— சரித்திரத்திலிருந்து ஒரு பகுதி — ராஜா மான்சிங் ….!!!

………………………………………

…………………………………………

இந்திய – முகலாய வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி ….

………………………………

இந்தியாவின் இராஜபுதனத்திலுள்ள ஆம்பர் என்னும் நாட்டை ஆண்ட மன்னர்களுள் இராஜா பார்மல் (Raja Bharmal) என்பவர் முக்கியமானவர்.

இராஜா பார்மலின் மகன் பகவன் தாஸ் என்பவனாவான்.

பகவன் தாசின் மகனே மான்சிங் (Man Singh 1550-1614) ஆவார்.

பார்மல், சாங்கநர்(Sanganer) என்னுமிடத்தில் ஆஜ்மீரை நோக்கிவந்த மொகாலய மன்னன் அக்பரை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பார்மல், தன் மூத்த மகள் ஹர்கா பாய் (என்னும் ஜோதா பாய்… ) என்பவரை திருமணம் செய்து கொள்ளும் படி வேண்டிக்கொண்டார். அக்பரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். (திருமணத்திற்குப் பிறகு அந்தப்பெண் மரியம் உஸ் சமானி (Maryam Uz Zamani) என்ற பெயரில் அழைக்கப்பட்டார்….)

எனவே 1562 இல் அக்பருக்கும் பார்மலின் மளுக்கும் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் விளைவாக பார்மலின் மகனான பகவன்தாசும், பார்மலின் பேரனும் பகவன்தாசின் மகனுமான மான்சிங்கும் அக்பருக்கு ஆதரவாகப் செயற்படத்தொடங்கினர். இவர்களுக்கிடையிலான தொடர்பு வலிமை பெற்றுக்கொண்டது.

அக்பருடைய ஆட்சியில் இராஜா மான்சிங் ஒரு சிறந்த படைத்தலைவராக இருந்தார். அக்பரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் திறமைமிக்க தளபதியாகவும் விளங்கினார். பல வெற்றிகளையும் அக்பருக்காக மான்சிங் பெற்றுக்கொடுத்தார். சூரத்திலுள்ள கோட்டையைக் கைப்பற்ற அக்பர் மான்சிங்கையே அனுப்பியிருந்தார்.

அக்பர் ஆட்சியேற்ற சில ஆண்டுகளில் மேவோரின் சுதந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்ட பிரதாப்சிங் அக்பருக்கு பணிய மறுத்தான். எனவே முதலில் சமாதானமாக பேசி வழிக்கு கொண்ட வர அக்பர் முயன்றார். எனினும் அது பலனளிக்கவில்லை. அதனால் அக்பர் கி.பி 1573ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஆம்பர் இளவரசர் மான்சிங்கை பிரதாப் சிங்கை சந்திக்க உதயபூருக்கு அனுப்பினார்.

பின்னர் 1576 ஆம் ஆண்டு மான்சிங் 5000 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைவீரர்களுடனும் இராணுவ அதிகாரிகளுடனும் ஆஜ்மிரிலிருந்து புறப்பட்டார். ஆயினும் பிரதாப்சிங்கின் படைத் தாக்குதலை தாங்க முடியாத மொகாலயப் படை நிலைகுலைந்தது. எனினும் மாறாத மன உறுதியோடும் தளராத நம்பிக்கையோடும் போரிட்ட மான்சிங்கைப் பார்த்து வியந்து போன மொகாலயப் படைகள் மீண்டும் தங்கள் தளபதியோடு சேர்ந்து போரிட்டனர். அப்போரிலே மான்சிங் வெற்றிபெற்றாலும் அக்பரின் நோக்கம் நிறைவேறவில்லை.

பின்னர் மான்சிங் இலாகூரின் ஆளுநராக அக்பரால் நியமிக்கப்பட்டார்.

அதன்போது அக்பரின் உண்மையான ஆதரவாளர் என்பதை மான்சிங் நிரூபித்தார். பீகார், ஒரிசா பிரதேசங்களின் ஆளுநராகவும் மான்சிங் செயற்பட்டுள்ளார். இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடைப்பட்ட இடைப்பட்ட எல்லைப்பகுதில் வாழ்ந்து வந்தவர்கள் யூசுப்சைஸ் என்னும் மலைவாழ் மக்கள். அவர்கள் சுதந்திரமாக வாழ விரும்பினார்கள்.

இவர்களை அடக்க மன்னர் அக்பர் பிரதான தளபதியோடு மான்சிங்கையும் துணைக்கு அனுப்பினார். இந்த தாக்குதல் மூலமாக அந்த மலைவாழ் மக்களின் தாக்குதல்களும் எதிர்ப்புக்களும் முறியடிக்கப்பட்டன.

அக்பரின் அருமை நன்பர் அபுல்பசாலை அக்பரின் மகன் சலீம் – கொலை செய்தான். இதனால் அக்பர் சலீம் மீது கடுமையான கோபம் கொண்டார். அந்நிலையில் சலீம் தன் தந்தை அக்பருக்கு எதராகவும் சதிச்செயலில் ஈடுபட்டார். எனவே அக்பர் தனது பேரனும் சலீமின் மகனுமான குசுரூ மீது முனைப்பைச் செலுத்தினார். அக்பர் தன் பேரனை வாரிசாகக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அச்சதியினை மான்சிங்கும் முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அக்பரைத் தொடர்ந்து சலீம் பதவியேற்றுக் கொண்டார்.

