Category Archives: Uncategorized

ஏதுக்கித்தனை வேகமய்யா ?..அய்யா ப.சி. அவர்களே ..!

This gallery contains 1 photo.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கும்போது முன் வைத்த முக்கிய காரணம் – “வங்கிகள் தனியார் வசம் இருப்பதால், அவற்றின் நிதி வசதிகளை, பலன்களை -பெரிய பெரிய தனியார் தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தான் அனுபவிக்கிறார்கள். சாதாரண குடிமகனுக்கு வங்கிகளின் பயன் சென்று அடைய வேண்டுமானால், வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி, … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி …

This gallery contains 2 photos.

இதை எழுதும்போது, என் மனதின் முன்வரிசையில் நிரந்தரமாக இடம் பிடித்து அமர்ந்திருக்கும் பெண்கள் சிலரை நினைத்துக் கொள்கிறேன்…! (நாளை உலக மகளிர் தினம் …!) முதலில் என் பாட்டி -(திருமதி சாவித்ரி அம்மாள்) அப்பாவின் அம்மா. கும்பகோணம் சாரங்கபாணி தெரு ஓட்டு வீடு ஒன்றில் பிறந்தார். பள்ளிக்கூடமே போனதில்லை. 7 வயதில் கல்யாணம். 13 வயதில் … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

நண்பர் “ஞாநி”அவர்களுக்கு ஒரு திறந்த மடல் ….

This gallery contains 2 photos.

கடிதம் எழுதுவதில் நான் ஒரு கத்துக்குட்டி. உங்கள் மாதிரி எல்லாம் என்னால் எழுத முடியாது. இருந்தாலும் மனதில் தோன்றுவதை, உள்ளதை உள்ளபடி எழுதி விடுவேன்..! எனக்கு உங்களையும், உங்கள் எழுத்தையும் நீண்ட நாட்களாகத் தெரியும்… சில பொது நிகழ்ச்சிகளின் போது நான் உங்கள் அருகிலேயே கூட இருந்திருக்கிறேன். (ஆனால் – உங்களுக்கு என்னைத் தெரியாது !) … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

5 வருடங்களில் 1000 சதவீதம் சொத்து உயர்வு… தகவல் தெரிந்த பிறகும் சும்மா இருக்கலாமா …?

This gallery contains 1 photo.

தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து, மக்களவைத் தேர்தல்களையும், பல மாநில தேர்தல்களையும் நடத்தி விட்டு, ஓய்வு பெற்றவர் திரு என்.கோபாலஸ்வாமி அவர்கள். தேர்தல் கமிஷனராக பொறுப்பு ஏற்கும் முன்னர் மத்திய அரசில், மிக முக்கியமான உள்துறைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். எனவே, அரசின் பல்வேறு அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன – அவை எதற்காக உள்ளன … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திரு.ப.சி. அவர்கள் ஒரு Apprentice-ஐ அவர் கம்பெனியின் Chief Executive Officer ஆக்கத் துணிவாரா ..?

This gallery contains 2 photos.

சென்ற வாரம் – தொடர்ந்து இரண்டு நாட்களில் மூன்று பேட்டிகள். முதலில் – தனக்கு உரிமையுள்ள தொலைக்காட்சி NDTV-யில் பர்க்கா தத்-உடன் , அடுத்து Right to Hear (Headlines today )-யில், அடுத்து CNN/IBN-ல் karan thapar-உடன் சொல்லி வைத்தாற்போல் மூன்றிலும் ஒரே மாதிரியான கேள்வி – வித்தியாசமே இல்லாமல் -ஒரே மாதிரியான பதில் – … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” -மூளையால் பேசுவதை நிறுத்தி விட்டு, மனசாட்சியுடன் பேசுவது எப்போது ..?

This gallery contains 1 photo.

ஆசிரியர் சோ அவர்கள் இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழில் 7 பேர் விடுதலை குறித்து “நடந்திருப்பது நல்லதற்கல்ல” என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதி இருக்கிறார். சோ எப்போதும் மூளையால் மட்டும் தான் யோசிப்பார். மனம் என்கிற – மனசாட்சி என்கிற – ஒன்று அவரது வாதங்களில் எப்போதுமே இருந்ததில்லை. “மனம் ஒரு குரங்கு”என்று நாடகம் போட்ட … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

காம்போஜம் … (கடல்களைக் கடந்து…பகுதி-2)

This gallery contains 27 photos.

இன்று – கம்பூசியா நேற்று – கம்போடியா அதற்கு முன்னால் – காம்போஜம்..! – 9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை காம்போஜம் என்று பெயர் பெற்றிருந்த இந்த கம்போடியா நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்கள் – ஜயவர்மன், இந்திரவர்மன், யசோவர்மன், சூர்யவர்மன், ஜயவர்மன் -2, ஜயவர்மன் -3, ஜயவர்மன் -4, ஜயவர்மன் -5, ஜயவர்மன் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்