” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….”

………………………………………………

………………………………………………..

“பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடல் பிறந்த கதை….

அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று. அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது.

அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, பெரும் போராட்டம் இந்தி எதிர்ப்பு என வெடித்தது. சிமென்ட் ஆலைக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு என்பதுதான் தெரியவில்லை. அப்பொழுது திமுக அடிக்கடி ரயிலை மறிப்பதை கண்டு நான்சென்ஸ் என சொன்னார் நேரு, வசமாக அதை பிடித்த திமுக நேருவுக்கு நோசென்ஸ் என எதிர்ப்பு, ராஜாஜி குலகல்வி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என மும்முனை போராட்டத்தை தொடங்கியது.

கல்லகுடிக்கு கருணாநிதி அனுப்பபட்டார். அந்த களம் கருணாநிதியிடம் ஒப்படைக்கபட்டது, கண்ணதாசனும் கலந்து கொண்டிருந்தார். டால்மியாபுரம் எனும் பெயர் பலகையில் கல்லகுடி என போஸ்டரை ஒட்டிவிட்டு ‘தமிழ் வாழ்க’ என கோஷமிட்டு வந்துவிடுவதுதான் போராட்ட நோக்கம், அண்ணா அதைத்தான் சொல்லியிருந்தார்.

கலைஞர் கிளம்பும் பொழுதே ரத்தம் தெறிக்க பேசினார் “தாயிடம் விடைபெற்றேன், மனைவியிடம் விடைபெற்றேன், குழந்தையினை முத்தமிட்டேன்.. தமிழே உன்னிடம் எப்படி விடைபெறுவேன்” என கடும் முழக்கம் வெறியேறிய கூட்டத்துடன் புறப்பட்டார், போஸ்டர் ஒட்டபட்டது அவரை கைது செய்யவில்லை அவர் உடனே நிலையத்துக்குள் நுழைய முயன்றார், தன்னை கைது செய்யவில்லை என்ற வருத்தம் அவருக்கு

போலிசார் இது அனுமதி வாங்கிய ஊர்வலம் அதனால் நிலையத்துக்கு வெளியே கைது செய்ய முடியாது, உள்ளே உங்களுக்கு அனுமதி இல்லை என்றது. உடனே சட்டென உள்ளே புகுந்தார், கைது நடக்கும் என எதிர்பார்த்தார். அப்பொழுதும் காவல்துறை தயங்கியது. இன்னுமா கைது இல்லை? என பொங்கியவர் தண்டவாளத்தில் படுத்து அழிச்சாட்டியம் செய்தார், அது மெட்ரொ ரயில் போல மின்சார தண்டவாளம் என்றால் சென்றிருப்பாரா என்றால் இல்லை, வேறு வழியின்றி காவலர் அவரை அப்புறப்படுத்த, கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்து சிலர் செத்தனர், பலர் காயம், கண்ணதாசனுக்கு முட்டி பெயர்ந்தது… அண்ணாவினை நோக்கி பரிதாபமாக பார்த்தார் காமராஜர்.. அண்ணாவிடம் இதற்கு பதில் இல்லை தலை குனிந்தார், ஆம் இது அவர் எதிர்பாராதது. 3 தமிழ்குடும்பம் சோகத்தில் மூழ்க, ஏகப்பட்ட தமிழ் குடும்பம் நீதிமன்ற வாசலில் காத்திருக்க, கண்ணதாசன் உட்பட்ட தமிழர் சிறையில் இருக்க தமிழை மீட்ட மகிழ்ச்சியில் இருந்தார் கருணாநிதி இதுதான் கல்லகுடி போராட்டம்.

அது முடிந்து சிறையில் கருணாநிதி இருந்த பொழுது தன் வழக்கமான பாணியான தானே கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதிகொண்டார் “ஒருவேளை ரயில் ஏறியிருந்தால் என்னாயிருக்கும்?” என அவரே கேள்வி கேட்டு, “ரயில் ஏறி நான் சிதைத்து செத்திருந்தால் என் ரத்தத்தை எடுத்து கல்லகுடி வாழ்க, தமிழ்வாழ்க என எழுதியிருப்பார் அண்ணா…” என அவரே பதிலும் சொல்லி கொண்டார். “நான் என்ன ரத்தகாட்டேரியா?” என திகைத்து நின்றார் அந்த அறிஞர்.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் கடுமையானது , 100 பேர் செத்தனர் பல நூறு பேர் காயமடைந்தனர், துணைராணுவம் வந்து நிலமையினை அடக்கியது. கலவர முடிவில் பாளை சிறையில் அடைக்கபட்டார் கருணாநிதி, காரணம் திமுகவுக்கு செல்வாக்கு இல்லாத பகுதி அது. கருணாநிதி தேர்ந்த சாமர்த்தியசாலி நிச்சயம் தான் கைதுசெய்யபட வேண்டும், கைது செய்யபட்டால் என்னென செய்யவேண்டும் என வகுப்பெடுத்துவிட்டே காட்சிகளை நடத்தினார் எல்லாவற்றையும் அரசியலாக்கி தனக்கு லாபம் பார்ப்பவர் அவர், அழிவுகள் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை அவர் உள்ளே சென்றதும் அடிபொடிகள் களமிறங்கின..

