ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????

……………………………..

………………………………………………………………………………………………………………………………………

ஒரு நாள் உங்கள் உடல் கெட்டுப் போய்விடும்.

ஒரு நாள் நீங்கள் இறந்து போவீர்கள்.

ஆனால் அந்த நேரத்தில் தியானம்/தவம் செய்ய நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் நமது கைநழுவி போய் விட்டிருக்கும்.

ஆனால் இப்போதோ நமது உடல்

இங்கேயே இருக்கிறது.

நாமும் இன்னும் சுவாசித்து

கொண்டுதான் இருக்கிறோம்.

ஆகவே இப்பவே இறந்து போகலாம்.

நாம் உயிரோடு இருக்கும் போதே இறப்பது என்பது ஒரு மிக புதிய அனுபவம்.

இது தைரியமிக்கவர்களுக்கு ஒரு சோதனையாகவும் ஒரு பயிற்சியாகவும் ஒரு நல்ல அனுபவமாகவும் இருக்கும்.

தினமும் நாம் இறந்து போகலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை இறப்பதற்காக ஒதுக்கி வைக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 23 மணி நேரம் வாழ்வது என்பதே போதுமானது.

ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வெறுமனே நாம் இறப்பிற்கும் ஆழமாக போக வேண்டும்.

நமது உடல் உயிரற்று நாம் இறந்து போய்விட்டது போல் அங்கே கிடக்கலாம்

அதை நாம் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

வெறுமனே ஒரு சாட்சியாக நாம் இருக்க வேண்டும்.

அப்போது என்ன நடந்தாலும் சரி

நாம் செயல் புரிபவராக இருக்கக் கூடாது.

இப்படி இருந்தால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.

முதல் நாள் நமக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும்.

ஏதோ ஒன்று எப்போதுமே நம்முடைய உடம்பில் நடப்பது போலவே இருக்கும்.

நம்முடைய கால்களில் குளிர் அடிப்பது போல் உணர்வோம்.

நமது வயிற்றில் வலி ஏற்படலாம்

அல்லது நமது உடலின் ஏதோ ஒரு பகுதியில் எறும்பு ஊர்வது போல தோன்றும்.

ஆனால் நாம் அந்த எறும்பை தேடினால் அங்கு அது இருக்காது.

நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஏனென்றால் அவை அனைத்தும்

நம்முடைய கற்பனையே!

மனம் நம்மிடம் காட்டிய வித்தைகளே!

மனமானது ஆயிரத்தோர்

காரணங்களை கொடுக்கும்.

நீங்கள் எழுந்து உங்களுடைய

வேலைகளைப் பார்க்கத் தூண்டும்.

ஆனாலும் நீங்கள் ஒவ்வொரு நாளும்

ஒரு மணி நேரம் இறந்து போங்கள்.

போகப் போக உங்களுக்கு மனதின் தந்திரங்கள் புரிந்துவிடும்.

பிறகு அது உங்களை எழுந்து ஓடி, ஆட, வேலையில் மூழ்கிப் போக நெருக்கும் போது நீங்கள் அதனிடம் “நான் ஏற்கனவே இறந்து விட்டேன்.

நான் இப்போது என்ன செய்ய முடியும்?” என்று சொல்வீர்கள்.

பல நாட்கள் இதை பயிற்சி செய்துவந்தால், போகப் போக உங்களுடைய சுவாசத்தின் வேகம் குறைந்து கொண்டே போவதை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் இந்த பயிற்சியை அதிகமாக மேற்கொள்ள, மேற்கொள்ள உங்களுடைய சுவாசம் வலுவிழந்து மேலும் வலுவிழந்து போகும்.

அப்போது ஒரு தருணம் வரும்.

உங்கள் சுவாசம் திடீரென முற்றிலுமாக நின்று போய் ஒரு பிணத்தைப் போல

உங்கள் உடல் அங்கே கிடக்கும்.

அந்த தருணத்தில் முதல் முறையாக உங்களுக்கு நீங்கள் உங்கள் உடலில்

இருந்து தனித்து இருப்பது தெரியவரும்.

“அமுது” என்றால் என்ன என்பதை அத்தருணத்தில் உணர்வீர்கள். .

