ஏன் தடை செய்யப்பட்டது – “சட்லெஜ் ” .. ???படத்தை பார்த்த கனடா நண்பர் எழுதியிருப்பதும் …. அதன் பின்னணியும் ….

………………………………..

………………………………..

வட இந்தியாவில் தற்போது மிகவும் பரபரப்போடு பேசப்பட்டு வரும் தலைப்புச்செய்தி – இரண்டு நாட்களுக்கு மட்டும் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி, பின்னர் காரணம் சொல்லப்படாமல் விலக்கிக்கொள்ளப்பட்ட இந்தி திரைப்படம் சட்லெஜ் ….

இது பற்றி கனடா நண்பர் வெங்கி ( வெங்கடேஷ் ஸ்ரீநிவாசகம் …!!! ) தரும் பரபரப்பான தகவல்கள் கீழே –

………………………………………………..

இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்குப் பின், 1995-ல், சட்லஜ் நதி பாயும் மாநிலமான பஞ்சாபில் பத்து வருடங்களாக நடைபெற்று வந்த, ஆயுதமேந்திய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு காவல் துறைக்கும் இடையிலான யுத்தம்/சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.

முதலாவது சம்பவம், 1995 ஆகஸ்ட் 31-ம் தேதி, சண்டிகர் சிவில் செக்ரட்டரியேட்டுக்கு வெளியே நடந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்தே, காவல்துறை சீஃப் -ன் தலைமையில், இன்டெலிஜன்ஸ் பிரிவின் உதவியோடு அரசு, கிளர்ச்சியாளர்களை கடுமையான வழிமுறைகள் மூலம் அடக்கி வந்தது (ஆனால், பின்னர், இக்காலகட்டத்தில் அதிகப்படியான நீதிக்குப் புறம்பான படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும் நிகழ்த்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது).

1995 மத்தியில் மனித உரிமை ஆர்வலரான ஜஸ்வந்த் சிங் கல்ரா, அரசு காவல்துறை நிகழ்த்திய ஆயிரக்கணக்கான சட்டவிரோதமான தகனங்களையும், நீதிக்குப் புறம்பான கொலைகளையும் சாட்சியங்களோடு வெளியிடுகிறார். இரண்டாவது சம்பவத்தின் ஆரம்பம், 1995 செப்டம்பர் 6-ம் தேதி நிகழ்கிறது.

‘Satluj’/’Punjab 95’ திரைப்படம் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ரா-வின் கதையைச் சொல்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது படம். போலீஸிற்கும், கிளர்ச்சி அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் சாதாரண மக்கள் பட்ட இன்னல்களையும், இரத்தம் தோய்ந்த வரலாற்றையும் பேசுகிறது. சண்டையை சாக்காக வைத்துக்கொண்டு சில போலீஸ்காரர்கள் சாதாரண மக்கள் மீது நிகழ்த்திய கொடூரங்களைச் சொல்கிறது. சட்லஜ் நதி சடலங்கள் மிதக்கும் இரத்த ஆறாக மாறியதை சித்தரிக்கிறது. ஆற்றில் உடல்கள் வருவதாக ராஜஸ்தான் அரசிடமிருந்து செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகளின் மார்ச்சுவரிகள் கிளெய்ம் செய்யப்படாத பிணங்களால் நிரம்பி வழிகின்றன. கொத்து கொத்தாக கிரிமிடோரியங்களில் அநாதைப் பிணங்கள் என அறிவிக்கப்பட்டு சடலங்கள் எரிக்கப்படுகின்றன.

ஜஸ்வந்த் சிங் பெற்றோர்களுடனும், குடும்பத்துடனும் அம்ரிஸ்டரில் வசிக்கிறார். ஜஸ்வந்த்-ன் மனைவி பம்மி (பரம்ஜித் கௌர்), நூலகத்தில் வேலை செய்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நண்பன் க்ருபால்-ன் அம்மா பீபி குர்பேஜ்-ஐ கடந்த பத்து நாட்களாக காணவில்லை. மகன் க்ருபால் காணாமல் போனதிலிருந்தே கோவிலே கதியாகக் கிடந்தாள் அவள். பீபியைத் தேடி கிளம்புகிறார் ஜஸ்வந்த்.

‘டான் டரன்’ கிரிமடோரியத்தில் அவளை தகனம் செய்த விபரத்தை கண்டுபிடிக்கிறார் ஜஸ்வந்த். போலீஸில் வேலை செய்யும் மற்றொரு நண்பன் சத்நாம் என்ன நடந்தது என்று ஜஸ்வந்த்-இடம் சொல்கிறான். டான் டரன் கிரிமடோரியத்தில் மட்டும் உரிமை கோரப்படாதவை என்று பதிவு செய்யப்பட்டு 600 சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கிரிமடோரியங்களிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரிக்கிறார் ஜஸ்வந்த்.

நீதிமன்றத்தில் போலீஸிற்கு எதிராக ஜஸ்வந்த் வழக்கு தொடுக்க விஷயம் நாளிதழ்களில் வெளிவந்து அரசியல்வாதிகளுக்கும், போலீஸிற்கும் அழுத்தம் அதிகமாகிறது. போலீஸ் சீஃப் ‘இந்தர்பால் சிங் பிட்டா’ கிளர்ச்சியாளர்கள் சரணடையும் விழாவில் மனித உரிமை என்ற பெயரில் நடமாடும், வெளிநாட்டிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசுக்கெதிராகவும், போலீஸிற்கு எதிராகவும் செயல்படுபவர்களை சாடுகிறார்.

போலீஸ் சீஃப் பிட்டா-வின் பணிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிகிறது. அதை இரண்டு வருடங்கள் மேலும் நீட்டிக்க மேலிடத்தில் ஆலோசனை நடக்கிறது.

பிட்டா, சர்ச்சைக்குரிய காவல் அதிகாரி சுர்ஜித் சிங்-கை ‘டான் டரன்’ எஸ்.எஸ்.பி-யாக நியமனம் செய்கிறார். ஜஸ்வந்த்-ற்கு கனடா சர்வதேச மனித உரிமை அமைப்பிலிருந்தும், ‘உலக சீக்கிய அமைப்’பிலிருந்தும் அழைப்பு வருகிறது.

போலீஸ் அராஜகத்தை சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்ய இது நல்ல தருணம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஜஸ்வந்த் கனடா செல்கிறார். பஞ்சாபிற்கு திரும்பினால் அவர் உயிருக்கு ஆபத்தென்றும், அவரை குடும்பத்தோடு கனடாவிலேயே தங்கி விடுமாறும் கனடா ஜஸ்வந்த்-தைக் கேட்டுக்கொண்டும் அதைக் கேட்காமல் பஞ்சாப் திரும்புகிறார் ஜஸ்வந்த்.

அரசு தனக்கு தரும் போலீஸ் பாதுகாப்பையும் மறுத்து விடுகிறார். உள்ளூர் எம்.எல்.ஏ, ஜஸ்வந்த்-இடம் எஸ்.எஸ்.பி சுர்ஜித் சிங்-கினால் அவர் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று எச்சரிக்கிறார். ஜஸ்வந்த்-தின் போலீஸ் நண்பர் சத்நாம் உட்பட அவர் குடும்பத்தில் அனைவரையும் சுட்டுக்கொல்கிறது போலீஸ்.

சண்டிகரில் சிவில் செக்ரட்டரியேட்டுக்கு முன்பாக நடந்த குண்டுவெடிப்பில் முதலமைச்சர் கொல்லப்படுகிறார். 1995 செப்டம்பர் 6-ம் தேதி வீட்டின் முன் கார் கழுவிக்கொண்டிருந்த ஜஸ்வந்த் சிங் காரில் கடத்தப்படுகிறார்.

ஜஸ்வந்த் சிங்-கை கண்டுபிடிக்கும் பொறுப்பு சி.பி.ஐ-இடம் ஒப்படைக்கப்படுகிறது. சி.பி,ஐ-யின் கூடுதல் இயக்குநர் சமுத்திர சிங் விசாரணையைத் துவங்குகிறார்…

‘சட்லெஜ்’ எல்லோருக்குமான படமல்ல……

இளகிய மனம் கொண்டவர்கள் may feel discomfort. The movie was very intense and dense. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பின் இந்தியாவில் மட்டும் தற்காலிகமாக மறு அறிவிப்பு வரும் வரை ஸ்ட்ரீமிங் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளில் ஜீ குளோபல்-ல் கிடைக்கிறது.

( நன்றி – கனடா நண்பர் வெங்கி ( வெங்கடேஷ் ஸ்ரீநிவாசகம் …!!! )

…………………………………………………………

இறுதியில், ஜஸ்வந்த் சிங்க் கால்ரா’வுக்கு நீதி கிடைத்து விட்டது என்பது மேற்கண்ட கட்டுரையை படித்த பிறகு –

நான் – தேடியெடுத்த – கீழ்க்கண்ட தகவல்களின் மூலம் உறுதியாகிறது…..

It looks that ultimately, justice has been done to Jaswant Singh Khara –

the following facts that I could collect after reading the above article – confirm the above….

…………………………………………………………………………

The Supreme Court-mandated CBI investigation and the subsequent decade-long legal trials exposed a massive campaign of extrajudicial killings and officially brought Jaswant Singh Khalra’s killers to justice.

