சாஸ்திரமும், சம்பிரதாயங்களும் – ரமண மகரிஷியின் வார்த்தைகளில் …..

………………………………………..

…………………………………………………………………………………………………………………………………

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்… சம்பிரதாயமும் வேண்டாம்…

மணிகளும் வேண்டாம்…

மந்திரமும் வேண்டாம்…

நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்…

அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு…

ரமணமகரிஷி திருவண்ணாமலை

ஆசிரமத்தில் இருந்த போது,

அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்…..

முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்…

அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருப்பார்…

இந்த வேதவிற்பன்னர்களைப் போல,

பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார்….

அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர்….

ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது,

”இன்று சவரம் செய்து கொண்டாயா?”

எனக் கேட்டார்….

அவர் ஏதும் புரியாமல், ‘ஆமாம் சுவாமி’ என்றார்…..

”கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?” என்று திரும்பவும் கேட்டார் ரமணர்.

பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல், ‘ஆமாம்’ என்று பணிவுடன் தலையாட்டினார்….

“கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?” என்றார்….

ரமணரிடம், ‘முடியாது சுவாமி’, என்றார் பக்தர்….

“அதே போல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும்…

நீ சிரமப்படாமல், காயப்படாமல்,

முக்தியடைய அவை உதவும்…

அவ்வளவு தான்….

……………………………………………………………………………

அவற்றால் உனக்கு முக்தியை

வாங்கித்தர முடியாது….

தீவிர முயற்சியும், இறைவழிபாடும் மட்டுமே –

உனக்கு முக்தியைத் தரும்….

உன்னை இறைவனடியில் சேர்க்கும்….

அதை மட்டும் நீ செய்தால் போதும்” என்றார்.

ரமணர் சொல்வது போல், உண்மையான அன்போடு இறைவனை தேடுதலும், இறைவனின் அங்கமான ஒவ்வொரு உயிருக்கும் தொண்டு செய்வதும் தான்

உண்மையான ஆன்மீகம்…

உண்மையான இறைவழிபாடு…

என்பதை புரிந்துகொண்டால் போதும்.

…………………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடையாரும் நானும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில், பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மூக்குடைவது முதல் தடவையல்ல …!!!

This gallery contains 3 photos.

………………………………………………………………. ……………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்கா ஈரானிடம் உதை வாங்குவதும், அசிங்கப்படுவதும் இது முதல்முறை அல்ல… ஏற்கெனவே ஈரானிடம் வம்புக்குப்போய் அமெரிக்கா அசிங்கபட்டு திரும்பிய சம்பவம் ஒன்று உண்டு….. இன்றைய் இளையதலைமுறை இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மன்னராட்சியில் இருந்த, ஈரானில் – 1979 ஜனவரி மாதம், இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மறக்க முடியாத, ஆனால் அதிகம் கேட்கப்படாத – சில சிவாஜி படப்பாடல்கள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ………………………………………………………. சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத –ஆனாலும் மறக்க முடியாத – சில சிவாஜி படப் பாடல்கலகள்விடுமுறை நாளில் – இங்கே – நண்பர்களின் பார்வைக்கு ….. நேரம் இருந்தால், பாருங்கள் ….!!! …………………………….. சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது… இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“மெர்க்குரி பூக்கள் “உருவானது எப்படி …???பாலகுமாரன் ….. !!!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. இந்த இரண்டாயிரத்து இரண்டில் – என் வயது ஐம்பத்தியேழு….. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதை எழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணதாசனின் மகன் – அண்ணாதுரை … ??? – !!!

This gallery contains 2 photos.

…………………………….. (அண்ணாதுரை – கண்ணதாசன் …!!!) ……………………………… ( இது காந்தி கண்ணதாசன் ….) ………………………………… அண்ணாதுரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!!

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். “என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக