……………………………………………………

…………………………………………………..
………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………..
……………………………………………………

…………………………………………………..
………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………..

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…
If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம் காசுலதானே இவங்க எலெக்ஷனை சந்திக்கிறார்கள், காசுக்குத்தானே கூட நிற்கிறார்கள் என்பது நன்றாகப் புரிந்துபோனதால் குறைந்த அளவு சீட்டுக்களைக் கொடுத்தார்கள். காங்கிரஸுக்கு, ஆற்றிலொரு கால், சேற்றிலொரு கால் என்ற நிலைமை. ஒருவேளை திமுக அவங்க சொல்வதுபோல பெரும் வெற்றி பெற்றால் நமக்குத்தானே நல்லது என்ற எண்ணம் பலரிடம். சிலர், தவெக வுடன் கூட்டுச் சேர்ந்தால் பதவி கிடைக்குமே என்ற ஆசை.
காங்கிரஸின் நிலைப்பாடு சரி என்று மாணிக்தாகூர் நிறுவ முயல்கிறார். தமிழக மக்கள் தவெக விற்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. அதனால் அவங்களுடன் சேர்வதில் தவறில்லை என்று.
இதே லாஜிக்தான் திருநமூல் காங்கிரஸ் எம்பிக்கள் எம்.எல்.ஏக்களுக்கும். பாஜகவிற்கு ஆதரவு கொடுத்திருக்காங்க மக்கள். அதனால் அவங்களை ஆதரிப்போம் என்கிறார்கள் (மம்தா க்ரூப் தவிர). இதைத்தான் மராட்டிய மாநிலத்தில் ஷிண்டேவும் செய்தார். அவர்களைக் குறை சொல்ல காங்கிரஸுக்கு யோக்கியதை உண்டா?
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற பல கட்சிகள் தனித்து நின்றால் ஓரிரண்டு சீட்டுகள் கிடைப்பதற்குள் திக்கிமுக்கிப் போய்விடுவார்கள். தமிழகத்தில் ஒரு சீட் கிடைப்பதும் கடினம். கட்சி நிலைமை தெரிவதால், எந்தக் குதிரை வெற்றி பெறுமோ அதன் முதுகில் சவாரி செய்ய முனைகிறார்கள். அவ்ளோதான் விஷயம்.
இதில் ‘மதச்சார்பற்ற’ என்ற லேபிளின் அர்த்தம் என்ன இருக்கிறது? அதற்குப் பதிலாக ‘முஸ்லீம் கிறித்துவ’ சார்பு கட்சிகள் என்று பெயர் வைத்துக்கொண்டால் நியாயம். அப்படி பெயர் வைத்தால் இருக்கிற வாக்குகளும் போய்விடும் என்ற பயத்தால் இந்த ஏமாற்றுவேலை. இவர்கள் இப்படிச் செய்வதால்தான் பாஜக அசுர வளர்ச்சி பெறுகிறது.
காங்கிரஸின் நிலைப்பாடு சரியா தவறா என்பதைவிட, தோல்வியடைந்த திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகள் நல்லா வறுத்தெடுக்கிறார்கள் பழி வாங்குகிறார்கள் என்பதே நல்ல செய்தியாகத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால், தனித்து நின்றால் பாதி கவுன்சிலராகக்கூட ஆகமுடியாத வை கோவாலசாமியின் மதிமுக என்ற பூச்சிக்குக் கூட கொடுக்கு முளைக்குமா?