சலீம் தம் ஆட்சியில் மான்சிங்கிற்கு எவ்விதமான கெடுதலும் செய்யவில்லலை. மான்சிங்கும் கடைசிவரை பேரரசிற்கு விசுவாசத்தைக் காட்டி கி.பி 1614 இல் இறந்து போனார்.

இராஜா மான்சிங் கவியுலகப் புலவராகவும், புரவலராகவும் இருந்து புகழ்பெற்றார்.

அரசவைப் புலவராக இருந்த கங்கா பிரசாத் என்பவர் இயற்றிய கவியொன்றிற்கு மான்சிங் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். மான்சிங் குவாலியரில் ஒரு இசைப்பள்ளியை ஏற்படுத்தி நடத்தினார். கலை மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக மான்சிங் விளங்கினார். வீரமும் இராஜதந்திரமும் கொண்டவரான மான்சிங் அக்பர் ஆட்சியிலும், அக்பரின் மகன் சலீம் ஆட்சியிலும் உயர் பதவிகளைப் பெற்று பேரரசின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பங்காற்றி புகழடைந்தார். ( உதவி -இணையம் … )

……………………………………………………………………………………………………………………………………………….

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தூக்கில் இடப்படும் முன் புரட்சிவீரன் “பகத் சிங்” பிரிட்டிஷாரிடம் என்ன வரம் கேட்டார்…?

This gallery contains 1 photo.

……………………………………………………………………………………………….     …………………………………………………………………………………………………………………   சென்ற வாரம் சாவர்க்கர் பற்றிய ஒரு விவரமானகட்டுரை இந்த தளத்தில் வந்தது. அப்போதே நினைத்தேன்… சாவர்க்கருக்கும், பகத்சிங்குக்கும் உள்ள வித்தியாசத்தைப்பற்றியும் கொஞ்சம் ஒப்பிட்டு எழுத வேண்டுமென்று… சாவர்க்கர், தனது  பிற்காலத்தில் – பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியும்பிரிட்டிஷார் எதிர்பார்க்கும் விதத்தில், தான் நடந்துகொள்ளதயாராக இருப்பதாக தெரிவித்தும் கடிதம்  எழுதியவர்….. ————————————- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொடுமை, மகா கொடுமை …!!! பாவிகள் – மகா பாவிகள் …..

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………………………………… ‘என் மகனை யார் பார்த்துக்கொள்வார்?’: ஊடுருவல்காரர் எனக் சந்தேகிக்கப்பட்டு மும்பையில் கைது செய்யப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கப் பெண் – 40 வயதான ஷாஹிதா ஃபக்கீர் ஜூலை 18 அன்று மும்பையில், மார்க்கெட்டில் இருக்கும்போது – கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாகத் தனது குடும்பத்துடன் நவி மும்பையில் வசித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“அவன் காந்தியைப் பார்த்தது கிடையாது – ஆனாலும் “….!!! -அசோகமித்திரன் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………… ……………………………………………………………………………….. அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு  வெகு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

24-25-ல், திமுகவுக்கு வந்த 365 கோடி …!!! வந்ததை ஒப்புக்கொள்பவர்கள் கொடுத்தவர் யார் என்பதை மறைப்பது ஏன் … ???

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. ………………………………………………………………………………… News item from India Today – …….. the DMK, which topped the list with Rs 365.784 crore. More than 99 per cent of the donations received by the Trinamool Congress came through cheques and demand drafts, with … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிவாஜி’யின் சதாரம் தெருக்கூத்து …. நாம் பார்த்திராத காட்சி ….!!!

This gallery contains 1 photo.

1987…Sivaji performs for his family in the US……Nobody expected this…!!! ………………………………. ………………………………. 1987-ல் அமெரிக்கா சென்றிருந்த சிவாஜி ஒரு லேசான தருணத்தில், குடும்பத்தினரின் விருப்பத்திற்காக, சிறு வயதில், பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் தான் நடித்த சதாரம் நாடகத்தின் ஒரு சிறு சாம்பிளை குஷியாக செய்து காட்டியதை, அவரது தம்பி சண்முகத்தின் மகன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆப்பசைத்த குரங்கின் கதை – உதயநிதி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா …???ஆங்கில ஊடகவியலாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் …!!!

This gallery contains 2 photos.

……………………………………… …………………………………… திரு.உதயநிதி அவர்கள் 2 ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு ரூ,100- கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் …. தனது பேச்சைத் தவறாக சித்தரித்து சர்ச்சையை உருவாக்கியதாகக் கூறி ஆங்கில ஊடக செய்தியாளர்களுக்கு உதயநிதி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்ரி சேஷாத்ரியின் செய்தி அலசல் கீழே காணொளியில் …….. ……………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக