சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!

சபாஷ் – சரியான போட்டி !
வாயைக் கொடுத்து
வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!

ஜெ. அடிக்கடி கொடநாடு போவதைப் பற்றி
ஸ்டாலின் விமரிசித்து தேர்தல் முடிந்தவுடன்
ஓய்வெடுக்க ஜெ. கொடநாடு போய் விடுவார் என்றார்.

இதற்கு பதிலளித்த ஜெ. கொடநாடு தமிழ்நாட்டில்
தான் இருக்கிறது – அதனால் இதில் அதிசயம்
ஒன்றுமில்லை.
ஆனால் ஸ்டாலின் தான், அடிக்கடி ரகசியமாக
லண்டன் போய் வருவதற்கு பதிலாக  நிரந்தரமாக
குடும்பத்துடன் லண்டனிலேயே செட்டில் ஆக
நேரிடும் என்றார்.

பதிலுக்கு ஸ்டாலின் -“நான் ஓய்வெடுக்க ஒன்றும்
லண்டனுக்கு செல்லவில்லை. என் உடல் நிலையை
பரிசோதித்துக் கொள்ள 3 முறை லண்டன்
சென்றேன். முதலமைச்சரிடம் (அதாவது அவரது
தந்தையிடம் ! ) ஒப்புதல் பெற்றுத்தான் சென்றேன்.
இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

ஆனால் ஜெ. கொடநாடு போவது எதற்காக ?
ஹெல்த் செக்கப்பா
அல்லது
வெல்த் செக்கப்பா
என்று தெரிய்வில்லை” என்று கிண்டல் அடித்தார்.

இதற்கு இன்னும் ஜெ.பதில் கூறவில்லை.

ஜெ.கேட்கிறாரோ இல்லையோ –

ஸ்டாலினைப் பார்த்து நாம் சில கேள்விகளைக்
கேட்க விரும்புகிறோம் –

1) இன்றைய தினம் சென்னையில் இல்லாத
நவீன மருத்துவ வசதிகளா ?
அதை விட்டு விட்டு லண்டன் செல்வானேன் ?

2) சென்னையில் பார்த்துக்கொண்டால் வெளியே
தெரிந்து சங்கடம் ஏற்படும் என்கிற ரீதியில்
ஏதாவது வெளியில்  “சொல்ல முடியாத”
வியாதிகளா ?

3) சரி – ஒரு தடவை செய்து கொண்டால் –
அது “பரிசோதனை”. ஒரே ஆண்டில் 3 முறை
செய்துகொண்டால்  அது “பரிசோதனையா”
அல்லது “சிகிச்சையா?”

4)இவ்வளவு நாளாக இதை ரகசியம்
காத்தது ஏன் ? சரி இப்போது (தெரியாத்தனமாக)
இவ்வளவு தூரம் சொல்லி விட்டீர்கள் –
பின்னர் என்ன வியாதி என்றும் சொல்லி விட
வேண்டியது தானே ?

இன்றைய தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர்,
நாளைய முதலமைச்சர் – அவரது உடல்நிலை
தகுதி பற்றி தெரிந்து கொள்ள தமிழ் மக்களுக்கு
உரிமை இருக்கிறது தானே ?

மேலும் – ஒவ்வொரு முறையும் அவர் செல்வது
அரசாங்க செலவில் – அதாவது மக்கள் செலவில்.
எனவே – இந்த செலவினத்தை நியாயப்படுத்த
வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கிறது
அல்லவா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, முதலமைச்சர், வாரிசு, ஸ்டாலின், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!

  1. viswamitra's avatar viswamitra சொல்கிறார்:

    சரியான கேள்விகள். ஸ்டாலின் அடிக்கடி லண்டனுக்குச் சென்று வருகிறார். இப்பொழுதுதான் முதன் முறையாக சோதனைக்கு என்று சொல்லியிருக்கிறார். பரிசோதனை செய்து கொள்ளக் கூடத் தகுதியில்லாதவையா இவரது ஆட்சியின் கீழுள்ள மருத்துவ மனைகள்? அதற்கான அருகதையில்லாத தற்குறிகளா அரசு மருத்துவர்கள்? அப்படியானால் இவரும் முரசொலி மாறனும் இவரது குடும்ம்பத்த்வர்களும் மட்டும் வெளிநாட்டு மருத்துவமனைக்குச் செல்வார்கள் மக்கள் எல்லாம் தரமில்லாத தமிழ் நாட்டு மருத்துவமனையில் கஷ்டப் பட வேண்டுமா? ஆனானப் பட்ட வாஜ்பாயி அவர்களே தன் மூட்டு வலிக்கு இந்திய மருத்துவமனையில் தான் சகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த மாஃபியாக் கும்பலின் முக்கிய தலைவன் சிகிச்சைக்குப் போனதோ நியுயார்க் மருத்துவமனைக்கு அதற்கான செலவையும் இன்று வரை ஃபோர்ப்ஸில் இடம் பெற்றுள்ள அவரது பிள்ளைகள் கட்டவில்லை. வெட்கம் கெட்டப் பிச்சைக்காரர்கள். இன்று மருத்துவச் சுற்றுலா என்றும் குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சைக்கும் ஏராளமான வெளிநாட்டினர் ஐரோப்பாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள் அப்படி இருக்க ஸ்டாலின் மட்டும் ஏன் லண்டன் போவானேன்? அப்படி என்ன ரகசிய சிகிச்சை? அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும் அதை இந்திய மருத்துவ மனையில் காண்பித்தால் வெளியில் தெரிந்தி அசிங்கம் ஆகி விடும் என்பதினால் லண்டனுக்குச் செல்வதாகவும் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே? மறைக்க ஏதும் இல்லாவிட்டால் ரகசிய நோய் ஏதும் இல்லா விட்டால் ஏன் இந்த ரகசிய பயணம்?

