Tag Archives: சிவாஜி

எம்.ஜி.ஆர். பற்றி மேஜர் சுந்தரராஜன் ……

This gallery contains 2 photos.

பல வருடங்கள் மேஜர் சுந்தரராஜன் (1925-2003), சிவாஜிக்கு மிகவும்நெருக்கமானவராக இருந்தார்….ஏதோ காரணங்களால், சிவாஜிக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, நெருக்கம் குறைந்தது…. அதன் பின்னர் எம்.ஜி.ஆருடன் நிறைய படங்களில் நடித்தார்….. மேடை நாடகங்களிலும்,திரைப்படங்களிலும், இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களால்உருவாக்கப்பட்ட பல பாத்திரங்களுக்கு சுந்தரராஜன் உயிர் கொடுத்தார், மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின் மூலம் இவர் பெயருடன் மேஜர் சேர்க்கப்பட்டு, அதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

மலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 )

இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டியஅவசியமே இல்லையென்று நினைக்கிறேன்….. Evergreen Song…. அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்மிகவும் பொருத்தமான சொற்களைப்தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோதுவெளியான படம்…1961 படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….

இந்தப்பாடலை கேட்கும்போதே ஒருவிதஉற்சாகம் தொற்றிக்கொள்ளும்….. இளமை பொங்க குதித்துக்கொண்டு கடற்கரையில்ஆட்டம் போடும் சிவாஜியும், பத்மினியும் ….அவர்களுக்கு இணையாக துள்ளும்விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை…. சிலருக்கு சி.எஸ்.ஜெயராமன் குரல் பிடிக்காது….காரணம் கேட்டால் எந்த கதாநாயகனுக்கும்அவரது குரல் பொருந்தாது என்பார்கள்…. அதனாலென்ன –எந்த கதாநாயகன் ஒரிஜினலாக பாடுகிறார்…?எல்லாருக்குமே பின்னணிக் குரல் தானே….? எனவே கதாநாயகனையும், பாடலையும்பிரித்து ரசிப்பதில் நமக்கென்ன சிரமம்….? சி.எஸ்.ஜெயராமன்,கண்டசாலா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 7 ) -இந்தப் புறா ஆட வேண்டுமானால்…..!!!

நான் பணியில் இருந்த காலத்தில், பல ஆண்டுகள், ஞாயிறு தோறும்காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை டேப் ரிக்கார்டரைதோட்ட வாசல்படியில் வைத்து விட்டு, நான் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருப்பேன்… இந்தப்பாடலின் துவக்கத்தில் ஒரு உரையாடல் வரும்…“இந்தப் புறா ஆட வேண்டுமானால், இளவரசர் பாட வேண்டும்…”அதைத்தொடர்ந்து -“வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்வெண்புறாவே” பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….

மேலேயுள்ள படத்தில், பத்மினியின் தோளில் இருக்கும்குழந்தை தான் சிவாஜி….!!! சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துபல ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் – துணிச்சலாக, நடுத்தர வயது பெண்மணியாக,சிவாஜிக்கு அண்ணியாக – நடித்தார் பத்மினி1955-ல் வெளிவந்த ” மங்கையர் திலகம் ” படத்தில்.இதில் சிவாஜியின் ஜோடி – எம்.என்.ராஜம். தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையில் ஒருஅருமையான பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – (3)சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ….

1963 -ல் வெளியான படம் “குங்குமம்”.சிவாஜியின் சொந்தப்படம்.இயக்குநர்கள் -கிருஷ்ணன்-பஞ்சு.கே.வி.மஹாதேவன் அவர்கள் இசையமைப்பு. இதில் வரும் ஒரு நீண்ட பாடல் (5.48 நிமிடம்) …சின்னஞ்சிறு வண்ணப்பறவை…. இசையமைப்பு அருமை என்பதோடு,இந்த பாடலின் முக்கியத்துவம்சிவாஜியின் முகபாவங்கள் தான்…. நிஜமாகவே இந்தப்பாடலை ஒரு பாடகர் பாடினால் கூடஇந்த அளவு சிறப்பாக பாவங்கள் அமைய வாய்ப்பில்லை. இந்தப்பாடலை டி.எம்.எஸ். தான் பாடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 1 )

பழைய திரைப்படப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர்….(தமிழிலும், ஹிந்தியிலும் கூட …!!! )சின்ன வயதிலிருந்தே, முதலில் ரேடியோ சிலோன்,பிறகு டேப் ரிக்கார்டர்,பிறகு CD player, Video CD Player, பின்னர்தொலைக்காட்சிகள், தற்போது பென்-ட்ரைவ், யூ-ட்யூப்என்று வடிவங்கள் மாறினாலும், நான் தொடர்ந்து என் மனதுக்குப் பிடித்த சில பாடல்களைதவறாமல் வாரம் ஒருமுறையாவது கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.என் இறுதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,