…………………………….

……………………………….
“அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ” –
என்று கூறிய பிரிட்டிஷ் தத்துவ ஞானியின் வாக்கை
மெய்ப்பிப்பது போல் இருக்கிறது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம்….விஜய் போன்ற நேர்மையாளர்கள்
இங்கே ஜீவிப்பது மிக மிக கடினம்….
ஏற்கெனவே நாம் அனுபவங்கள் மூலம் அறிந்த, அயோக்கியர்களின் வரிசையில்,
புதிதாக ஒருவர் –
என்னை விட்டு விட்டீர்களே – இப்போதாவது என் திறனை புரிந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் …
அவரிடம் இருப்பது இரண்டே எம்.எல்.ஏக்கள்… அவர்களது ஆதரவு வேண்டுமானால், முதலில் இவரை துணை முதலமைச்சர் ஆக்கி, எம்.எல்.ஏ.வாகவும் ஆக்க வேண்டுமாம்…தன்னைச் சேர்ந்த இன்னும் ஒருவரை கேபினட் அமைச்சர் ஆக்க வேண்டுமாம்…!!!
நல்ல வேளை .. விஜய் அமைதியானவர் தானே தவிர இளிச்சவாயர் அல்ல….
இந்த சட்டமன்றத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு, மறு தேர்தல் நடத்துவது ஒன்றே இந்த பிரச்சினைக்கு நல்ல
தீர்வாகும்….
விஜய் அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும்…மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்….
……………………………………………………………….………
இதையும் ஒருமுறை பாருங்கள் –
…………………………………………………………………………………………………………………………………………….



[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]