Category Archives: பொதுவானவை

தேவ்யானி விவகாரத்திற்கும், திருமதி சோனியா வழக்கிற்கும் என்ன தொடர்பு …?

This gallery contains 1 photo.

நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடேயை,அவரது சொந்த பணியாளர் சங்கீதா ரிச்சர்ட்ஸ் விசா விவகாரம் சம்பந்தமாக பொய்யான தகவலைக் கொடுத்ததாக அமெரிக்க போலீஸ் கைது செய்ததும், அது தொடர்பான வழக்கு இன்னும் தீவிரமாகத் தொடரப்பட்டு வருவதும் தெரிந்ததே. இவ்விதம் இந்திய தூதரக அதிகாரியைக் கைது செய்ததும், வழக்குத் தொடர்வதும் ஜெனீவா உடன்பாட்டிற்கு … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

“சோனியா அம்மன்” புகைப்படம்…!

This gallery contains 1 photo.

இது செய்தி மட்டுமே… ! ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் “சோனியா காந்தி சாந்தி வனம்” என்ற பெயரில் காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் ஈடுபட்டிருப்பவர் சங்கர் ராவ் என்கிற தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ்காரர். தெலங்கானா மாநிலம் உருவாக வரம் கொடுத்தமைக்காக, “அன்னை”யை தெய்வமாக்கி, கோயிலும் எழுப்பி இருக்கிறார் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.ப.சி. குறித்து துக்ளக் ஆசிரியர் ‘சோ’ கூறியதும் …கூறாமல் விட்டதும் ..!!

This gallery contains 2 photos.

அண்மையில், ஒரு பேட்டிக் கட்டுரையில் – துக்ளக் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் திரு.ப.சிதம்பரம் அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விவரமாகப் பேசி இருக்கிறார். அதிலிருந்து கொஞ்சம் – ”   மிகவும் புத்திசாலியானவர் ப.சிதம்பரம். அவருக்கு இருக்கிற புத்திகூர்மை சாதாரணமானது அல்ல. தமிழ் மாநில காங்கிரசுக்கும், திமுக வுக்கும் கூட்டணி உருவான சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்பு … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

ஸ்கூட்டரில் போன 6 கோடி ரூபாய் ஆப்பிள்..!!!

This gallery contains 2 photos.

இந்த நாட்டில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. தனக்கு கிடைத்த லஞ்சப்பணத்தை /கருப்பை வெள்ளையாக்க இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் – 3 முறை முதலமைச்சராகவும், 2 முறை மத்திய அமைச்சராகவும் இருந்த ஒருவர். 2009-10, 2010-11, 2011-12 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு தான் ஏற்கெனவே சமர்ப்பித்த வருமான வரி கணக்குக்கு … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

“அய்யய்யோ அது எம்புள்ளை இல்லீங்கோ” -அலறும் சசி தரூர்….!

This gallery contains 2 photos.

சிலரைக் கண்டாலே எரிச்சலாக இருக்கும். அவர்கள் பேசுவதை கேட்டாலோ மகா எரிச்சலாக இருக்கும். இவர்கள் எல்லாம் ஏன் தான் இந்த நாட்டில் வந்து பிறந்து தொலைத்தார்களோ என்று இருக்கும். எப்போதும், தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரையும் மகா முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவர் இத்தகைய மனிதர். அத்தகைய மஹா மனிதர்களில் ஒருவர் சசிதரூர். ஏற்கெனவே பலதடவை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி … பிரதமர்….?

This gallery contains 3 photos.

வெள்ளிக்கிழமை, மௌன சுவாமிகள் – தவத்திரு மன்மோகன் சிங் அவர்கள் – நீண்ட நாட்களுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசப்போகிறார்..! புத்தாண்டில் அவர் பாவ மன்னிப்பெல்லாம் கேட்பார் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா என்ன ? அடுத்து வரவிருப்பவருக்கு தான் இடத்தை காலி செய்யத்தயார் என்பதை எப்படி, எந்த விதத்தில், அசடுவழிய சொல்லப்போகிறார் என்பது தான் அதிக … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கருணை உள்ளமே — கடவுள் இல்லமே ……..

This gallery contains 1 photo.

எனக்குத் தெரிந்து அநேக குடும்பங்களில் (எங்கள் வீட்டிலும் கூட ) ஒரு பழக்கம் உண்டு. வீட்டில் விசேஷங்கள், கொண்டாட்டங்கள், நல்ல நிகழ்வுகள் போன்றவை நடக்கும்போது – முகூர்த்த தேதியை தீர்மானிக்கும்போதே – “சாமி”க்கு (அதாவது அவரவர் குலதெய்வம்) என்று ஒரு தொகையை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விடுவார்கள்.  பின்னர், நேரிடையாக கோவிலுக்குச் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்