ஒன்று ‘அய்யய்யோ பாம்பு நடுவில் கலைஞர் என கொதித்தது, ஒரு கோஷ்டி பஸ் எரிப்பு, மறியல் என கிளம்பியது தமிழகம் அல்லோலபட்டது. அஞ்சிய அன்றைய முதல்வர் பக்தவச்சலம் வெளியே விட சொன்னார், அதுவும் மிக சில நாட்களிலே வெளிவந்தார் கருணாநிதி. அடுத்தநாள் பிரபலமில்லாத சில பத்திரிகைகளில் இப்படி செய்திவெளியிட்டன‌. “கருணாநிதி பெரும் அறிவாளி, மாபெரும் ஆற்றல்மிகுந்தவர். அவர் சிறையில் இருப்பதை என் அரசு விரும்பாது என்பதால் விடுதலை செய்கின்றேன் என அறிவித்தார் பக்தவச்சலம்”.

பக்தவச்சலம் அப்படி ஒரு அறிவிப்பையும் செய்யவில்லை, ஆனால் செய்தி தானாக சுற்றி அச்சேறி அவருக்கே வந்தது. ஆம் , ஒருபக்கம் அண்ணா ஒரு ஊர்வலம் நடத்த சொன்னால் ஊரையே கொழுத்திவிட்டு சிறையில் இருக்கின்றான் தம்பி என அதிர்ந்திருந்தார். இன்னொரு பக்கம் தான் கலவரத்தை தடுக்க கருணாநிதியினை வெளியேவிட சொன்னால் இப்படி செய்திகள் வருகின்றதேன தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார் பக்தவச்சலம்.

தன் கனபாடி கோஷ்டிகளுடன் “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடல் ஒலித்தபடி அண்ணாவினை நோக்கி ஆசீவாங்க சென்று கொண்டிருந்தார் கருணாநிதி. பாம்புகள் பல்லிகள் நடுவினிலே என பாடல் பிறந்த கதை இதுதான்..

(டால்மியாபுரம் என சிமென்ட் ஆலை குடியிருப்புக்கு கொடிபிடித்து பலரை போராட்டம் என கொன்ற கருணாநிதியின் குடும்பம் இன்று எத்தனை சிமென்ட் ஆலைகளில் பிடியினை வைத்திருக்கின்றது என்பது தலைசுற்ற வைக்கும் விஷயம்) (சரித்திர சுவாரஸ்யங்களைத் தேடி, தோண்டியெடுத்து
வெளிக்கொண்டு வர உதவிய பரஞ்சி சங்கருக்கு நன்றி…)

…………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!!

This gallery contains 3 photos.

…………………………… ……………………………. ……………………………… ஜெயமோகன், மிகவும் மென்மையாகத்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்……சூடு சொரணை உள்ளவர்களுக்குத் தான் இத்தகைய மென்மையான தாக்குதல் எல்லாம் தகும்……!!! நம் நாயகன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் – சகோத்ரி சின்மயி போன்றவர்களின் உரைகளே அவருக்கு உரைத்ததில்லையே ….. ………………………………………………. தமிழுக்கு அவமானம்…. சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!!

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………. …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அந்த ரகசியக் கொலைப்படை….!!!

This gallery contains 3 photos.

………………………………….. ………………………………….. ……………………………………. மொசாட்.. .. கமேனி கோட்டைக்குள் புகுந்து ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி? உலக வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இஸ்ரேல். ஆனால், அதன் உளவு அமைப்பான மொசாட் (Mossad) நினைத்தால், உலகின் எந்த மூலையிலும் இருக்கும் எதிரியைத் தூக்க முடியும் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சி. ஈரானின் உச்ச தலைவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் …???

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………… இப்படியும் ஒரு எதிர்வினை ……………!!!!!!!!! …………………….. அனைத்து துறைகளையும் மக்களுக்கு தன் எழுத்துமூலம் புரிய வைத்த சுஜாதாவுக்கு கொடுக்கபடாத ஞானபீட விருது, இந்நாட்டின் தர்மத்தை ஞானத்தை அதன் மகாபெரும் தத்துவத்தை எழுத்தில் சொன்ன பாலகுமாரனுக்கு கொடுக்கபடாத ஞானவீடவிருது .. பாடல் ஆசிரியர் வைரமுத்துவுக்கு கொடுக்கபட்டது என்றால் அது தரம் தாழ்ந்துவிட்டது என்பதன்றி வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் – கூட்டணி …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அவசரம் …. குறும்படம் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………… …………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக