச் செல்லும் தெருவின் இருபுறமும் ஓலைக்கூரை வீடுகள், பக்தர்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் இயல்பான காட்சிகள், ஆன்மிகமும் சமூக வாழ்வும் எவ்வாறு ஒன்றிணைந்திருந்தன என்பதை அழகாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொள்ளை அடித்தவர்களையே போட்டுக் கொடுத்த ஒரு வித்தியாசமான கொள்ளை ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………… சிபி-சிஐடி தனது தீவிர விசாரணையை துவங்கியவுடன் ,கொள்ளை, கொள்ளை என்று கூக்குரலிட்ட கயவர்களின் கொட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்த கொள்ளை பூதமே பங்காளிகள் அனைவரையும் ஒவ்வொருவராக காட்டிக்கொடுக்கத் துவங்கி விட்டது. 100 கோடி மதிப்புள்ள பழனி கோவில் நிலத்தை கொள்ளையடிக்க முயன்ற தவெக அறநிலையத்துறை அமைச்சர் – என்று குற்றம் சாட்டி, விஜய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” இந்திய ‘டிஎன்ஏ’ என்னுள் இருக்கிறது “… என்று இந்தோனேசியா பிரதமர் சொன்னது கொஞ்சம் தவறு ….ஏனென்றால் …???

This gallery contains 4 photos.

……………………………. ………………………………. ………………………………. ……………………………… அண்மையில், நமது பிரதமர் இந்தோனேஷியா சென்றபோது, அந்நாட்டின் பிரதமர் ” இந்திய டிஎன்ஏ ” என்னில் கலந்திருக்கிறது” என்று சொன்னார்… கூடவே ” என்னில் மட்டுமல்ல…. இந்தோனேஷிய மக்கள் பலரினுள்ளும் கலந்திருக்கிறது ” என்று பெருமையுடன் சொன்னார் … அவர் சொன்னதில் தவறில்லை…. ஆனால், ” பண்டைத் தமிழர்களின் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்