நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே !
கலைஞர் காட்டிய பெப்பே !!
பாவம் நக்கீரன் !
தெலுங்கு மொழியில் ஒரு வேடிக்கையான
சொல் உண்டு. அது தான் தலைப்பு !
நித்யானந்தா விவகாரம் ஆறிப்போன கஞ்சியாகி
விட்டதால் – ஸ்டாலின் – அழகிரி பற்றி
சூடாக கலைஞரிடம் ஒரு மனந்திறந்த
பேட்டியை வாங்கிப் போட்டு விழுந்த சர்குலேஷனை
மீண்டும் தூக்கி விடலாம் என்று நக்கீரன் செய்த
முயற்சி அந்தோ பரிதாபம் ஆகி விட்டது.
விறுவிறுப்பு தலைப்புடன் சரி. உள்ளே ஒரே
கொழ கொழப்பு தான் !
கலைஞரா மசிவார் இதற்கெல்லாம். இந்தக் கேள்வியை
கேட்கும் முன்னர் அவருக்குப் பிடித்தமான ஜாலரா
கேள்விகளை எல்லாம் கேட்டும் அவருக்குப் பிடித்தமான
பதில்களை எல்லாம் மீண்டும் மீண்டும் போட்டும் –
இறுதிப் பலன் – பெப்பே தான்.
கீழே பாருங்களேன் – கேள்வி பதில் லட்சணத்தை !

ஏற்கெனவே ஜெகத் கஸ்பரின் கட்டுக்கதைகளுக்கு
உலகத்தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீண்டும்
முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்வதால் தன்
செல்வாக்கை இழந்துகொண்டிருக்கும் நக்கீரன்
கலைஞருக்கு தொடர்ந்து பலமாக ஜால்ரா போடுவதால்
இருக்கும் செல்வாக்கையும் இழந்து கொண்டிருக்கிறது
என்பதை உணர வேண்டும்.






Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…