அந்தக்கால பரிதாபகரமான விளம்பர புகைப்படங்கள்……


நான் இந்த புகைப்படங்களை இங்கே பதிந்திருப்பதன் முக்கிய நோக்கம், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் நமது மக்களின், நடை, உடை, கலாச்சாரங்கள் எப்படி இருந்தன என்பதை உணர்ந்து கொள்ளத்தான்.

கீழேயுள்ள புகைப்படங்கள் 1870 -ல் எடுக்கப்பட்டுள்ளவை.
அத்தனை புகைப்படங்களிலும் உள்ளவர்கள் தமிழ்நாட்டு பெண்கள் தான்.அவர்கள் மீது நகைகளை அணிவித்து, அந்த நகைகளை விளம்பரப்படுத்த வெள்ளைக்காரர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் இவை.

அத்தனையும் ஸ்டுடியோக்களில் தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

…………….







…………….

இது தனி … இதுவும் 1870 தான்….
இங்கே போஸ் கொடுத்திருப்பவர் –
ரெவரெண்ட் ஃபாதர் ராஜகோபால் -மெட்ராஸ்
( சர்ச் ஆஃப் ஸ்காட்லாண்டு )

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அந்தக்கால பரிதாபகரமான விளம்பர புகைப்படங்கள்……

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … நம் தமிழர்களின் அணிகலன்கள் எண்ணிக்கை எக்கசக்கம் அதில் பொதுவாக கூறுவது : — நெற்றிப் பட்டம்…சடைநாகம்..மூக்குத்தி .. தோடு …கடுக்கன்..தொங்கட்டான்..சங்கிலி..அட்டியல்..தாலி..பாம்படம்..பதக்கம்…காப்பு,வளையல்…மோதிரம்…ஒட்டியானம்..வளை ..சதங்கை ..காற் சங்கிலி ..சிலம்பு …மெட்டி போன்றவை …

    இவற்றில் கழுத்தணிகள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு பெரிய பட்டியல் அவைகள் :– // கழுத்தணிகள்…கொத்து, கொடி, தாலிக்கொடி ,கொத்தமல்லி மாலை , மிளகு மாலை
    நெல்லிக்காய் மாலை , மருதங்காய் மாலை , சுண்டைக்காய் மாலை ,கடுமணி மாலை ,மாங்காய் மாலை , மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை ,அரும்புச்சரம் ,மலர்ச்சரம் , கண்டசரம் ,கண்டமாலை, கோதை மாலை ,கோவை.,பவளத்தாலி // — இதேபோல் ஒவ்வொரு உறுப்புக்கும் அணியும் ஆபரணங்களின் எண்ணிக்கை நிறைய இருக்கிறது … உம் அது ஒரு காலம் — இன்று ….? — பாராம்பரியமா … பரிதாபகரமா …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      உங்கள் பட்டியல் பிரமாதம்.
      ஆனால், அதில் ஒரு சதவீதம் கூட இன்று பயன்பாட்டில் இல்லையென்று
      ( திருமணம், வளைகாப்பு – போன்ற விசேஷங்களைத் தவிர்த்து) நினைக்கிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.