………………………………………..

| தில்லையாடி வள்ளியம்மை | |
| பிறப்பு – பெப்ரவரி 22, 1898 இறப்பு – பெப்ரவரி 22, 1914 (16 வயதில் பிரிட்டிஷாருக்கு எதிராக, தென் ஆப்பிரிக்காவில் போராடி இறந்தார்.) | |
|---|---|
…………………………………………….

( காந்திஜி, தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் ‘தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்’ கட்டப்பட்டுள்ளது )
…………………………………………………..

( தில்லையாடியில் காந்திஜி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில், இந்த நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது… )
…………………………………………………..
18ம் – நூற்றாண்டில் பல நாடுகளை பிடித்த பிரிட்டிஷார்,
அங்கெல்லாம் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம், சுரங்க வேலை என பல வேலைகளை தொடங்கினார்கள்…
அப்படி தொடங்கினாகளே தவிர, அந்த வேலைகளுக்கு ஆட்கள் என அவர்களிடம் யாருமில்லை, சம்பந்தபட்ட இடத்திலும் யாருமில்லை…
அப்படியான காலகட்டத்தில்தான், ஆங்கிலேய காண்டிராக்டர்கள் இந்தியாவில் இருந்து உழைக்கும் மக்களை உலகெல்லாம் அழைத்து சென்றனர்.
ஆங்கிலேயர் வரும் காலம் வரை இந்தியமக்கள் இடம்பெயர வேண்டிய அவசியம் இருந்ததில்லை….. ஏற்கெனவே அது வளமான இந்தியாவாக இருந்தது, ஆங்கிலேயர்கள் இறுதிவரை உறிஞ்சிய பின்பே இந்தியா வறட்சியானது
மொகலாயர்- இந்துக்கள் மோதலின் போர், பிரிட்டிஷார் போர், என போர்கள் மிகுந்த காலத்தில் அவர்கள் கடும் வரிகளை வசூலித்தனர்.
அந்த வரிதான் இந்தியாவினை வறுமையில் தள்ளிற்று.
அந்த வறுமையை வைத்தே சகல இடங்களுக்கும் இந்தியரையே வேலைக்கு அழைத்து சென்றான் வெள்ளையன்.
அப்படி சென்றோரில் தமிழர்கள் தான் அதிகம்…
தமிழன் அரச விசுவாசம் கொண்டவன், கடும் உழைப்பாளி என்ற அபிமானம் பிரிட்டிஷாருக்கு அதிகமாக இருந்தது. கயானா முதல் பிஜி தீவுகள் வரை தமிழர்கள் பரவியது இப்படித்தான்…
அப்படி ஏகப்பட்ட தமிழர்களை தென்னாப்ரிக்காவுக்கும் கொண்டு சென்றான்…
அதில் மயிலாடுதுறையினை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி….
முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் ஜோகன்ஸ்பர்க்கில் அவர்கள் இருந்தபோது பிறந்தவர் தான் வள்ளியம்மை.
பிறந்தது – பிப்ரவரி 22, 1898 அன்று.
அவள் பிறக்கும்பொழுது தென்னாப்பிரிக்காவில், இன ஆடிப்படையில் பாகுபாடும்,
பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய ஆட்சி வெறி, மதவெறியும் – உச்சத்தில் இருந்தது, பிரிட்டிஷாரை தவிர மற்ற அனைவரையும் மிருகத்தை போல அவர்கள் நடத்திய காலகட்டம் அது.
அங்கே வழக்கறிஞர் தொழில் செய்து பிழைக்க சென்ற காந்திஜி, அப்பொழுதுதான் போராட்டத்தை தொடங்கியிருந்தார், அப்பொழுது இன்னொரு கட்டுபாட்டையும் பிரிட்டிஷாரின் அரசு விதித்தது.
அதாவது கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் திருமணமே செல்லும் என்றும், இந்துக்கள் வீட்டில் நடத்தும் திருமணம் செல்லாது எனவும் அறிவித்தது.
இந்துமதத்தை அழிக்க, இந்திய அடையாளத்தை அழிக்க – அந்த அறிவிப்பினை பிரிட்டிஷார் வெளியிட்டனர்
கூடவே கொடுமையான வரிவிதிப்புகள், மற்ற இனத்தவர் மேல் கொடூர அடக்குமுறை ….
இதை எல்லாம் கண்டித்து பெரிய அளவில்போராட்டம் வெடித்தது, வள்ளியம்மைக்கு அப்பொழுது 15 வயதுதான் இருக்கும்…. ஆனால் அச்சூழல் அவளுக்கு மான உணர்ச்சியினையும், இந்தியருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியினையும் ஏற்படுத்தியது…..
காந்தி போராட்ட குழுவுக்கு தலைவரானார், அவருடன் எங்கு சென்றாலும் துணை சென்றாள் வள்ளியம்மை.
ஒரு ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எதிராக துப்பாக்கியை தூக்கினான் ஒரு ஆங்கிலேய அதிகாரி, குறுக்கே வந்து நின்றாள் வள்ளியம்மை…… “ என்னை சுட்டுவிட்டு அவரை சுடு ” என அவள் சொன்னபொழுது அவளின் துணிச்சல் அவளுக்கு பெரும் பெயரை கொடுத்தது
கூட்டம் அவளை கொண்டாடியது, காந்திஜிக்கு அவள் பேரில் தனிபாசமே வந்தது….
எங்கு போராட்டம் என்றாலும் செல்வாள் வள்ளியம்மை.
“ஒரு கொடி கூட இல்லா அடிமை தேசத்து அடிமை நீ – நீ எல்லாம் பேசுகின்றாயா…? உனக்கேன் உரிமை ” என அந்த அதிகாரி கேட்க , தன் சேலையினை கிழித்து, அவன் முகத்தில் எரிந்து -இந்த மானமே எம் கொடி என முகத்தில் அறைந்தது போல் சொன்னாள்
மிக சிறிய வயதிலே போராட்டத்தில் அவள் பங்கெடுப்பதும், ஓடியாடி வேலை செய்வதும் பிரிட்டிஷாருக்கு அச்சத்தை கொடுத்தன.
ஒரு போராட்ட நிகழ்வில் அவளை கைது செய்து சிறையில் அடைத்தார்கள், அங்கு கிட்டதட்ட வ.உ.சி பாணியில் அவள் கொடுமைப்படுத்தபட்டாள்…
20 மணிநேர வேலை, சரியான உணவோ ஓய்வோ இல்லை….சுகாதாரமற்ற சிறை எல்லாம் சேர்ந்து, அவளை நோயாளியாக்கின
பதறிய மக்களும் காந்தியும் அவளை பிணை எடுக்க முயன்றனர், அரசும் அனுமதித்தது.
அவளோ கோரிக்கை ஏற்கப்படும் முன் விடுதலை ஆவது இல்லை என உறுதியாக நின்றாள்…காந்திஜியே நேரில் சென்று அவளை விடுதலையாக வற்புறுத்தினார்.
” நீங்களே என்னை போராட்டத்தை கைவிட சொல்கின்றீர்களா….? நாளை ஒரு போராடத்தில் உங்கள் நிலையும் இப்படி இருந்தால் உயிர்பிழைக்க வேண்டி போராட்டத்தை விட்டுவிடுவீர்களா..? ” –
என்று அவள் கேட்ட கேள்வியில் வாய்மூடினார் காந்திஜி…. தான், அவளது மனதில் எந்த அளவு பதிந்திருக்கின்றோம் என்பது அவரை கண்ணீர் விடச் செய்தது.
ஆம், அவளே காந்திஜிக்கு மக்கள் போராட்டத்தின் வலிமையினை முதலில் சொன்னவள்.
அவள் சிறையில் வாடி இருக்க, தென்னாப்ரிக்க இந்தியரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது, காந்திஜி தலமையேற்றார்.
அதன்பின் அந்த வரி நீக்கபட்டது, மகிழ்வுடன் வெளிவந்தாள் வள்ளியம்மை…..
“மக்கள் போராட்டத்தின் வெற்றியினை எனக்கு உணர்த்திய தெய்வமம்மா நீ “” என அணைத்துக்கொண்டார் காந்திஜி.
மக்கள் சக்தி எவ்வளவு பெரும் ஆயுதம் என அவர் அனுபவ பூர்வமாக கண்டுகொண்டது அங்குதான்.
சிறைவாசமும் அஹிம்சை போராட்டமும் வள்ளியம்மைக்கு பெரும் நோயினை கொடுத்தது, அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை
இதே பிப்ரவரி 22-ம் நாள் மரித்தும் போனாள், ஆனால் அவள் ஏற்றிவைத்த எழுச்சி முதலில் காந்திஜிக்கும் – பின்னாளில் மண்டேலாவுக்கும் வெற்றியாகவும் முடிந்தது.
இருவருமே தயக்கமின்றி வள்ளியம்மையின் தியாக வாழ்வினை முன்மாதிரியாக கொண்டவர்கள்….
தென்னாப்ரிக்காவில் வென்ற காந்திஜி – அந்த உத்வேகத்துடன் இந்தியா வந்தார்…. 1915-ல் இந்தியா வந்த காந்திஜி, தன் மனைவியுடன் நேரே மயிலாடுதுறை வந்து தில்லையாடிக்கு சென்றார்.
அந்த மண்ணை குனிந்து முத்தமிட்டார் , கண்ணீர் சிந்தினார்.
“தமிழகத்து வள்ளியம்மையே – பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்….
அப்படி ஒரு மனஉறுதியினை நான் யாரிடமும் கண்டதில்லை, அவரே நான் கொண்ட மனவுறுதிக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் காரணம்”” –
என மனம் திறந்து சொன்னார் காந்திஜி.
அந்த மண்ணை வள்ளியம்மை நினைவாக வணங்கிவிட்டே மாபெரும் போராட்டத்தை கையிலெடுத்தார் காந்திஜி…..
வள்ளியம்மை போராட முதல் காரணம் அந்த திருமண சட்டம், அதாவது கிறிஸ்துவ முறை திருமணம் செல்லும் ஆனால் இந்துமுறை திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட சட்டம்…
அது, இந்துமதத்தை அழிக்கும் சட்டம், அச்சட்டபடி இந்து திருமணம் செல்லாது -இந்து குழந்தைகள் வராது …அம்மதமே அழியும்…
அதைத்தான் எதிர்த்து போராடி செத்தாள் வள்ளியம்மை, அவள் சாவும் தியாகமும் முக்கியமாக இந்துமதத்துக்கானது, இந்தியருக்கானது……
இன்று தென்னாப்ரிக்காவில் இந்துக்கள் உண்டு, இந்து கோவில்களும் இந்து வம்சாவழிகளும் உண்டு, தென்னாப்ரிக்காவில் இந்துமதம் இன்னமும் வாழ்கின்றது.
அது வாழ உயிர்கொடுத்தவள் அந்த வள்ளியம்மை.
இந்து திருமணம் செல்லாது, இந்துக்களுக்கு வரி அதிகம் என இந்து அடையாளத்தை ஒழிக்க இடபட்ட சட்டத்தை எதிர்த்தே அவள் உயிர்விட்டாள்.
தனது 16-வது வயதிலேயே போராடிச் செத்தாள்…
வள்ளியம்மையின் சத்தியாகிரகம் – தென் ஆப்பிரிக்காவில், இந்துக்களிடையே எழுச்சி ஏற்படக்காரணமாகியது.
இந்த வெற்றிக்கான முக்கிய பின்னணி காரணம் – பிரிட்டிஷாருக்கு சுரங்க வேலை உள்பட எல்லா வேலையும் நடக்க வேன்டும் அதற்கு ஆட்கள் வேண்டும் …..
இந்துக்களாக இருந்தாலும் பரவாயில்லை……வேலை நடக்க வேண்டும் என அவன் இறங்கிவந்தான், அந்த அளவு எழுச்சியினை வள்ளியம்மை கொடுத்திருந்தாள்.
வியாபார நோக்கிலேயே பிரிட்டிஷாரும் அதை அனுமதித்தனர்.
தென்னாப்ரிக்காவில் இந்தியருக்கு உரிமைபெற போராடினாள் வள்ளியம்மை ….இந்துவாக வாழ்ந்து இந்துவாக சாகும் உரிமைக்காக போராடினாள்…
இன்று, வெளிநாட்டு இந்தியர்கள் பலரை பல நாடுகளில் பார்க்கலாம், அவர்கள் 18-ம் நூற்றாண்டில் அப்படி தொழிலாளிகளாக வரும்போது அவர்களிடம் பணம் இல்லை, நகை இல்லை, படிப்பு இல்லை…
இந்தியா ஏழை தேசமாகி கிடந்தபோது இவர்களிடம் ஏதுமில்லை….
உடல் உயிர் என இரண்டை மட்டும் கொண்டு கிளம்பியவர்கள் இன்னொன்றையும் தங்களோடு எடுத்து வந்தார்கள் அது இந்துமதம்.
மற்ற அனைத்தையும் இழந்தாலும், அவர்கள் இந்து என்கிற உணர்வை இழக்கவில்லை. அதுதான் இன்று உலகெங்கும் அவர்கள் சென்ற இடமெல்லாம் இந்து ஆலயங்களாக எழுந்து நிற்கின்றது…..
அது மலேயா, சிங்கப்பூர், பிஜி, ரியூனியன் ஐலன்ட், ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவு என எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்து மத அடையாளமாக, இந்துகோவில்கள் நிற்கின்றன……!!!
……………………………………………………………………………………………………………………………………………………









இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…