காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

………………………………..

………………………………

தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று.

பாசமலர்…..திரைப்படம்.

இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.

முதல் இரவுக்கு முன்பு – ஒரு தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.

பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.

…………….

மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே

நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ…

………….

என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நையாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.

திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும்.

இது காலம் கடந்து இன்றும் நினைவில் நிற்கும் பாடல்.

கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது –

…………………….

எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

…………………..

கடைசி வரிகள் –

……………………..

மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும்.

மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும்.

இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ…

……………………………………….

இப்போது பாடலைப் பாருங்கள் – கேளுங்கள்….. அதன் அருமை புரியும்…

………………………………………………………….

கண்ணதாசனுக்கு ஏது மறைவு ,,,??? இறவாப்புகழ் உடையவர் அவர்…. ….!!!

…………………………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………………….. $400 பில்லியன் ‘சூப்பர்மேன்’ விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்… அமெரிக்காவின் பெருமை, ‘அசைக்க முடியாத சக்தி’, ‘எதிரி கண்களுக்குத் தெரியாத மாயாவி’ என வர்ணிக்கப்பட்ட எஃப்-35 (F-35) போர் விமானத்தின் பிம்பம், ஈரான் வான்பரப்பில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது.. சுமார் 30 ஆண்டுகால உழைப்பு, 400 பில்லியன் டாலர் முதலீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரமலான் வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………….. இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும் – இந்த வலைத்தளத்தின் சார்பிலும்,என் சார்பிலும், உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!!

This gallery contains 2 photos.

………………………………………………………. ………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 )

ஆனால், அன்றிரவு ஜப்பானிய அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது. நேதாஜியை – ரஷ்யா படையெடுத்து வரும் – ஆனால் இன்னமும் ஜப்பான் வசமிருந்த – மன்ஞ்சூரியாவில் பாதுகாப்பாக கொண்டு போய் விடுவதாக ஜப்பானிய அரசு உறுதி கூறியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தலாம் என்கிற எண்ணமும் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் முன்னதாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….”

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடல் பிறந்த கதை…. அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!!

This gallery contains 3 photos.

…………………………… ……………………………. ……………………………… ஜெயமோகன், மிகவும் மென்மையாகத்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்……சூடு சொரணை உள்ளவர்களுக்குத் தான் இத்தகைய மென்மையான தாக்குதல் எல்லாம் தகும்……!!! நம் நாயகன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் – சகோத்ரி சின்மயி போன்றவர்களின் உரைகளே அவருக்கு உரைத்ததில்லையே ….. ………………………………………………. தமிழுக்கு அவமானம்…. சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்