திருமதி சசிகலா நடராஜன்…. ” இந்த ” ஜோசியமும் பலித்து விடுமோ…?

இருபது வருடங்களுக்கு முன்னால்,
வடுகப்பட்டி ஜோசியர் தர்மராஜன் சொன்ன
” இந்த ” இரண்டாவது விஷயமும் பலித்து விடுமோ…?

சுவாரஸ்யமான ஒரு கட்டுரை கீழே – படியுங்களேன்…!!!

sasi-cm-josiyam-1a

sasi-cm-josiyam-2

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திருமதி சசிகலா நடராஜன்…. ” இந்த ” ஜோசியமும் பலித்து விடுமோ…?

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    நிறைய பேருக்கு (அதிமுக தொண்டர்கள், அனுதாபிகள்), இன்றைய தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாக வரக்கூடாது என்றே தோன்றும். இதற்கு முந்தைய காலகட்டங்களில், ஜெ. அவர்கள் இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் (அனைவரும்) எண்ணிப் பிரார்த்தித்திருப்பார்கள்.

    ஆனால், விதி வலியது அல்லவா?

    ப.சி. அவர்கள் கூட இன்னும் பெரிய இடத்துக்கு வருவார் என்றுதான் அவரின் ஜாதகம் கூறியது. “பதவி பூர்வ புண்யானாம்” அல்லவா?

  2. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இதை எழுதிய அடுத்த நொடியிலேயே, சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை என்ற தீர்ப்பு. ‘விதி வலியதுதான்’. அதுமட்டுமல்ல, ‘தர்மம் தலை காக்கும்’ என்பதும் உண்மைதான்.

    • Antony's avatar Antony சொல்கிறார்:

      Eager to look at the feedbacks from ADMK people about the justice provided. People who criticized Kunha’s judgement and celebrated Kumaraswamy’s judgement are going to change their arguements upsidedown.

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        நீதிமன்றத் தீர்ப்புகளில் எப்போதுமே நியாயம் இருப்பதில்லை. இன்றைக்கு உள்ள தீர்ப்பு, திமுக அனுதாபிகள், அதிமுக எதிர்ப்பாளர்களுக்கு நியாயம் என்று தோன்றலாம். இல்லை உச்ச நீதிமன்றம் நியாயமாகத் தீர்ப்பளித்துள்ளது என்று நினைத்தால், ‘ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் போராடியவர்கள்’, ‘7 பேர் ஆயுள் தண்டனைக்கு எதிராகப் போராடியவர்கள்’ என்று பல போராட்டங்களை நடத்தியவர்கள், நியாயத்திற்கும் நேர்மைக்கும் எதிரானவர்கள் என்று அர்த்தமாகிவிடும். அதே நீதிமன்றம்தான், தயானிதி மாறன் குற்றம் செய்யவில்லை என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதே நீதிமன்றம்தான் பல்வேறு வழக்குகளில் நியாயமில்லாதது என்று கருதக்கூடிய தீர்ப்புகளை அளித்தது. குன்ஹாவின் தீர்ப்பு குறைபாடுள்ளது, ஒருதலைப் பட்சமானது என்றே நான் கருதுகிறேன்.

        இன்றைக்கு வந்திருக்கும் தீர்ப்பு, ‘சசிகலா’ என்ற தீமை, குறுக்கு வழியில் பணத்தின் மூலமாக, அராஜகத்தின் மூலமாக ஆட்சியைப் பிடிப்பதற்குத் தடையாகிவிட்டது என்ற அளவில்தான் இந்தத் தீர்ப்பை வரவேற்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு அளிக்கப்படவில்லை என்றுதான் நம்புகிறேன். அதே சமயம், இந்தப் பிரச்சனைக்கு ஆதி காரணகர்த்தாக்கள் என்ற அளவில் சசிகலா கும்பலுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதை வரவேற்கிறேன்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          தமிழன்,

          மன்னார்குடி கும்பலிடமிருந்து தமிழ்நாட்டை
          காப்பாற்ற வேறு எந்த வழியும் தெரியாதபோது,
          குறையோ, நிறையோ –
          எப்படியோ -ஒரு வழியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை
          நாம் வரவேற்க வேண்டுமென்றே நினைக்கிறேன்.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

        • Antony's avatar Antony சொல்கிறார்:

          Nice try bro.. enjoyed your comment. Thank you.
          By the way I hate DMK and I hate BJP more than that.

  3. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    For some reason our people have soft corner towards politicians who go to jail — Who knows ,after 4 years she may become the CM -Vidhi valiyadhu — On one occasion I have mentioned about destiny —

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப எல்விஸ்,

      4 ஆண்டு சிறைத்தண்டனை என்பதோடு விஷயம்
      முடிந்து விடவில்லை..
      தண்டனைக் காலம் முடிந்த பிறகு அடுத்த
      6 ஆண்டு காலத்திற்கு அவர் எந்த தேர்தலிலும்
      போட்டியிட முடியாது…!!!

      ஆக மொத்தம் 10 ஆண்டுகள்….!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.