— “திருந்த ” வேண்டியதா … “திருத்த “வேண்டியதா ….. ???

…………………………………………………………..

……………………………………………………………

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.

அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.

பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வந்தார்.

அவர் பணக்காரனை வந்து பார்த்தார்.

பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.

தலைவலி குணமாகி விட்டது.

சந்நியாசி கூறியது சரிதான்.

உடம்பு சரியாகவே, வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.

ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே….!!!

நிறைய பச்சைப் பெயிண்டையும், பிரஷ்ஷையும், கொடுத்து – சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.

சில மாதம் கழித்து மீண்டும் சந்நியாசி அதே ஊருக்கு வந்தார்.

வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சந்நியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது.

காரணம் கேட்டார்.

அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சந்நியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சந்நியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.

வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சந்நியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.

“நான் என்ன சொன்னேன்?” என்றார் சந்நியாசி.

“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே …! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.

ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி ஒன்று வாங்கியிருந்தால்,

உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும்.

உன் பணமும் வீணாகி இராது.

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சந்நியாசி….

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

சாத்தியமான விஷயமா அது .. ??

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘ திருந்த வேண்டியது நாம்தான் ’ என்பது புரிகிறது….. !!! ( இணையம் ….!!!_)

………………………………………………………………………………………………………………………………………………

later addition –

……………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாரதிராஜா – சில நினைவுகள் … !!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. மறக்க முடியாத கலைஞர் – பாரதிராஜா … !!! இந்த மறைவு கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்தது தான்….எனவே, அதிர்ச்சி என்று சொல்ல மாட்டேன்…. ஆனால், நமக்கு மிகவும் வேண்டிய ஒருவரை, நமக்கு மிகவும் பிடித்த ஒருவரை இழந்தால் ஏற்படக்கூடிய மனவருத்தம் இருக்கத்தானே செய்யும்….. பாரதிராஜாவின் பல படைப்புகள் எனக்கு பிடிக்கும் என்றாலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஜய் CM ஆவதை தடுக்க திமுக நிகழ்த்திய சதி முயற்சி – மாணிக்கம் தாகூரின் விரிவான பேட்டி …. !!!

This gallery contains 2 photos.

…………………………………………………… ………………………………………………….. …………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

— ஸாந்த் துக்காராம் ….

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………………………… மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் 1598ல் பிறந்தவர் சாது துக்காராம்….. நாமதேவரின் மறு அவதாரமாக கருதப்படுபவர், பாண்டுரங்க விட்டலரின் தீவிரபக்தர். துக்காராம் மராத்தியைத் தவிர வேறு மொழி தெரியாதவர், படிக்காதவர். பரிபூர்ண பக்தியோடு உள்ள பாண்டுரங்கனின் விட்டல ஸ்மரணம் செய்பவர், பாடல்கள் இயற்றி பாடுவார். மராட்டிய மாமன்னர் சிவாஜி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தபாஜக பிரமுகரின் எசகு பிசகான குற்றச்சாட்டுகள் …..

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………… தமிழக அரசியலில் ‘டெக்னாலஜி’ கிரிமினல் தனம்: 2021 ஜூலை முதல் அரங்கேறிய தமிழக பாஜகவின் நிஜ முகம்! …………………………………… அரசியல் என்பது கொள்கை சார்ந்த தளம், மக்கள் பணி சார்ந்த இயக்கம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய 25, 30 வயது இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான நிஜங்கள் சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

— இணையுமா …நிரந்தரமா …??? பிரிவுகள் எத்தனை ரகம் …??? (ஆசிரியர் மாலன் ….!!!)

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… பிரிவுகள் நிரந்தரமல்ல… என்கிற தலைப்பில், ஆசிரியர் மாலன் அவர்கள் தினமணி நாளிதழில் எழுதியுள்ள ஒரு கட்டுரை கீழே – ​கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இசையும், நடனமும் – கருப்பு வெள்ளையும் – கலரும் …..!!! எது பெட்டர் … ???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. கீழே சில – பழைய கருப்பு, வெள்ளை படங்களில் இடம் பெற்று மிகவும் பிரபலமடைந்த பாடல்-நடனக் காட்சிகள், தற்போதைய டெக்னாலஜி வளர்ச்சியின் உதவியுடன் வண்ணத்தில் வெளிவந்திருக்கின்றன….. பழைய கருப்பு வெள்ளையில், இவற்றை, ஏற்கெனவே படதடவை பார்த்திருப்பீர்கள்…… இப்போது வண்ணத்தில் பார்த்து – எது பெட்டர் … ???யோசியுங்களேன்…..!!! …………………………………………. …………………………………………………………………………………………………………………………………………….. LATEST NATIONAL … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்