எட்டியூரப்பா போன்ற சேற்றில் புரளும் பன்றிகளை வைத்திருக்கும் பாஜக ….



இந்திய ராணுவம், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களின் மீது நடத்தியிருக்கும் தாக்குதலின் விளைவாக –

பாஜக தேர்தலில் அதிக சீட்டுகளை சுலபமாகப் பெறும் என்று வெளிப்படையாகவே செய்தியாளர்களிடையே உரையாற்றி இருக்கிறார்
கர்நாடகாவின் முக்கிய தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான
எட்டியூரப்பா…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் குறித்து, நாடே கொதிப்பிலும், பரபரப்பிலும், கவலையிலும் ஆழ்ந்திருக்கும்போது –

இது எந்த அளவிற்கு பாஜகவுக்கு லாபம், எந்த அளவிற்கு தேர்தலில் அதிக சீட்டுகளை பெற்றுத்தரும் என்று வெளிப்படையாகவே கணக்கு போடுகிற எட்டியூரப்பா போன்ற சேற்றில் புரளும்
பன்றிகளை வைத்துக் கொண்டிருக்கும் பாஜக தலைக்கு மற்றவர்களின் தேசபக்தியை – கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது…?

தலை மட்டும் என்ன….? எட்டிக்கு சற்றும் குறைந்ததில்லையே…!!
இன்னும் சீட்டுக் கணக்கை வெளிப்படையாக விவாதிக்கவில்லையே தவிர அங்கேயும் இதே போக்கு தானே…?

இந்த நாட்டின் தலைவிதி – தேசபக்தியை பற்றி இவர்கள் சொல்லி மற்றவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to எட்டியூரப்பா போன்ற சேற்றில் புரளும் பன்றிகளை வைத்திருக்கும் பாஜக ….

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இங்கே தலைக்கும், வாலுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.
    சொல்லப்போனால், தலை இதைவிட மோசமாகப் பேசி இருக்கிறது.
    நேற்று முன் தினம் காஜிபூரில் பாஜக தேசிய தலை பேசியது இது –

    // “You go to your homes and light a lamp with a pledge to re-elect Modi Ji,”
    the BJP president said. “The entire country is celebrating Diwali
    after the air strike on terrorist camps.”

    புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இறந்து போன 40 வீரர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சார மேடையில் தனக்கு பின்னே வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்த சாவிலும் ஆதாயம் பார்க்கும் கூட்டம் தானே இது.

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இப்போது இதை தான் நாம் முன்னெடுக்கனும்.

    இந்த கூட்டம் வெறும் பன்னிகள் கொண்ட கூடாரமட்டுமல்ல. அவை இந்த நாட்டை அழிக்க எல்லாவிதத்திலும் முயன்றுகொண்டிருக்கின்ற ஒரு பயங்கரவாத கூட்டம் என்பதை இந்நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லனும்.

    மோடி இதுவரை சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், திட்டக் கமிஷன், புள்ளி விபர ஆணையம், பல்கலைக் கழகங்கள் என்று இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் சிதைத்தது போதாது என்று தற்போது ராணுவத்திலும் கை வைத்திருப்பதாகவே தெரிகிறது.

    இவர் அடுத்த முறை வந்தால் எதுவும் மிச்சம் இருக்காது. இதை தான் ஆர்எஸ்எஸ்ஸும் விரும்புகிறது.

    எல்லாம் கூட்டுக் களவாணிகள்.

    இந்நாட்டின் சாபக்கேடுகள் ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன் பரிவாரங்களும்.

  3. செ. இரமேஷ்'s avatar செ. இரமேஷ் சொல்கிறார்:

    பேசட்டும்.. பேசட்டும்.. இப்படி எல்லாம் பேசுனாதான் இவங்களுக்கு புதுசா ஓட்டு போடலாம்னு நினைக்கிற மக்கா கூட கொஞ்சம் யோசிப்பாங்க.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    இந்த நாட்டை காப்பாற்ற எங்களுக்கு ஓட்டுப் பாேடுங்கள் …என்பதுதானே இவர்களின் எண்ணம் … வெறி ..சிம்பள் …!

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …..! தாங்கள் முன்பு எழுதியது எப்போதும் பொருந்துவது பல முறை எம்மால் சுட்டிகாட்டப் பட்டுள்ளது அதே போன்று ஒன்று தற்போதைய நிலவரத்தில் :–

    // தங்கள் கட்சி வெற்றி பெற இதுவரை மத்திய அரசின்
    அங்கங்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த
    பாஜக தலைமை இப்போது ராணுவத்தை கூட பயன்படுத்த
    துவங்கியிருப்பது ஒரு ஆபத்தான அணுகுமுறை.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம்
    நிகழ்த்திய ஒரு அதிரடி பதில் தாக்குதலை –

    தங்கள் ஆட்சியின் சாதனையாக, பிரதமரின் சாதனையாக,
    “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்கிற சொற்றொடரை பயன்படுத்தி
    விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்….!! பார்ப்போம் – தேர்தல் நெருங்க நெருங்க, இவர்கள்
    இன்னும் எந்த அளவிற்கெல்லாம் போகிறார்கள் என்று…..//

    என்று பதிவிட்டது இன்றும்– இப்போதும் எவ்வளவு அருமையாக எதிர்வரும் தேர்தலுக்கு ராணுவத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் — உண்மைதானே … ?
    அந்த பழைய இடுகை // ……..க்காக எதையும் செய்யும் மத்திய பாஜக அரசு ….!
    Posted on ஒக்ரோபர் 19, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/10/19/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/ — இதை படித்தாலே போதும் ” சாக்கடையில் புரளும் பன்றிகளின் ” யோக்கியதை புரியும் …!!!
    .

  6. மாறன்'s avatar மாறன் சொல்கிறார்:

    வலிமையான கண்டனம்! நன்று அய்யா!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.