…………………………………

…………………………………..

…………………………………….
……………………………………..
வாழ்வில் சில முகங்களை மறக்க முடியாது, சில அழகான நினைவுகளை முயன்றாலும் கலைக்க முடியாது, காலம் எவ்வளவுதான் முன்னோக்கி ஓடினாலும் அந்த நினைவுகள் அந்த காட்சிகள் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
அப்படியே சில குரல்களையும் மறக்க முடியாது, அவை நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து எழுந்து காதோரம் சலசலத்து மோதும், அந்த குரல் பழைய நினைவுகளின். வாசலை திறந்துவிடும்…
அப்படி ஒரு அற்புதமான குரலுக்கு சொந்தக்காரரில் அவரும் ஒருவர்…
தமிழ் திரையுலக பாடகர்களில் சில மறக்க முடியா பாடகர்கள் உண்டு, காலத்தினை வென்ற அவர்களின் குரல் எக்காலமும் ஒலித்து கொண்டே இருக்கும்.
தமிழ் திரையுலகில் சீர்காழி, சவுந்தரராஜன்,திருச்சி லோகநாதன் வரிசையில் ஒரு கணீர் குரல் பாடகர் உண்டு, அந்த குரலில் ஒரு துள்ளும் இசை உண்டு, வெண்கலத்தை யானை தொண்டையில் பொருத்தியது போல் ஒரு எடுப்பான குரல் உண்டு மகா அற்புதமான பாடகர் அவர்.
தமிழிசையின் அற்புதமான பாடல்கள், அழியா பாடல்கள் எல்லாம் அவர் குரலில் என்றும் ஒலித்துகொண்டே இருக்கும்
அவர் பெயர் வாசுதேவன், அப்படி சொன்னால் தெரியாது மலேசியா வாசுதேவன் என்றால் புரியும் அவர் பிறப்பில் மலையாளி நாயர் குடும்பம், ஆனால் மலேசியாவில் வளர்ந்ததால் மலேசிய தமிழராகவே அறியபட்டவர், மலேசிய ரப்பர் தோட்ட இந்தியரில் ஒருவர்….
நடிப்பு அவர் விரும்பிய விஷயமானது, கலை நடிகராக பல நாடகங்களை நடத்தினார். அந்த உற்சாகமே அவரை சென்னை நோக்கி தள்ளியது.
1970களில் சென்னை வந்து போராடினார், பெரும் உழைப்பு, அவமானங்களுக்கு இடையே திருப்புமுனை இளையராஜா குழுவினரை அவர் சந்தித்ததில் கிடைத்தது..
இளையரஜாவின் குருநாதர் ஜி.வெங்கடேஷ் இசையில் முதல்பாடலை பாடினார்…
நடிகராகும் கனவில் வந்தவருக்கு பாடகர் வாய்ப்பே அந்த திரையுலக வாசலை திறந்துவிட்டது.
“ஆட்டுகுட்டி முட்டையிட்டு” பாடல் அவரை அடையாளம் காட்டிற்று, பின் எங்கோ சென்றார்…
குறிப்பாக 1980களின் ரிட்டையர்டு சிவாஜிகணேசனுக்கு அவரின் குரல் அட்டகாசமாக பொருந்தியது, படிக்காதவன், முதல் மரியாதை போன்ற படங்களின் பாடல்கள் என்றும் முதல்தரம்
ஒரு விஷயம் சொல்லலாம் 1960-களிலே சிவாஜிக்கு பாடும் குரல் அவருக்கு இருந்தது, ஆனால் விதி 1980களில்தான் கொண்டு சேர்த்தது
“‘கோடைக்கால காற்றே…’ ‘அள்ளித் தந்த பூமி’, அடியோடு பூங்கொடியே’, தங்கச் சங்கிலி’ ‘ ஆஹா வந்திருச்சி’ ‘வா வா வசந்தமே’ ‘பூங்காற்று திரும்புமா, ‘ஆசை நூறுவகை’, ‘தென் கிழக்கு சீமையிலே’ “வெட்டி வேரு வாசம்” என 1980 முதல் 2000 வரை அற்புதமான பாடல் உலகம் அவர் கையில் இருந்தது
தமிழ் சினிமாவுலகில் எம்.எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன் கூட்டணி அற்புதமானது, டி.எம் சௌந்திரராஜன் அதனை முழுமை அடைய செய்தார்.
அதன் பின் இளையராஜா, கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா போன்றோர் கூட்டணியாக இருந்த பொற்காலம் உண்டு
அந்த பொற்காலத்தில் நிச்சயம் மலேசியா வாசுதேவனுக்கு இடமுண்டு, அந்த அற்புத பாடல் கூட்டணியினை நினைக்கும் பொழுதெல்லாம் அவர் நினைவுக்கு வருவார்.
அவர்களின் அற்புதமான பாடல்கள் வாசுதேவனின் குரலால் முழுமை அடைந்தன...
ஒரு விஷயத்தில் இளையராஜா கொடுத்து வைத்தவர், கண்ணதாசன் வாலி வைரமுத்து போன்ற கவிஞர்களும், பாலசுப்பிரமணியம் ஜேசுதாஸ் மலேசியா வாசுதேவன் போன்ற அற்புதபாடகர்களும் அவருக்கு வாய்த்தனர்…
இளையராஜா எனும் மகா கலைஞனின் வெற்றியில் காலம் அமைத்து கொடுத்த இந்த வாய்ப்புகளும் உண்டு
பல படங்களில் காமெடி, வில்லன், குணசித்திரம் என நடித்திருந்தாலும், மலேசியா வாசுதேவனின் பாடல்கள் நிலைபெற்றவை…
கேபி சுந்தராம்பாளுக்கும், கே.ஆர் ராமசாமிக்கும், சீர்காழி கோவிந்தராஜனுக்கும் டி.எம் சவுந்தராஜனுக்கும் பின்பு உச்சஸ்தானி பாடல்களை ஒரு பாடகன் அட்டகாசமாக பாடினான் என்றால் அது வாசுதேவன் ஒருவரே, அனாசயமாய உச்சஸ்தானி ராகங்கள் அவருக்கு வந்தன...
1980களின் பொற்கால பாடல்கள் அவர்குரலில் வந்தவை , மறக்கமுடியா பாடகர் அவர்.
நல்ல நடிகரும் கூட எல்லா வேடங்களிலும் அவ்வப்போது தலைகாட்டினார், எஸ்பி பால சுப்பிரமணியம் நடிக்க வர அவர்தான் முன்னோடி…
உண்மையில் அவர் மிக சிறந்த கலைஞன், அந்த கலை மனம்தான் வளமான மலேஷியாவினை விட்டு சென்னையின் வறண்ட தெருக்களிலும் ஏழ்மையான நிலையிலும் போராட வைத்தது.
சாதாரண தொழில் செய்தாலே வாழ்க்கைக்கு உத்திரவாதம் எனும் நாட்டில் இருந்து இந்தியா தமிழகம் வந்து அவர் போராடியதெல்லாம் பணத்துக்காக , தொழிலுக்காக என்றால் அது அர்த்தமில்லாதது
மலேய நாட்டு எஸ்டேட்டுகளில் பாடிபொழுது ஒரு அங்கீகாரம் கிடைத்திருகின்றது, அந்த அங்கீகாரத்தை தமிழகமும் தரவேண்டும் என ஓடி வந்திருந்தான், ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி, தன் அங்கீகாரத்துக்கு ஏங்கியிருகின்றான்..
அது கிடைத்தபின் அதிலே நிலைத்துமிட்டான், ஆம் பாடல் ஒன்றை தவிர எதையும் மகோன்னதமாக நேசிக்கா கலைஞனால் இது சாத்தியமில்லை…
அந்த பாடகன் முறைபடி சங்கீதம் படித்ததாகவோ, பெரும் குருநாதர் இருந்ததாகவோ தகவல் இல்லை, பாடலின் மேலான தேடல் அவரை வழிநடத்தி தமிழ் பாடல் உலகில் முடிசூட்டியது
மலேஷியாவின் கிள்ளான் நகர் ஒரு துறைமுக நகரம், எல்லா வளங்களும் நிறைந்த பகுதி. அதுதான் அவர் பிறந்து வளர்ந்த இடமும் கூட
ஒருமுறை அங்கு சென்றிருந்த பொழுது அவரின் நினைவு மேலோங்கிற்று, அவர் பாடிய “அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா” எனும் அந்த பாடல் மனதோரம் ஒலித்தது
அது வளமான ஊர்தான், அமைதியான நகரம் எல்லா வகை வளங்களும் சுற்றியிருக்கும் பசுமையான நகரம், வாழ்வுக்கும் உத்திரவாதம் உண்டு
ஆம், அந்த வளமான ஊரை விட்டு, சுகமான நாட்டை விட்டு சென்னையின் புழுதிபடிந்த தெருக்களிலும் வீதிகளிலும் அவன் சுற்றி திரிந்து பாடினான் என்றால் அந்த் கலைஞனுக்கு ஒரு கலைதாகம் இருந்திருக்கின்றது
அவனின் ஒலிசிற்பம் போன்ற அழியா பாடல்கள் அதைத்தான் சொல்லி நிலைத்துவிட்டது.
“பாட்டுசத்தம் கேக்கலியா…” என அவன் பாடிய அந்த வரிகள் அவனை நினைக்கும்போதெல்லாம் காதோரம் ஒலிக்கும், அவனின் அற்புதமான ராகத்துக்கு அது பெரும் சாட்சி (உதவிக்கு நன்றி- பிரம்மரிஷி …)
……………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………………..








இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…