…………………………………….

……………………………………….
துக்ளக் ஆசிரியர் சோ, தனது கடைசி வருட கூட்டங்களில்,
அதாவது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு
பேசிய கூட்டங்களில் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசுவது வழக்கம்.
பாஜக முன்வைத்த ” காங்கிரஸ் முக்த் பாரத்”
( காங்கிரஸ் இல்லாத பாரதம் ) என்கிற கோஷத்தை
ஆசிரியர் சோ அவர்கள் ஏற்கவில்லை…
” மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட,
காங்கிரஸ் கட்சி வலுவிழந்து போவதை நான் விரும்பவில்லை.
அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.
இரண்டு தேசிய கட்சிகள், பாஜகவும், காங்கிரஸும்
ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக எப்போதும் வலுவாக
இருக்க வேண்டும்… மாநில கட்சிகள், மத்திய ஆட்சியை
கைப்பற்றுவது நிச்சயமாக விரும்பத்தக்கதல்ல…”
இதே கருத்து தான் எனக்கும்….
காங்கிரஸ் இப்போதைக்கு மத்திய்ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு
பலம் பெறும் என்று நான் நினைக்கவில்லை… ஆனாலும், த்ரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக – போன்ற கட்சிகளின் நிலை,
காங்கிரஸ் கட்சி, முனைந்து கடுமையாக உழைத்து பலம் பெற்று,
அகில இந்திய அளவில், பாஜவுக்கு மாற்று காங்கிரசாகத்தான் இருக்க முடியும் என்கிற கருத்தை உறுதிப்படுத்த வேண்டும்…..
……………………………………………………………………………………………………………………………………………..









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…