    அமெரிக்காவில் ஜனாதிபதியோ அல்லது துணை துனை ஜனாதிபதியோ அல்லது ஒரு செனட்டரோ தன் உடல நலத்தை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது. கான்சர் இருந்தால் போட்டியில் இருந்து தானே விலகி விடுவார்கள். அடுத்த முதல்வராக தன்னை அறிவுத்துக் கொள்ளும் ஸ்டாலின் முதலில் தனக்கு என்ன உடல் கேடு என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும். அது பொது மக்களின் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயம் தனிப்பட்ட விஷயம் அல்ல. அவருக்கு எய்ஸோ அல்லது கான்சரோ ம்க்களிடம் சொல்ல வேண்டியது அவர கடமை. இல்லாவிட்டா வதந்திகள் மட்டுமே உலவும் அதைத்தான் மக்களும் நம்புவார்கள். அவரது ஒழுக்கக் கேட்டான பொறுக்கித்தனமான நடவடிக்கைகள் அந்த விதமான வதந்திகளுக்கு வலு சேர்க்கவே செய்யும்.

    அது போலவே அவர் அடிக்கடி தாய்லான்ந்து போகும் ரகசியத்தையும் பொது மக்கள் அறியத் தர வேண்டும். மக்களின் வரிப் பணத்தில் அவர் செல்கிறார். மக்களுக்கு பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறார். தாய்லாந்திற்கு இவர் செல்ல வேண்டிய முக்கியமான மக்கள் பணி என்ன என்பதைச் இவர் சொல்வாரா?

    விஸ்வாமித்ரா

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை தங்கள் வேட்பு மனுவுடன் அறிவிக்க வேண்டும் என்ற நியதி கடந்த சில ஆண்டுகளாக இருப்பதால் நாம் நமக்கு “சேவை” செய்ய விழையும் நம் “தொண்டர்கள்” எவ்வளவு “ஏழைகள்” என அறிய முடிகிறது
    அதேபோல அவர்கள் மருத்துவ சான்றிதழையும் இணைக்க வேண்டும் என சட்டம் வரவேண்டும் போலிருக்கிறது!!
    அப்படி வந்தால் உலகிலுள்ள அத்தனை வியாதியும் இவர்களுக்கு இருப்பது தெரியவரும்.என்ன ஒரு சாதாரண நல்ல மனிதன் ஜலதோஷம் வந்தாலே இறந்துவிடுவான்.இந்தசனியன்கள் என்ன வந்தாலும் செத்து ஒழியாமல்,நம் கழுத்தை அறுத்துக்கொண்டேதான் இருப்பர்

  3. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    ஆடிய ஆட்டம் என்ன?….
    எனக்கு டான்ஸ் வராது
    நான் நடிச்ச
    படம் பார்த்தீங்களா?
    நீங்கதான்
    நல்ல டான்சர்
    ஆட்சே ஆன்டி
    -ஸ்டாலின்
    ……..நண்பர்களே ….
    தப்ப
    தப்பா..
    நெனச்சாதான் தப்பு !
    தப்ப
    தப்பில்லாம தப்பா
    நெனச்சா தப்பா?……
    …கோடா நாடோ ????
    வட நாடோ ?????
    எல்லாமே –
    நம்ம நாட்டுலதான் இருக்கு..
    அப்படின்னீங்க
    நாங்க புமிக்கடீல
    ஒட்டாய போட்டு
    அமெரிக்காவில போய் ஏந்திப்போம்..
    ஞாபகம் வச்சுக்குங்க….!!!!!!!
    THANKS
    Rajasekhar.P
    -stalin-க்காக

  4. ARUNA.T's avatar ARUNA.T சொல்கிறார்:

    Thavalai than vaiyal ketum.[stalin]

  5. கோவை சீனு's avatar கோவை சீனு சொல்கிறார்:

    நுணலும் தன் வாயால் கெடும்

    ஸ்டாலின் தன் பேச்சால் கெடும்.
    அவர் BPL category இல்லை அல்லவா
    அதனால் அவரால் கலைஞ்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ்
    சிகிச்சை பெற முடியாது.
    அதனால் தான் அவர் பாவம் பக்கத்தில் இருக்கும்
    லண்டன் போய் வந்துள்ளார்.
    இது தப்பா..
    தப்பை தப்புன்னு சொல்லறது தப்பில்லை
    தப்பில்லாததை தப்புன்னு சொன்னா தப்பு
    இப்படி சொல்லுவது தப்பா..!!!?????

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.