The Investigation into Secret Cremations

  • The Evidence Base: Working as a bank employee and activist, Jaswant Singh Khalra visited municipal corporation offices and cremation grounds like Patti, Tarn Taran, and Durgiana Mandir. He meticulously analyzed firewood purchase receipts. Because each body required roughly 300 kilograms of wood, he calculated a vast discrepancy between official crime data and the high volume of wood bought by police to cremate “unidentified and unclaimed” bodies.

  • The Scope: Khalra’s initial 1995 press note exposed 2,097 illegal cremations in the Amritsar district alone. While his family and human rights groups maintained that the total number across Punjab exceeded 25,000, a subsequent high-powered CBI probe ordered by the Supreme Court confirmed that the Punjab Police had unlawfully cremated thousands of people.

  • The State Actions: The CBI uncovered that the police routinely picked up youth on suspicion, executed them in custody, and secretly burned the bodies without notifying their families to eliminate evidence.

The Legal Trials and Convictions

  • The Abuse of Power: The courts established that Mr. Khalra was abducted from his Amritsar home on September 6, 1995, by order of local police chiefs, including former Tarn Taran SSP Ajit Singh Sandhu. Khalra was kept in illegal custody, tortured for weeks, and eventually shot. His body was dumped in a canal to ensure it was never found.

  • The 2005 Trial Court Verdict: In November 2005—ten years after the crime—an Additional Sessions Court convicted six Punjab Police officers for his abduction and murder. DSP Jaspal Singh and ASI Amarjit Singh received life sentences, while four lower-ranking officials received seven-year sentences.

  • The High Court & Supreme Court Decisions: The Punjab and Haryana High Court later acquitted one officer (Amarjit Singh) but enhanced the sentences of the other four personnel to life imprisonment. In November 2011, the Supreme Court of India officially dismissed the officers’ appeals and upheld the life terms for all five remaining policemen, noting the severe extent of witness intimidation and state-led efforts to derail justice.

…………………………………………………………………………………………………………………………………………….

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுமித்ரா – சிறுகதை ……

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………… மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நயினாருக்கு, ஸ்டாலின் மீது வராத கோபமும், ஆத்திரமும் – விஜய் மீது வருவது ஏன் ….??? காரணம் (கீழே) இப்போது தான் புரிய வருகிறது….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………….. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக ஆட்டையை போட்ட இளையராஜா என்ற மோசடி பேர்வழி உதவியோடு, திமுக ஆட்சியில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி மதிப்பிலான நிலத்தை அன்றைய நெல்லை MLA நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி நெல்லையில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது எப்படி…??? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு அற்புதம் இங்கே – ” அச்சுதம், கேசவம் …. “

This gallery contains 2 photos.

………………………. ………………………. ………………………. ஒரு அற்புதமான காணொளி இங்கே …. முதலில் வீடியோவைபாருங்கள் / கேளுங்கள்… பிறகு, கீழே அந்த அற்புதம் என்னவென்றுசொல்லி இருக்கிறேன்…. …………… ……………. இந்தக் காணொளி – முற்றிலுமாக –100-க்கு 100 செயற்கை நுண்ணறிவை ( AI )பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது … !!! வியப்பாக இல்லை….??? ……………………………………………………………………………………………………………………….. Latest – Addition … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“I Was Drawn to Vijay’s Karur Speech!” –விஜய்’யால் ஈர்க்கப்பட்ட ஒரு பெரியவரின் வாக்குமூலம் … !!!

This gallery contains 1 photo.

…………………….. ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

— புண்ணியம் தேடுவது எப்படி … ???

This gallery contains 2 photos.

…………………………… ……………………………… மாலை நேரத்து வெயில் மெல்லத் தாழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெருநகரத்தின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் தங்களுக்குத் தேவையான ஆடைகளையும், நகைகளையும் வாங்குவதில் மூழ்கியிருந்தனர் அரவிந்தும் அவனது மனைவி மாலதியும். பல மணி நேரத் தேடலுக்குப் பின், கைகளில் விதவிதமான பல வண்ணப் பைகளில் வாங்கிய பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறினர். “பசிக்குதுங்க, இப்படியே பக்கத்துல … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரத்யேகமானதொரு கடல் – வித்தியாசமானதொரு சிறுகதை …..

This gallery contains 1 photo.

அம்மா சகுந்தலா அப்படிச் சொல்வாள் என்று தீபக் எதிர்பார்க்கவில்லை.. தீபக் கார் வாங்கிய இந்த ஐந்தாண்டுகளில் சகுந்தலா அதில் ஏறுவது இதுதான் முதல் முறை. அவளேதான் காலையில் அவனை அழைத்திருந்தாள். “இந்தா அம்மா…” என்று வைஷ்ணவி அலைபேசியை அவனது கையில் கொடுத்தபோது அவன் அப்போதும் படுக்கையில் உருண்டுகொண்டுதான் இருந்தான். `விடுமுறை நாளுக்கான காலை, மதியத்தில்தானே தொடங்கவேண்டும்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக