வெடித்துக் கிளம்பிய – எட்டு கோடி ரூபாய் ஊழல் … இந்த தடவையாவது அண்ணனை “கம்பி “எண்ண வைப்பார்களா … ???

………………………………………………………………………………………………………………………

( இவர்கள், கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாமல் – தமிழகத்தை – தமிழக மக்களைஎப்படி எல்லாம்
ஏமாற்றி சுரண்டி இருக்கிறார்கள்…???


தமிழக மக்களோ, இதை யெல்லாம் ஒன்றுமே
அறியாமல், சிலர் எடுத்துச் சொன்னதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் –

இவர்கள் தமிழகத்தை இத்தனை வருடங்களாக மொட்டையடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு மண்ணாந்தையாக இருந்திருக்கிறார்கள் …)

……………………………………………………………………………………………………………………….

ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை:

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் …!!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக FIR பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம்.

திமுக மாநாட்டிற்காக அரசு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு:

2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள “கலைஞர் திடல்” நிலத்தில் திமுக வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் திமுக வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எ.வ .குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது.

தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை.

ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஏரி கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதச் சாலை:

மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக, மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25, 2005 இல் புகார் அளித்தது, ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.

“கலைஞர் திடல்” நிலம் 124.56 ஏக்கர் நிலம்,

12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு ‘அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.

இந்நிலத்தை விற்பனை செய்த ‘ரிஷி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும்.

அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு – நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:

1. அமைச்சர் எ.வ. வேலு, எ.வ. குமரன், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா(BNS), கனிம வளங்கள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற சட்டங்களின் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.

நியாயமான விசாரணை நடத்தி மண் திருடிய அனைவருக்கும் ஊழல் செய்ததற்காக லஞ்ச ஒழிப்பு துறை தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

2. முறைகேடாக எடுக்கப்பட்ட கனிம வளங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும்.

…………………

……………………………………………………………………………………………………………………………………………….

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

— சரித்திரத்திலிருந்து ஒரு பகுதி — ராஜா மான்சிங் ….!!!

This gallery contains 2 photos.

……………………………………… ………………………………………… இந்திய – முகலாய வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி …. ……………………………… இந்தியாவின் இராஜபுதனத்திலுள்ள ஆம்பர் என்னும் நாட்டை ஆண்ட மன்னர்களுள் இராஜா பார்மல் (Raja Bharmal) என்பவர் முக்கியமானவர். இராஜா பார்மலின் மகன் பகவன் தாஸ் என்பவனாவான். பகவன் தாசின் மகனே மான்சிங் (Man Singh 1550-1614) ஆவார். பார்மல், சாங்கநர்(Sanganer) … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தூக்கில் இடப்படும் முன் புரட்சிவீரன் “பகத் சிங்” பிரிட்டிஷாரிடம் என்ன வரம் கேட்டார்…?

This gallery contains 1 photo.

……………………………………………………………………………………………….     …………………………………………………………………………………………………………………   சென்ற வாரம் சாவர்க்கர் பற்றிய ஒரு விவரமானகட்டுரை இந்த தளத்தில் வந்தது. அப்போதே நினைத்தேன்… சாவர்க்கருக்கும், பகத்சிங்குக்கும் உள்ள வித்தியாசத்தைப்பற்றியும் கொஞ்சம் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்று… சாவர்க்கர், தனது  பிற்காலத்தில் – பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியும்பிரிட்டிஷார் எதிர்பார்க்கும் விதத்தில், தான் நடந்துகொள்ளதயாராக இருப்பதாக தெரிவித்தும் கடிதம்  எழுதியவர்….. ————————————- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொடுமை, மகா கொடுமை …!!! பாவிகள் – மகா பாவிகள் …..

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………………………………… ‘என் மகனை யார் பார்த்துக்கொள்வார்?’: ஊடுருவல்காரர் எனக் சந்தேகிக்கப்பட்டு மும்பையில் கைது செய்யப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கப் பெண் – 40 வயதான ஷாஹிதா ஃபக்கீர் ஜூலை 18 அன்று மும்பையில், மார்க்கெட்டில் இருக்கும்போது – கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாகத் தனது குடும்பத்துடன் நவி மும்பையில் வசித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“அவன் காந்தியைப் பார்த்தது கிடையாது – ஆனாலும் “….!!! -அசோகமித்திரன் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………… ……………………………………………………………………………….. அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு  வெகு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

24-25-ல், திமுகவுக்கு வந்த 365 கோடி …!!! வந்ததை ஒப்புக்கொள்பவர்கள் கொடுத்தவர் யார் என்பதை மறைப்பது ஏன் … ???

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. ………………………………………………………………………………… News item from India Today – …….. the DMK, which topped the list with Rs 365.784 crore. More than 99 per cent of the donations received by the Trinamool Congress came through cheques and demand drafts, with … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிவாஜி’யின் சதாரம் தெருக்கூத்து …. நாம் பார்த்திராத காட்சி ….!!!

This gallery contains 1 photo.

1987…Sivaji performs for his family in the US……Nobody expected this…!!! ………………………………. ………………………………. 1987-ல் அமெரிக்கா சென்றிருந்த சிவாஜி ஒரு லேசான தருணத்தில், குடும்பத்தினரின் விருப்பத்திற்காக, சிறு வயதில், பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் தான் நடித்த சதாரம் நாடகத்தின் ஒரு சிறு சாம்பிளை குஷியாக செய்து காட்டியதை, அவரது தம்பி சண்முகத்தின் மகன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக