…
…
திருவாளர் நிதிஷ்குமார் இப்போது எத்தகைய உணர்வோடு
இருப்பார்…? நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பாரா…?
நமக்கு யோசிக்க வேண்டிய சிரமத்தை கொடுக்காமல்,
இரண்டு கார்ட்டூன்களின் மூலம் விளக்கி விட்டார்கள் –
கார்ட்டூனிஸ்ட் திரு.சுரேந்திரா-வும், திரு.கேசவ் அவர்களும்…
உங்களுக்கு இந்த கார்ட்டூன்களின் கருத்து ஏற்புடையவையாக இருக்கின்றனவா…?
ஒருவேளை இல்லை என்றால், நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்…?
…

…




சுரேந்திரா மிகச் சரியாக கார்ட்டூன் போட்டுள்ளார். நிதீஷ் அவர்கள் செயற்கைக் காலில்தான் நிற்கிறார். முன்பு லாலுவிடமிருந்து, இப்போ மோடியிடமிருந்து.
கேசவ் கார்ட்டூன் சரியான நிலையைப் பிரதிபலிக்கவில்லை. நிதீஷ்குமார் தலையாட்டிப் பொம்மையாக இருக்கமாட்டார், அப்படிப்பட்ட குணம் அவருக்கு இருப்பதுபோல் தெரியவில்லை (உதவி ஜனாதிபதி தேர்தலில் வெங்கையாவுக்கு ஆதரவு கிடையாது என்று நிதீஷ் அவர்கள் சொன்னதாகப் படித்த ஞாபகம்)
ஒருவேளை, பாஜக பின்னால் காலை வாரினால், நிதீஷ்குமாருக்கு போக்கிடம் இருக்காது.ஆனாலும் அவருக்கு, முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்த அனுபவம் இருப்பதால், பலவற்றையும் யோசித்துத்தான் முடிவெடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். மக்கள் முன்னால் வந்து தைரியமாக எப்படி தன் நிலையை விளக்குவார் என்றும் யோசிக்கிறேன். (அப்படிக் கழட்டி விடும்போது)
தற்போதைய சூழ்நிலையில் நிதீஷ்க்கு யாருடைய தோலிலாவது சாய்ந்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது,நிதீஷ் தாமதித்திருந்தால் லாலு நிதீஷ் ஆதரவு எம்எல்ஏக்களை பிளந்து மீண்டும் ஒரு பொம்மலாட்டத்தை நிகழ்த்தியிருப்பார்.நிதீஷ் முந்திக்கொண்டார் இது தான் அரசியல் ஒன்றான பிறகு எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தான் பார்க்க வேண்டும்.
லாலு தன் சாமார்த்தியத்தை காண்பித்து நிதீஷ் வெளியேறியிருந்தால் இதே கேலி சித்திரங்கள் லாலுவை எவ்வாறு சித்தரித்திருக்கும்?
Nitish Kumar had been in alliance with BJP for 17 years –He was also a minister in the Vajpayee government — So he wont feel any discomfort in this alliance as it happened with alliance with Lalu — Moreover one of the leaders of JDU said recently that when they were in alliance with BJP they were treated with respect –This is where the truth lies about parties willing to align with the ruling NDA –From now on I think he will become the target of attack —