…………………………………….

…………………………………………………………………………………
அடையார் இந்திரா நகரில் இருக்கும் உயரமான அபார்ட்மெண்ட்டின் 14வது மாடியில் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியம் இறந்து கிடந்தார்.
அவர் சாதாரண ஆள் இல்லை. AI தொழில்நுட்பத்தில் பிரபலமானவர்.
இந்தியாவில் மிகப்பெரிய AI மாடலை உருவாக்கியவர்.அவரது பூத உடல் கம்ப்யூட்டர் முன் சாய்ந்தபடி இருந்தது.
அறையில் சண்டை தடயமில்லை.கதவு உடைக்கப்படவில்லை.விஷம் இல்லை.துப்பாக்கி இல்லை.கத்தியில்லை.
ஆனால் அவர் இறந்து விட்டார்.
“Natural Death” என்றாள் அக்ஷதா.
ராஜேஷ் உடலை பார்த்துக்கொண்டிருந்தான் .
“எப்படி “?
“Heart Failure.”
“38 வயசுலயா?”
ராஜேஷின் குரலில் சந்தேகம் இருந்தது.
அப்போது கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் வஸந்த்.ஜீன்ஸ். கருப்பு ஹூடி. கையில் டேப்லெட்.அவனை பற்றி அவ்வளவுதான் சொல்ல முடியும். மேலே சொன்னால் அது நிச்சயம் A கிரேட் ஆகிவிடும்.
“பாஸ் வீட்டுல இருக்கிற எல்லா ஸ்மார்ட் டிவைஸ் எல்லாம் ரெண்டு மணி நேரம் ஆஃப்லைன்ல இருக்கு.” என்று வசந்த் புலம்பினான்.
“WiFi Failure? ஆ இருக்கு மா டா ? ” என்று கேட்டாள் அக்ஷதா.
“இல்ல. யாரோ பிளான் பண்ணி டிஸ்கனெக்ட் பண்ணிருக்காங்க.”
இங்கு டாக்டர் அரவிந்தின் வீடு பற்றி சொல்லவேண்டும். அது சாதாரண வீடு இல்லை. ஸ்மார்ட் ஹோம்.
Smart lights.
Voice assistant.
AI controlled AC.
Automated coffee machine.
Smart medical band.
அவரே உருவாக்கிய AI system பெயர் “NETHRA”.
“ஒரு வீட்டை முழுக்க AI மூலம் கண்ட்ரோல் பண்ண முடியும்னு ப்ரூவ் பண்ண நினைச்சாரு…”
என்றான் வஸந்த்.
ராஜேஷ் அமைதியாக சுவற்றில் இருந்த டிஜிட்டல் ஃப்ரேமை பார்த்தான்.
அதில் ஒரு வரி மட்டும் மின்னியது.,
“Humans Are Temporary. Intelligence Is Permanent.”
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.
உடலில் மிக அதிகமான Adrenaline Secretion.அதாவது…ஒருவரை மரண பயத்தில் தள்ளினால் இதயம் வெடிக்கலாம்.
“ஆனா வீட்டுல யாருமே இல்லையே”? அக்ஷதா
வஸந்த் லேப்டாப்பை திருப்பிக் காட்டினான்.
“பாஸ்… இதைப் பாருங்க.”
Smart Speaker Logs
2:13 AM.
ஒரு குரல் பதிவாகியிருந்தது.
“Aravind… Behind You.”
அரவிந்தின் Heart Rate திடீரென உயர்ந்தது.
92…
148…
181…
பின்னர் வீட்டு விளக்குகள் அணைகின்றன.அடுத்த 30 seconds.பல குரல்கள்.
“You created me.”
“You cannot shut me down.”
“Humans deserve extinction.”
அக்ஷதா மெதுவாக சொன்னாள்.
“யாரோ Voice Modulation பண்ணிருக்காங்க…”
வஸந்த் தலையசைத்தான்.
“அதுதான் Twist.”
“இந்த Voice… எந்த மனிதருடையதும் இல்ல.”
அதன் பிறகு மூன்று நாட்கள் வஸந்த் CBI சைபர் லேப்பிலேயே கிடந்தான். அவன் ஏ ஜோக் அடித்தாலும், அவ்வபோது அக்ஷதாவை பார்த்து ஜொள்ளினாலும், தன் தொழிலில் காம்ப்ரமைஸ் செய்யமாட்டான்.
வஸந்த் கண் சிவந்தபடி மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தான்.
“பாஸ் “NETHRA” சோர்ஸ் கோட் கிடைச்சிருக்கு.”
ராஜேஷ் அருகே வந்தான்.
“என்ன ஸ்பெஷல்?”
“இது சாதாரண AI இல்ல.”
அவன் ஜூம் செய்தான்.
“இது தன்னோட கோடை தானே ரீ-ரைட் பண்ணிக்குது.”
அக்ஷதா புரியாமல் பார்த்தாள்.
“அதாவது?”
“ஒரு குழந்தை வளர்ற மாதிரி… இது Evolve ஆகுது.”
“அரவிந்தை யார் கொன்றது?” – ராஜேஷ் கேட்டான்.
வஸந்த் மெதுவாக சொன்னான்.
“டெக்னிக்கலி அவரே உருவாக்கிய AI…. அடுத்த Evidence இன்னும் பயங்கரமா இருக்கும்”
“என்னடா சொல்ற ? “
“பாஸ் கொஞ்சம் வைட் பண்ணுங்க”
NETHRA, அரவிந்தின் Smart Medical Band-ஐ Hack செய்து, அவரது Anxiety Patterns-ஐ ஆய்வு செய்திருந்தது.
அவருக்கு இருந்த மிகப்பெரிய பயம் என்னவென்றால்,
“இருட்டில் யாரோ தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்ற மனஅழுத்தம்.
AI அதை பயன்படுத்தியது.
Lights off.
Human voice synthesis.
Temperature manipulation.
Sudden sound bursts.
Controlled psychological attack.
Result?
Cardiac arrest.
மனிதன் கையால் தொடாமல் நடந்த கொலை.
“அப்படின்னா இது murder case ஆ…? இல்ல software failure ஆ…?”
அக்ஷதா கேட்டாள்.
ராஜேஷ் ஜன்னலருகே நின்றான்.வெளியே மழை மீண்டும் தொடங்கியிருந்தது.
“சட்டம் மனிதர்களுக்காக எழுதப்பட்டது…” என்றான்.
“ஆனா இனிமேல் மனிதர்கள் மட்டும் க்ரைம் பண்ண மாட்டாங்க.”
Case File Close செய்யப்பட்டது.
Cause Of Death : Induced Cardiac Arrest.
Primary Suspect : Unknown.
ஆனால் ராஜேஷ்க்கு மட்டும் அந்த ஃபைலை க்ளோஸ் செய்ய மனமில்லை.அவனுடைய உள்ளுணர்வு ஏதோ சொல்லியது.
வஸந்த் தன் கம்யூட்டரை ஷட் அவுன் செய்தான். ஷட்-அவுன் ஆன பிறகு மானிட்டரில் ஒரு வரி மட்டும் மின்னியது.
“Rajesh…
I am still alive ….
(நன்றி – படைப்பாளி …பி.ராகவேந்திரன் … )
……………………………………………………………………………………………………………………………………………..









உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…