ஞானப் பாதையின் சாராம்சம் இதுவாகவே, இதுவாக மட்டுமே இருக்க முடியும்.

அழியக்கூடியதையும் அழிவற்றதையும் தனித்தனியாக பிரித்து பார்க்க கூடிய தன்மையை அடைவதும் –

நாம்” என்றால் என்ன…?

நம்முடைய உடல் என்றால் என்ன…?

என்பதை தெரிந்து கொள்வதும்தான்.

பிறகு, நீங்கள் மற்றவர்களை போல வாழ மாட்டீர்கள்.

உங்களுடைய வாழ்க்கையானது ஒரு உன்னதமான நிலையை அடைந்து விட்டிருக்கும்.

நீங்கள் உள்ளே உயிர்ப்பு தன்மையுடனும், வெளியே ஒரு பிணத்தை போலவும் காணப்படுவீர்கள்.

இதுதான் உண்மையான ‘ சமாதி’ நிலை.

இப்போது நீங்கள் எதற்கும் பயப்பட மாட்டீர்கள்.

……………………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………. ………………………………………………………………………………………………………………………. விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் – தயவு செய்து, எக்காரணத்தை முன்னிட்டும் அதிமுக-வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்காதீர்கள்… உங்கள் அடிப்படை லட்சியத்தையே அது அர்த்தமற்றதாக –ஆக்கி விடும். புதிய தமிழகத்தை, ஊழலற்ற, ஜாதி-மத, இன வேற்றுமைபார்க்காத இனிய தமிழகத்தை உருவாக்க – மனதார வாழ்த்துகிறோம்…. மக்களும், மகேசனும் – என்றும் உங்களுக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் )

This gallery contains 1 photo.

………………………………………………………………………… …………………………………………………………………………. …………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

-மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!!

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………… ………………………………….. வித்தியாசமான ஒரு பதிவு …!!! விக்கிரமாதித்தனும் வேதாளமும் – ………………………. மூன்று சுகுமாரிகளில் – யார் அதிக மென்மையானவர்? விக்ரமாதித்த மன்னன் மீண்டும் அந்த முருங்கை மரத்திற்குச் சென்று, வேதாளத்தைத் தன் தோளில் சுமந்துகொண்டு, மீண்டும் அந்தத் துறவியை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் நடந்து செல்கையில், அவன் தோள் மேலிருந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!

This gallery contains 1 photo.

………………….. முல்லா நசீருத்தீன் – அவரைப்பற்றிய கதைகளுக்காகவும், நாட்டுப்புறப் பாடல்களுக்காகவும் புகழ் பெற்றவர்.முல்லா நசீருத்தீன் 13-ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் என்று சொல்லப்படுகிறது…. நம்ம ஊர் தெனாலிராமன் கதைகள் போல்,அவரைப்பற்றியும் பல வேடிக்கையான கதைகள் உண்டு. கீழே ஒன்று – ………………………………….. முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………… `சப்தரிஷி சாஸ்திரம்’ என்று சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு பிரமாண்டமான சாஸ்திரம். இவ்வுலகிலே ஆதிகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள், இனிமேல் பிறக்கப்போகிறவர்கள் ஆகிய எல்லாருடைய ஜாதகங்களின் பிரதிகளும், அவற்றிற்கு மிக நுட்பமான ஆயுள் பலனும் இந்த சாஸ்திரத்தில் உண்டாம்! என் மாமன் ஒருவர் கொடிய நோயினால் வருந்திக் கொண்டிருந்தார். அவர் மேற்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!!

This gallery contains 2 photos.

……………………………………….. ( அஸ்ஸாமிய இளம் பெண் எழுத்தாளர் ஜானவி பரூவா’வின் படைப்பு ….!!! ) ………………………………………………….. இரு வீட்டு மதிற்சுவர்களையும்  பிரிக்கும் அந்த அடர்ந்த மாமரங்களின் ஊடே ஒரு மின்மினிப் பூச்சிதான் இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருக்கிறது என்றே மதுமிதா முதலில் எண்ணினாள். பிறகுதான் அது என்னவென்று அவளுக்கு விளங்கியது. பக்கத்து வீட்டின் மின்விளக்குகளில் ஒன்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக