……………………………………..

………………………………………..
அறப்போர் இயக்கத்தின் அறிக்கையொன்று கீழே –
…………………..
அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.
ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd படித்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் PTR அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது E Tender கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் 25 லட்ச ரூபாய்க்கு மேலாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் விடப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.
இதனால் பாக்ஸ் டெண்டர் மூலம் கமிஷன் வாங்கி டெண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பிழைப்பில் மண் விழுந்தது. PTR அவர்களின் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.
டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுவதால் அதை அனைவரும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. அப்படி பார்த்ததால் தான் திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க ஒப்பந்ததாரர்களை செட் செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து ஊழல் செய்ததை அறப்போர் இயக்கத்தால் கண்டுபிடிக்க முடிந்தது.
இன்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் CBI விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது.
E டெண்டர்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களும் டெண்டர்களில் கலந்து கொள்ள் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கமிஷன் கொடுக்க விருப்பம் இல்லாத ஒப்பந்ததாரர்களும் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது.
என்ன நம்ம பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்களே என்று ஊழல்வாதிகள் அடங்கி போகவில்லை. புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலத்தில் அவசரமாக சில பொருட்கள் வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Limitted Tender வழிமுறையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே limitted tender கொடுக்க முடியும் என்பதால் கடந்த திமுக ஆட்சி முடிவடையும் காலம் துவங்கி பல்வேறு limitted டெண்டர்கள் சென்னை மாநகராட்சியால் போடப்படுகின்றன. இது தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற துவங்கியது.
அப்படித்தான் பெருங்குடி குப்பை கிடங்குக்கு Excavator வாடகைக்கு எடுக்க சுமார் 50 லட்சம் வீதம் 6 Limitted டெண்டர்கள் போடப்படுகின்றன.
3 கோடி ரூபாய்க்கு 6 excavatorகள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று டெண்டர் போடப்பட்டு ஒரே நாளில் மூடப்படுகிறது.
இதை அறப்போர் இயக்கம் கண்டறிந்து புகார் அளித்தது. வாடகை எடுக்க கொடுத்த விலைக்கு புதிதாக excavatorகள் வாங்கிவிடலாமே என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி EE தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இனி மாநகராட்சியில் LImitted டெண்டர் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கை செய்தி வாயிலாக சொல்லி இருக்கிறார்.
இனி தமிழகத்தில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எந்த விதிமுறைகளையும் மீறாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான work order இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாக அங்கேயே இருக்கும் படி செய்ய வேண்டும்.
தற்பொழுது பெரும்பாலான work orderகள் மக்கள் பார்வைக்கே வைக்கப்படுவதில்லை. இதனால் என்ன வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை கூட மக்களால் அறிந்து கொள்ள் முடியவில்லை. வேலைகளில் முறைகேடு செய்வதற்காகவே work orderஐ திட்டமிட்டு ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள்.
தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே ஊழல் புகார்களுக்கு உரிய துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
We are Watching… அறப்போர் தொடரும்
……………………………………………………………………………………………………………………………………………….









//தவெக அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம். அதை ஏற்கனவே கூறிவிட்டேன்” எ// இப்படி திருமா எப்போது கூறினார்? ஒருவேளை அவர் வரும் வியாழனுக்குள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம்…