அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக
வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக
தான் வருகிறார்கள் !
20,000 கோடிக்கு அதிபதி ….
(பகுதி-3)
சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில
பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் –
அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான் சில
விஷயங்களின் கனபரிமாணம் புரியும் –
கைலாச யாத்திரை ஏன் மேற்கொள்ள வேண்டும் ?
பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால்
அதன் விடை கைலாஷில் தான் இருக்கிறது !
வேற்று உலக டிராபிக் இந்த இடத்தில்
நடந்துகொண்டிருக்கிறது. வேற்று கிரக மனிதர்கள்
(தேவர்கள் ?) இங்கே தினமும் வருகிறார்கள் !
ஜாக்கிரதை – நான் சொல்லும் வரை நீரில் காலை
வைக்காதே. சிவன் இங்கே படுத்திருக்கலாம் !
பிள்ளையார் இங்கே தான் விளையாடிக்கொண்டிருக்கிறார் !
அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக
வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக
தான் வருகிறார்கள் !
நான் ஒருவாரம் இங்கே தங்கினால் போதும்.
அவர்களில் ஒருவனை (வேற்று கிரக வாசியை )
கோயம்புத்தூருக்கு (வெள்ளியங்கிரி ஆசிரமத்திற்கு)
தூக்கிக்கொண்டு போய் விடுவேன் !
பக்த கோடிகளே (இளிச்சவாயர்களே ?)
இத்தனையும் இதற்குத் தான் புரிகிறதா ?
கைலாஷ் -மானசரோவர் யாத்திரைக்கு
ஈஷா அமைப்பு விடுத்துள்ள விளம்பரம் !
இந்த விளம்பரம் -குமுதத்தில்,
சம்போ, சிவ சம்போ
கட்டுரை வெளியாகும் அதே பக்கத்தில்
வெளியிடப்பட்டு இருக்கிறது.
6 மாதங்களாக குமுதத்தில் வெளிவரும்
இந்தக் கட்டுரையே ஒரு ப்ரொமோஷனல்
முயற்சி என்பது வெட்ட வெளிச்சமாகத்
தெரியவில்லை ?
“சற்குரு”வுடன் கைலாசத்திற்கு போக
இவர்கள் வசூலிக்கும் கட்டணம் (மன்னிக்கவும் –
நன்கொடை) எவ்வளவு தெரியுமா ?
— தொடர்கிறேன்.
தொடர்ந்து கிழியுங்கள் நண்பரே…
He has got a VAT exemption for thier purchases from TN Govt. You Please write this subject breifly to know people about the relationship between Govt. and Jakki or occupier of Vellingiri Area.
o.k
nice page