விவேகானந்தர் – வேகமாகவும், ஆழ்ந்தும் படித்தது எப்படி …??? ஓஷோ சொல்கிறார் ….

……………………………………..

……………………………………….

விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார்.

இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார்.

‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘

‘ டுஷ்சென் ‘ னின், உபநிடத மொழிபெயர்ப்பு நூல்கள் மிகவும் உலகப் புகழ்வாய்ந்தவை.

எந்த புத்தகத்தையும்- படித்த உடன்,

அதன் உண்மை பொருளை கிரகித்து விடும் திறமைகள் பெற்றவர்.

ஜெர்மனியில் உள்ள அவரது வீட்டில்தான் விவேகானந்தர் விருந்தினராக தங்கியிருந்தார்.

ஒருநாள் காலை, டுஷ்சென் தமது படிப்பறையில் அமர்ந்து ஒரு ஜெர்மன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவு பெரிய மேதை –

பதினைந்து நாட்களாக அந்த புத்தகத்தை படித்து கொண்டு அதில் உள்ள கருத்துகளை புரிந்து கொள்வதில் அவர்-

சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

பதினைந்து நாட்களில், பாதி புத்தகத்தைக் கூட அவர் தாண்டவில்லை.

அந்த புத்தகம்,

அந்த அளவு நுட்பமான செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தது….

அப்போது விவேகானந்தர், அவரது அறைக்குள் நுழைந்தார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

‘ டுஷ்சென் ‘ தான் – சில நாட்களாக படித்துக் கொண்டிருக்கும் அந்த மகத்தான, நுட்பமான கருத்துக்கள் அடங்கிய,

தன் கையிலிருக்கும் புத்தகத்தை பற்றியும் விவேகானந்தரிடம் பேசினார்.

விவேகானந்தர்,

தானும் அந்த புத்தகத்தை படிக்க விரும்புவதாகவும்,

அதை கொடுத்தால், படித்துவிட்டு அன்று மாலை நேரத்துக்குள் திருப்பி தந்து விடுவதாகவும் சொன்னார்.

உடனே டுஷ்சென்,

‘ நோ…நோ.. அப்படியெல்லாம் உங்களால் முடியாது. இந்த புத்தகம் உங்களுக்கு புரியவும் புரியாது ‘என்றார்.

‘பரவாயில்லை….

படித்துப் பார்க்கிறேன்.

கொடுங்கள் அதை ‘ என்றுஅந்த புத்தகத்தை வாங்கி சென்ற விவேகானந்தர்,ஒரு மணி நேரத்தில், அந்த புத்தகத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.

நான் அப்போதே சொன்னேன்…..

உங்களால் முடியாது என்று. அறிவை குழப்பிவிட்டதா ? ‘

என்றார் டுஷ்சென்….

இல்லையே. மிக நல்ல புத்தகம்.

முழுவதும் படித்து முடித்து விட்டேன்.

உண்மையில் ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது இது.’

என்றார் விவேகானந்தர்…..

அதிர்ந்து போய்விட்டார் டுஷ்சென். விவேகானந்தர் பொய் சொல்ல மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.

இருப்பினும்,அவரை சோதித்துப் பார்க்க முடிவு செய்தார்.

பதினைந்து நாட்களாக,

அந்த புத்தகத்தை படித்து தான் குழப்பிக்கொண்ட

செய்திகளை பற்றி ஒவ்வொன்றாக விவேகானந்தரிடம் கேட்டார்.

அதற்கு விவேகானந்தர்,

மிகத் தெளிவாக விளக்கமாக அவருக்கு சொன்னதோடு அல்லாமல்,

அவர் கேட்கிற செய்தி, அந்த புத்தகத்தில் எந்த பக்கத்தில் உள்ளது,

எந்த தலைப்பின்கீழ் சொல்லப்பட்டிருக்கிறது

என்பது பற்றியும் சொல்லிக் கொண்டே போனார்.

உறைந்து போனார் டுஷ்சென்.

இது என்ன அதிசயம் ?

இது எப்படி சாத்தியம் ?

அவ்வளவு பெரிய புத்தகம், நிதானித்து படிக்க வேண்டிய நுட்பமான செய்திகள்.

ஒரு மணி நேரத்தில் படித்து விட்டு இத்தனை விளக்கங்களா…???

அதை விவேகானந்தரிடமே கேட்டார் டுஷ்சென்.

அதற்கு – ‘ படிப்பதற்கு சில முறைகள், சில வகைகள் இருக்கின்றன.

நான் மனதுக்குள் படிப்பதில்லை…..

மனதால் படிக்கிறேன்.

ஒரு புத்தக ஆசிரியர், அவர் சொல்ல வந்த புத்தகத் தலைப்பில் இவ்வளவுதான் சொல்ல முடியும் என்பது என் மனதில் பட்டுவிடும்.

அந்த புத்தகத் தலைப்பிலும்,

பிறகு வருகிற குறுந்தலைப்பிலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என் மனம் உணர்ந்து விடும்.

வேறு அதில் என்ன இருக்கப் போகிறது?

என்றார் விவேகானந்தர் நிதானமாக…. !!!

……………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாஸ்திரமும், சம்பிரதாயங்களும் – ரமண மகரிஷியின் வார்த்தைகளில் …..

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………………………………… பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்… சம்பிரதாயமும் வேண்டாம்… மணிகளும் வேண்டாம்… மந்திரமும் வேண்டாம்… நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்… அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு… ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்….. முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்… அவருக்கு சேவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடையாரும் நானும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில், பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மூக்குடைவது முதல் தடவையல்ல …!!!

This gallery contains 3 photos.

………………………………………………………………. ……………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்கா ஈரானிடம் உதை வாங்குவதும், அசிங்கப்படுவதும் இது முதல்முறை அல்ல… ஏற்கெனவே ஈரானிடம் வம்புக்குப்போய் அமெரிக்கா அசிங்கபட்டு திரும்பிய சம்பவம் ஒன்று உண்டு….. இன்றைய் இளையதலைமுறை இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மன்னராட்சியில் இருந்த, ஈரானில் – 1979 ஜனவரி மாதம், இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மறக்க முடியாத, ஆனால் அதிகம் கேட்கப்படாத – சில சிவாஜி படப்பாடல்கள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ………………………………………………………. சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத –ஆனாலும் மறக்க முடியாத – சில சிவாஜி படப் பாடல்கலகள்விடுமுறை நாளில் – இங்கே – நண்பர்களின் பார்வைக்கு ….. நேரம் இருந்தால், பாருங்கள் ….!!! …………………………….. சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது… இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“மெர்க்குரி பூக்கள் “உருவானது எப்படி …???பாலகுமாரன் ….. !!!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. இந்த இரண்டாயிரத்து இரண்டில் – என் வயது ஐம்பத்தியேழு….. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதை எழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணதாசனின் மகன் – அண்ணாதுரை … ??? – !!!

This gallery contains 2 photos.

…………………………….. (அண்ணாதுரை – கண்ணதாசன் …!!!) ……………………………… ( இது காந்தி கண்ணதாசன் ….) ………………………………… அண்ணாதுரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக