………………………………

…………………………………………
நிறைய பேர் கேட்பது உண்டு…. அதெப்படி – 5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எந்த நடவைக்கையும் எடுக்கப்பட வில்லை ….
அதே மாதிரி, அதிமுக ஆட்சியிலும், திமுக ஊழல் மந்திரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லையே என்று ……..
திமுக-வின் கொள்கைபரப்பு செய்லாளர் ஆர்.எஸ்.பாரதி இப்போது வெளிப்படையாகவே தங்கள் கொள்கையை விளக்கிக் கூறி விட்டார் ….. நாங்கள் பங்காளிகள் ( அதாவது, பங்குதாரர்கள்….??) என்று ….!!!
………………………………………..
நேற்று வெளியான பத்திரிகைச் செய்தி கீழே –
………….
அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சி ஒருவேளை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதில் என்ன பெரிய உலக மகா தவறு இருக்கிறது….?
சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் 1964-ஆம் ஆண்டு பிரிந்தன. ஆனால் இன்று இரு கட்சிகளும் பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இதே மாதிரி தான், எங்களை விட்டு அவர்கள் (அதிமுக) பிரிந்து சென்று 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்காக நாங்கள் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்று கூறவில்லை.
ஆனால் அப்படி அமைத்தாலும் அதில் தவறு எதுவும் இல்லை.
என்ன நடந்தது நானே பலமுறை கூறியிருக்கிறேன். அதிமுக என்பது எங்களுக்கு பங்காளி போன்ற கட்சி.
எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தானே அவர்கள்.
தற்போது நாங்கள் எந்த கூட்டணி குறித்தும் பேசவில்லை. அதே நேரத்தில், இரு கட்சியினரையும் ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர். சட்டப்பேரவையிலும் ஒரே வரிசையில் தான் அமர்ந்து இருக்கிறோம்.
இதைப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் தொண்டர்களும் மனதளவில் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டார்கள் போல தெரிகிறது…. !!! 👩🦳👩🦳👩🦳
அந்த சூழலை உருவாக்கியதற்கு காரணம் இவங்க தான்.. என்று பதில் அளித்தார்.
………………………………………………………………………………………………………………………………………………….



If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…