Category Archives: Uncategorized

ரவிவர்மா பிடிக்குமா ? 18ஆம் நூற்றாண்டு வண்ணச்சித்திரங்கள் சில – இங்கே….

This gallery contains 14 photos.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் சிலவற்றை பார்த்தேன்.நான் பார்த்ததை மற்றவர்களும் பார்த்து ரசிக்க கீழே பதிவிடுகிறேன் – (இது டூப்ளிகேட்…) (இது டூப்ளிகேட்…) (இது டூப்ளிகேட்…) (இது டூப்ளிகேட்…)

More Galleries | 9 பின்னூட்டங்கள்

கொள்ளை அடித்தால் தானா ? – இது ஊழல் இல்லையா …?

This gallery contains 1 photo.

இந்தியா முழுவதுமாக 1.54 லட்சம் (ஒரு லட்சத்து ஐம்பத்து நாலு ஆயிரம் ) – கிளைகள். அதில் 90 சதவீதம் கிளைகள், கிராமப்புறங்களில். சராசரியாக, இந்திய மக்கள் – ஒவ்வொரு 5682 பேருக்கும் ஒரு கிளை அலுவலகம் – இந்தியா முழுவதுமாக, ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பெறும் சுமார் 2.2 கோடி … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் சந்துரு -“ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”

This gallery contains 6 photos.

அசந்து போய் விட்டேன். நீதிபதி சந்துரு அவர்கள் இவ்வளவு வேகமாகவும், வெளிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை …! பெரிய பதவிகளில் இருப்பவர்கள், இருந்தவர்கள் – சமூக அக்கரையும், பொறுப்பும் மிகுந்தவராக அமையப்பெற்றால், அது சமுதாயத்திற்கு கிடைக்கும் பெரும் வரம். சந்துரு அவர்களால் தமிழ் நாட்டிற்கு பல வகைகளில் பயன். பதவியில் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சிங்கிளாக கிளம்பிய சிங்கம் ….

This gallery contains 1 photo.

கடைசியில் ஒருவழியாக, டாக்டர் ராமதாஸ், மகனின் விருப்பத்தையும் தாண்டி, சிங்கிளாகக் கிளம்பி விட்டார். சூழ்நிலைக்கு நன்றி சொன்னாலும், அவரது துணிச்சலையும், சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். கிளம்பும்போது தில்’லாக ஒரு பஞ்ச் டயலாக் வேறு – “சிங்கம் சிறுநரிகளிடம் பிச்சை கேட்காது !” வாழ்த்துக்கள் டாக்டர் … இன்னொரு விஷயம் – ஏற்கெனவே அதற்கேற்ற … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தமிழர்களும், தென்னாப்பிரிக்காவும் … (கடல்களைக் கடந்து…பகுதி-3)

This gallery contains 13 photos.

  இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரே ஆட்சியின் கீழ், ஆங்கிலேயர் வசம் இருந்த காலம் அது. தென் ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலும், கரும்புத் தோட்டங்களிலும் வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். காடு திருத்தி, கழனி அமைக்க – 1860-ல் துவங்கி 1910 வரை, தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவிலிருந்து நிறைய உழைப்பாளிகள் தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி (?) … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கலைஞரும்,டாக்டர் ராமதாசும் அவுரங்கசீப் காலத்தில் பிறந்திருந்தால் என்னவாகி இருக்கும் …?

This gallery contains 1 photo.

  சரித்திரம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நல்ல புத்தகம்/வலைத்தளம் கிடைத்தால், விடிய விடிய, படித்துக் கொண்டிருப்பேன். எனவே சரித்திரத்திலிருந்து ஒரு சின்ன உதாரணம் – மொகலாய மன்னன் அவுரங்கசீப் பற்றி அனைவருக்கும் ஓரளவாவது தெரிந்திருக்கும். அவுரங்கசீப் டெல்லியை மையமாகக் கொண்டு 49 வருடங்கள் இந்தியாவை ஆண்டவன். கொடுங்கோலன் என்று பலர் சொல்லுவர். அவன் பதவிக்கு … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

யஸ்வந்த் சின்ஹா – சரியாகத்தான் சொல்கிறார் ! ஆனால் அவர் சொல்வதை பாஜக அரசு செய்யுமா..?

This gallery contains 1 photo.

நேற்று(திங்கள்) சென்னையில் – மனித உரிமைகள் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், பாஜக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் (பாஜக)வெளியுறவுத் துறை அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா பேசி இருக்கிறார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள் – ——– “இந்திய அரசியலமைப்பில், மனிதஉரிமைகள் – அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, திபெத்தில் சீனா நடத்திய … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்