Tag Archives: இணைய தளம்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் -50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 14 )

This gallery contains 2 photos.

கணவனின் “ஆண்மை இழத்தல்” என்பதையேபடத்தின் மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டஇந்தப்படத்தின் கதாசிரியர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். “சாரதா” வெளியானது 1962-ல். முக்கிய பாத்திரங்களில்மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்,விஜயகுமாரியும். பல நண்பர்களின் ஆலோசனையையும் மீறி துணிச்சலாகஇந்தப்படத்தை தயாரித்தார் திரு.ஏ.எல்.ஸ்ரீநிவாசன்.இந்தக் கதையை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான் இதை இயக்கவும் பொருத்தமானவர் என்றும்நினைத்து அவரையே இயக்குனர் ஆக்கினார். இந்தப்படத்தின் மூலம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்என்னும் அருமையான இயக்குநர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

” மந்திரிக்கு அழகு… வரும் பொருள் … எடுத்த” லா? – கிருபானந்தவாரியார் சுவாமிகள்…

This gallery contains 1 photo.

வாரியார் சுவாமிகளைப் பார்த்து, கேட்டுமிக நீண்ட நாட்களாகி விட்டன….கொஞ்சம் பார்ப்போமே – யார் யார் – எப்படி எப்படி – இருக்க வேண்டும்…? கிண்டலும், நக்கலும் வாரியாருடன் கூடப்பிறந்தவை …!!! கிருபானந்தவாரியார் சுவாமிகள்…

More Galleries | Tagged , , , , , ,

ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா….?50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 13 )

This gallery contains 1 photo.

இன்றைய இளைஞர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் –இசையமைப்பாளர், தயாரிப்பாளர் திரு.ஆதி நாராயண ராவ்.30 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டவர் –(1915–1991) (புகழ்பெற்ற நடிகை திருமதி அஞ்சலி தேவியின் கணவர்..ஆனால் அஞ்சலி தேவியை மணக்கும் முன்னரேஇவர் இசையமைப்பாளராகி இருந்தார்….) இவரது பாடல்கள் அற்புதமான தனித்தன்மை பெற்றவை.மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து இவரது பாடல்கள்தனித்து விளங்கும். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி அடிப்படை ராகங்களில்,அற்புதமான ஆர்கெஸ்டிரேஷனுடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

இந்தியாவின் – அபூர்வமான … 5 கோவில்கள் ……

This gallery contains 1 photo.

பழைய காலத்தில் கட்டப்பட்ட சில கோவில்கள்மிகவும் வித்தியாசமானவை…. தங்களிடையேஅபூர்வ கட்டமைப்புகளையும், அதிசயமான பின்னணியையும்கொண்டுள்ளன…. இவை எப்படி படைக்கப்பட்டனஎன்பது விசித்திரமாகவே இருக்கிறது. அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக,எஞ்சினீரிங் பற்றிய ஞானமோ, இன்று கிடைக்கும் உபகரணங்களோ,கட்டமைப்பு வசதிகளோ இல்லாத அந்தக்காலத்தில்இவற்றை எப்படிக் கட்டினார்கள் என்பது அதிசயமே. இந்தக் காணொலியைப் பார்த்தால்,அவற்றின் சிறப்பும், தனித்துவமும் – விளங்கும்… -காணொலியில் காணும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

This gallery contains 1 photo.

பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது. படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம். ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன… முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்பாடிய “இது தான் உலகமடா ” ….பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது… பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடவுள் இருக்கிறாரா ….? காந்திஜியின் விளக்கம்….!!!

This gallery contains 3 photos.

பொய்யிலிருந்து மெய்க்குஇருளிலிருந்து ஒளிக்குசாவிலிருந்து சாகா நிலைக்குஎன்னை இட்டுச் செல் ரிக் வேதம். தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஏற்பட்ட சத்திய வேட்கை அல்லது எழுச்சியைச் சமூகத்தின் எழுச்சியாக வளர்த்தெடுத்ததில்தான் காந்தியின் வாழ்க்கை பூரணம் பெறுகிறது. காந்தியின் தேடல் கடவுளில் தொடங்கி, கடவுளே உண்மை என்ற நிலையைக் கடந்து உண்மையே கடவுள் என்பதாக உருமாற்றம் பெறுகிறது. காந்திஜி தன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 )

இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டியஅவசியமே இல்லையென்று நினைக்கிறேன்….. Evergreen Song…. அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்மிகவும் பொருத்தமான சொற்களைப்தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோதுவெளியான படம்…1961 படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,