Category Archives: பொது

கட்டினால் மட்டும் தானா…..???

This gallery contains 5 photos.

11 மாடி கட்டிடம் – 220 அடி உயரம் – 150 அடி அகலம் – அரைகுறையான அஸ்திவாரம் – எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்கிற நிலை – சுற்று வட்டாரத்தில் குடியிருந்த மக்களை பத்திரமாக வேறு இடத்திற்கு கொண்டு சென்று, அவர்களுக்கான அவசிய வசதிகளை செய்து கொடுத்து, உணவு, தண்ணீர், போக்குவரத்து ஏற்பாடு … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் அவர்கள் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பு – வேகம்…!!!

This gallery contains 2 photos.

இன்று காலை தொலைக்காட்சி செய்தி சேனல்களில் – சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. – என்கிற செய்தி வெளிவந்த 5-வது நிமிடத்தில், 50,000 மக்களைத் திரட்டி தளபதி ஸ்டாலின் அவர்கள் கோவையில் மேற்கொண்ட கடும் போராட்டத்தின் காரணமாகவே மத்திய அரசின் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இங்கிருந்து just 3200 கி.மீ. தாண்டினால் – ஒரு தமிழ் ஊர் ….!!!

This gallery contains 7 photos.

சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இருந்தபோது, பாஸ்போர்ட் வேண்டாம், விசா வேண்டாம் – கஸ்டம்ஸ் கிடையாது – இமிக்ரேஷன் தொல்லை இல்லை…. தென் ஆப்பிரிக்காவிலிருந்து, சிலோனிலிருந்து (இன்றைய ஸ்ரீலங்கா ) மலேயா, சிங்கப்பூரிலிருந்து, பிஜி, மொரிஷியஸ்,ரீ-யூனியனிலிருந்து, பர்மா (இன்றைய மியான்மர் ) வரை எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் போகலாம் – எப்போது … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கவிஞர் கண்ணதாசன் மனம் மாறக்காரணம் காஞ்சி பெரியவரா ….?

This gallery contains 3 photos.

நாத்திகராக இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆத்திகராக மாறியது எப்போது… எப்படி ..? என்பது குறித்து ஒரு கட்டுரை படித்தேன். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அதனை அப்படியே கீழே பதிப்பிக்கிறேன். இது குறித்து நண்பர்கள் யாருக்காவது மேற்கொண்டு விவரங்கள் தெரிந்திருந்தால், பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். ——————- சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு … Continue reading

More Galleries | 30 பின்னூட்டங்கள்

ஒரு பெண் எழுத்தாளரின் தமிழக அரசியல் அனுபவங்கள் ….

This gallery contains 1 photo.

. . ஒரு இடுகைக்காக பழைய செய்திகள் சிலவற்றைத் தேடி, அலைந்து கொண்டிருந்தேன். அப்போது எதேச்சையாக கண்ணில் பட்ட ஒரு விஷயம் – அந்தக் காலத்தில், தமிழகத்தில் திமுக செயலாற்றி வந்த பின்னணியைச் சொல்கிறது. இந்த வலைத்தள நண்பர்களும் இந்த கட்டுரையை படிக்க வேண்டுமென்று என்று நினைத்து இங்கே பதிப்பிக்கிறேன். நீண்ட காலமாக தமிழில் படித்து … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பெண்களால் எந்த அளவிற்கு நிர்வாகம் செய்ய முடியும் …?

This gallery contains 2 photos.

முறையான கல்வியறிவோ, நிர்வாகப்பயிற்சியோ இல்லாதவர்களாக இருந்தாலும் கூட, ஆர்வமும், அக்கரையும் கொண்ட பெண்களிடம் பொதுப் பொறுப்புகளை ஒப்படைத்தால் அவர்களால் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு இந்த கட்டுரையில் கூறப்படும் விஷயங்கள் – கீழே தரப்படுவது ஒரு புள்ளிவிவரம் – உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழகத்தின் 26 … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பாலகுமாரன் அவர்கள் இப்படி சாணத்தை வாரி பூசிக்கொள்ளலாமா

This gallery contains 4 photos.

ஆத்திரம், கோபம் என்பதை விட வருத்தத்தினாலும், ஆதங்கத்தினாலும் தான் இதை எழுதுகிறேன்.. பாலகுமாரன் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். கிட்டத்தட்ட 35-40 ஆண்டுகளாக, அவரது மெர்க்குரி பூக்களில் துவங்கி இன்றைய நாள் வரை அவர் எழுதியவற்றில் 90 % சதவீதத்திற்கும் மேலாக நான் படித்திருப்பேன்… அவரது விளம்பரப் பித்தும், சொந்த வாழ்வும் ஒரு … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்