Category Archives: தமிழ்

வைகோ அவர்கள் தூண்டி விடுவது யாரை …? மாணவர்களையா அல்லது ……?

This gallery contains 1 photo.

தற்போது வெளியாகியுள்ள செய்தி இது…. பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியவர்களை போலீஸ் துரத்திப் பிடித்து கைது செய்ததை, தொலைக்காட்சிகளில் நேரடிச்செய்தியாக காண்பித்ததை பார்த்தோம். அந்த கூட்டத்தில் 15 மாணவர்கள் சிக்கினார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

அடுத்த பலி …? ..மாணவர்களா…? பிணங்களை வைத்து பிழைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் …..

This gallery contains 5 photos.

—————– ” ரேபிஸ் ” – வெறி பிடித்த நாய்களால் கடிக்கப்பட்ட மனிதர்களுக்கு வரும் ஒரு வெறி நோய் “ரேபிஸ்”. இந்த நோய் பிடித்தவர்கள் காண்பவர்களை எல்லாம் நாயைப் போல் கடிப்பார்கள். கடிக்கப்பட்டவர்களுக்கும் “ரேபிஸ்” நோய் பரவும். —————– மதுவிலக்கை முன்வைத்து வரவிருக்கிற தேர்தலில் ஆதாயம் பெறுவதில் யார் முந்திக் கொள்வது என்பதில் கேடுகெட்ட தமிழக … Continue reading

More Galleries | 37 பின்னூட்டங்கள்

பகுதி -5- MSV – இளையராஜா நிகழ்ச்சியின் தொடர்ச்சி…..

This gallery contains 2 photos.

இந்த பகுதிக்குள் போவதற்குள் நண்பர் ராமச்சந்திரனுக்கு ஒரு விளக்கம். அனேகமாக – இரண்டு பாடல்கள் தவிர – மற்ற எல்லா பாடல்களையும் இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டேன் என்றே நினைக்கிறேன். இருந்தாலும், என் கவனக்குறைவால் எதாவது விட்டுப் போயிருக்கலாம். திரு சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள் – இளையராஜா அவர்களின் நிகழ்ச்சியில் எதுவும் வரவில்லை. நேரம் பற்றாக்குறை … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

( பகுதி -4 ) – MSV- இளையராஜா நிகழ்ச்சி – தொடர்ச்சி. ……

This gallery contains 3 photos.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், இளையராஜா மேடைக்கு வந்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து ரஜினிகாந்த் மேடைக்கு அருகே உள்ள முதல் நுழைவாயில் வழியே உள்ளே வந்தவர் – பரபரவென்று நேராகச் சென்று முதல் வரிசையில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். இருந்தாலும், ரசிகர்கள் அவரைப் பார்த்து விட்டதால், அவையில் ஒரு சிறிய ஆரவாரம் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) MSV – இளையராஜா நிகழ்ச்சி தொடர்ச்சி…..

This gallery contains 1 photo.

இது நிகழ்ந்தது 30 ஆண்டுகளுக்கு முன்னர் – திரு MSV அவர்களின் மீது இளையராஜா எந்த அளவிற்கு அபிமானமும் அக்கரையும் கொண்டிருந்தார் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது. இதைப்பற்றி ராஜா அவர்கள் இதுவரை எங்கும் வாய் திறந்து சொன்னதாகத் தெரியவில்லை. ( வேறு ஒரு இடத்தில் திரு ஏவிஎம் சரவணன் அவர்கள் சொல்லிய செய்தி … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

தேர்தல் சூதாட்டத்தில் முதல் பலி – காந்தீயவாதி சசி பெருமாள்….

This gallery contains 1 photo.

தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கி விட்டது. ஆட்டத்தில் வெற்றி பெற கொடுக்கப்பட்ட முதல் களப்பலி தான் திரு சசி பெருமாள் அவர்கள்…. யார் யாரோ கண்ணுக்குத் தெரியாமல் காய்களை நகர்த்துகிறார்கள். யார் – யார், எதற்காக, எந்த காயை நகர்த்துகிறார்கள் என்பதை யாரும் வெளிப்படையாக யாரும் அறிய முடியவில்லை… அது … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

( பகுதி- 2 ) MSV- இளையராஜா நிகழ்ச்சி….

This gallery contains 2 photos.

உடுமலை நாராயண கவி கையால் எம்.எஸ்.வி. அவர்கள் அறை வாங்கியது ஏன்…? உடுமலை நாராயண கவி அந்த காலத்திய டாப் திரைக்கவிஞர். “உலகே மாயம்” பாடலை எம்.எஸ்.வி போட்டுக் காட்டியதும் அவர் கோபம் அடைந்ததன் காரணம்…. பாடலைப் பாடியவர் தெலுங்கரான “கண்டசாலா”. மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட அந்த தத்துவ பாடல் உச்சரிப்பில் பயங்கரமாக சிதைக்கப்பட்டதனால் ஏற்பட்ட … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்