3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!!

……………………………….

……………………………….

நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார் ஓரு மத்திய அமைச்சர்.

’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார் ஒரு பெண் எம்.பி.

‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார் இன்னொரு அரசியல்வாதி …

இன்னும் சிலர் -நேரு நினைவு அருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர் ….

நாடாளுமன்றத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நேருவை குறைகூறிப் பேசுவது ஒரு சிலருக்கு வாடிக்கையாகிப்போனது.

மகாத்மா காந்தியையே மதிக்காதவர்கள், நேருவை கொஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், நேருவை ‘கிரிமினல்’ என்று முத்திரை குத்துவதை சகிக்க முடியவில்லை.

நேரு ‘இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுவதை எளிதாய் கடக்க முடியவில்லை.

1949ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக நேரு சென்றபோது அவருக்கு 60-வது பிறந்தநாள் வந்தது.

அப்போதுதான் ‘ஆர்கனைசர்’ இதழில் நேருவைப் பாராட்டி நாலு பக்கத்துக்கு கட்டுரை எழுதியது RSS.

அதில் – ‘நேரு இந்தியாவைச் சிறப்பாக வழி நடத்துகிறார். இந்தியமக்கள் அவரை வெகுவாக விரும்புகிறார்கள்’ என்று வரிக்குவரி புகழ்ச்சி செய்தார்கள்.

அதற்குப் பின்னாலிருந்த காரணத்தை ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் விளக்கினார். ‘காங்கிரஸ் அவர்களுக்கு இனித்த காலம் அது. அவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாக துடித்துக் கொண்டிருந்தார்கள். நேருவின் ராஜகுருவாக மாற கோல்வால்கர் மிகவும் விரும்பினார்’ என்று சொல்லியிருக்கிறார் அவர்.

நேரு இளவரசனாகப் பிறந்தவர்.

இளவரசனாகவே வளர்ந்தவர்….

ஆனால் – சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைந்ததால், ஆண்டியாக வாழ்ந்தவர்…!!!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பிறகு, அவர் பெரும்பாலும் பணக் கஷ்டத்தில்தான் வாழ்ந்தார். ‘அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமானமாக இருந்தது’ என்று எழுதுகிறார் அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய்.

ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது.

‘வீட்டின் வேலையாள்களுக்கும் சேர்த்து சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்த தயாளன், அந்தக் காலத்தில் அவர் மட்டுமே’ என்று மனம் நெகிழ்கிறார் மத்தாய்.

நேரு எனும் ஆளுமை, சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டவர்.

சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்து செல்லும் நெஞ்சுரத்தை அவர் காந்தியிடம் இருந்து பெற்றிருந்தார்.

‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை. தண்டனையைப் போல ஒரு தவமில்லை’ என்றே, சிறை அதிகாரிகளிடம் சொல்கிறார் அவர்.

ஒரு கணக்கின்படி, நேரு சிறையில் இருந்த நாள்கள் மொத்தம், 3262..

கிட்டத்தட்ட 9 வருடங்கள் அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சிறைவதையை அனுபவித்திருக்கிறார்.

சிறையில் கழிந்தது அவரின் இளமை…. காசநோயால் அவதிப்பட்டு வந்த மனைவியை அருகிருந்து கவனிக்க முடியவில்லை.

அந்தத் தியாகத்துக்குதான் இப்போது கிரிமினல் பட்டம்.

தனது 90 % சொத்துக்களை இந்த பாரத நாட்டிற்கு, தானமாக தந்திட்டவர் நேரு.

1946 ல் அதன் மொத்த மதிப்பு சுமார் 196 கோடி. அவர் வசித்த இல்லமும், ஆனந்த பவனமும் இதில் சேராது.

அவற்றின் இன்றைய மதிப்பு ₹ 12000 கோடி முதல் ₹ 49000 கோடி வரை என்று -கணிக்கப்படுகிறது.

இந்த தேசத்தை கட்டமைக்க, தனது ஆஸ்திகளை அள்ளித் தந்தவருக்கு இன்று கிரிமனல் பட்டம்….!!!

இந்தியா வித்தியாசமான நாடு.

இங்கே ஏகப்பட்ட மொழிகள்.

இருநூறு இனங்கள்.

இரண்டாயிரம் ஜாதிகள்.

இதை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாம் வெளியே வேண்டுமானால் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், உள்ளுக்குள் அது ஆண்டாண்டு காலமாக சமத்துவத்தை சூழ்ந்து சுட்டெரிக்கும் கொடு நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது……..

அந்தக் காலங்களில், அந்த நெருப்பு இன்னும் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தது.

அப்போது மட்டும், ‘அனைவரும் பங்களிப்பதே உண்மையான ஜனநாயகம்’ என்ற எண்ணத்தை உள்ளத்தில் சூடிய நேரு எனும் தலைவன் நம்மிடையே வந்திருக்காவிட்டால், இந்தியா உள்நாட்டுப் போர்களால் உருக்குலையும் இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாறியிருக்கும்.

அத்தகைய மாமனிதனுக்கு இன்று கிரிமினல் பட்டம்..!

நேருவைப் பொறுத்தவரை, அவரது கொள்கை முடிவுகள் இன்று விவாதிக்கப்படலாம். ஆனால் நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததில் அவரது பங்கு என்றும் வரலாற்றில் அழியாதது.

இந்த நாட்டின் விடுதலைக்கு, சுதந்திரத்திற்கு பிறகான வளர்ச்சிக்கு – ஜவஹர்லால் நேருவின் உழைப்பிற்கு, பங்களிப்பிற்கு – அங்கீகாரம் கொடுக்காதவர்களை மனசாட்சி உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்…..

……………………………………………………………………………………………………………………………………….

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று. பாசமலர்…..திரைப்படம். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இந்தப் பாடலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………………….. $400 பில்லியன் ‘சூப்பர்மேன்’ விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்… அமெரிக்காவின் பெருமை, ‘அசைக்க முடியாத சக்தி’, ‘எதிரி கண்களுக்குத் தெரியாத மாயாவி’ என வர்ணிக்கப்பட்ட எஃப்-35 (F-35) போர் விமானத்தின் பிம்பம், ஈரான் வான்பரப்பில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது.. சுமார் 30 ஆண்டுகால உழைப்பு, 400 பில்லியன் டாலர் முதலீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரமலான் வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………….. இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும் – இந்த வலைத்தளத்தின் சார்பிலும்,என் சார்பிலும், உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!!

This gallery contains 2 photos.

………………………………………………………. ………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 )

ஆனால், அன்றிரவு ஜப்பானிய அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது. நேதாஜியை – ரஷ்யா படையெடுத்து வரும் – ஆனால் இன்னமும் ஜப்பான் வசமிருந்த – மன்ஞ்சூரியாவில் பாதுகாப்பாக கொண்டு போய் விடுவதாக ஜப்பானிய அரசு உறுதி கூறியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தலாம் என்கிற எண்ணமும் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் முன்னதாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக