அடேயப்பா – 100 கோடி …!!! ஆனால் அதெப்படி மந்திரிகள் யாரும் சம்பந்தப்படாமல் …???

……………….

……………………………………………………………………………………………………………….

திட்டம் போட்டு, திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது…..

அறப்போர் இயக்கம் மூலம் வெளிவந்திருக்கும் மிகப்பெரிய
தொடர் மோசடிகள்….பற்றிய செய்தி கீழே –

( இத்தனை பெரிய தொடர் சங்கிலி மோசடிகளை,
உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து வெளிப்படுத்தி
இருக்கும் அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு –
முதலில் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்…)

இது போல் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் மோசடிகள் எத்தனை கோடியோ….!!!

……

ஆனால், மந்திரிகள் யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை
என்றால் நம்ப முடியவில்லையே….???
இன்னும் கொஞ்சம் தீவிரமாக ஆராயுங்களேன்…!!!

…………………..

ரூ.100 கோடி மதிப்பு சொத்து! மோசடி பத்திரப்பதிவு …. !
நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜிக்கு சிக்கல் –

……………

சென்னை: ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக
பத்திரப்பதிவு செய்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம்
பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அறப்போர் இயக்கத்தினர்
ஆதாரங்களுடன் புகார்கள் எழுப்புவதால், இந்த விவகாரத்தில்
தொடர்புடைய சார் பதிவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் மகன் மீது குற்றஞ்சாட்டி அறப்போர் இயக்கம் விடுத்துள்ள புகார் விவரம் வருமாறு;

பத்திரப்பதிவு: ”பத்திரப்பதிவு துறையில் நில மாபியா,
நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு,
வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆர்காட் ரோடு
கிட்டத்தட்ட ரூ.100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர்,
சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும்
செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பி உள்ளோம்.
மதுரை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முக்கிய
இடங்களில் ஒன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்.

சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1.8ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பத்திரபதிவுகளில் ஈடுபடுகின்றார் இளையராஜா என்னும் நபர்.”

மோசடியாக பதிவு: ”10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் 02/07/2021
அன்று பொது அதிகார பத்திர பதிவு செய்கிறார்கள்.
இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர்
அனந்தராமன். மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோவில் நிலத்தை
குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு
வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர்
அலுவலகத்தில் 19/07/2021 அன்று பதிவு செய்கிறார்கள். இந்த
பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர்
பிரஷாந்த் சந்தான கருப்பன்.

” பல மோசடிகள்: ”இதில் இவர்கள் யாரிடம் அடகு வைக்கிறார்கள்
என்று பார்த்தால் , இளையராஜா, குடும்ப செலவுக்காக அவருடைய
மனைவி கவிதாவிடமே 15 லட்சம் ரூபாய்க்கு அடகு வைப்பதாக
பத்திரப்பதிவு செய்கிறார்….🤣🤣🤣

மற்றும் அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக
பதிவு செய்கிறார்கள். அதாவது கோவில் நிலத்திற்கு அடுத்தடுத்து
பல பத்திரப்பதிவு உருவாக்குவதற்காக இதை செய்கிறார்கள்.

இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு. IG பத்திரபதிவு 29/06/2022 அன்று ஒரு
சுற்றறிக்கை அனுப்புகிறார். அதில் தெளிவாக ஏன் இந்த பத்திரப்பதிவு
மோசடி பதிவு என்று குறிப்பிடுகிறார்.

நிலத்தை பதிவு செய்யும் முன்னர் முதலாவதாக இந்த நிலம்
அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்ப் போர்டு நிலமா
அல்லது கோவில் நிலமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அதை சரிபார்க்கபடவில்லை.

இரண்டாவது, பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளது
என்று குறிப்பிடுகிறார். இந்த விதிமீறலை வைத்து தான் பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் செய்யப்படுகிறது.” சார்பதிவாளர் அலுவலகம்: ”விதிபிரிவு 28 இன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.

மேலும் ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில்
இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி.

ஆனால் மேலே பதியப்பட்ட இரண்டு நிலங்களிலும் அப்பட்டமாக
இந்த விதிமீறல் செய்யப்பட்டு உள்ளது இங்கு தெளிவாகிறது.
இவ்வாறு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை
மோசடியாக பதிவு செய்தபின் இளையராஜா மேலும் ஒரு மோசடி
பத்திர பதிவை பெரிய அளவில் செய்ய களமிறங்குகிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில்
உள்ள 1.3 ஏக்கர் – கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள்.

விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள்
சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில்
பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர்
அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார்.

பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர்
2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில்
பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள்.

இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா city civil நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இன்றைய தேதி வரை இந்த வழக்கு நடந்து கொண்டு உள்ளது.

IG பத்திரபதிவு ஜூன் 2022 அன்று மேற்கண்ட சுற்றறிக்கையை
வெளியிட்ட அடுத்த மாதமே, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள
இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத
திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும்,
BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன்
நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி
ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள். 🤞🤞🤞

வேறொருவர் அதாவது வசந்தா மற்றும் சுந்தர மகாலிங்கம் பெயரில்
உள்ள நிலத்தை ஒப்பந்தம் போட இளையராஜா வந்த பொழுதே
அவர் பெயர் பட்டாவில் இல்லை மற்றும் முந்தைய பத்திரப்பதிவுகளில்
அவர் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் .
மேலும் பிரிவு 28 ஐ மீறி சென்னை நிலத்தை திருநெல்வேலியில்
பதிய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் .

ஆனால் சார்பதிவாளர் சரவணமாரியப்பன் ஜூலை 2022 இல்
பத்திரப்பதிவு செய்கிறார். சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ளவில்லை.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு
இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக 2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் 50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளளார்.

இந்த மோசடி பத்திரப்பதிவு மற்றும் பண பரிவர்த்தனைகள் கிரிமினல் விசாரணைக்கு உள்ள்லாக்கப்பட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் நில மோசடி பதிவு செய்த இளையராஜா, தானே தான் இந்த
நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும் இந்த நிலம்
குலாப்தாஸ் நாராயண் தாஸ் ஆகியவர்களின் பேரன் ஜெயந்திர
ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை
திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்
BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன்
நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஜூலை 2022 இல் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த முறைகேட்டில் அதிரடியாக களமிறங்கிய வருவாய் துறை
நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தின்
பட்டாவை சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில்
இருந்து, 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலும், 😜 1944ஆம் ஆண்டு சென்னையிலும் இறந்த 😜 ( ……!!!!!! -???? )

குலாப்தாஸ் நாராயணதாஸ் அவரின் பெயருக்கு ஆகஸ்ட் 2022 ஆம்
ஆண்டு பட்டா மற்றம் செய்து அதிரடிகாட்டி உள்ளனர். இவ்வளவு
பெரிய மோசடி பத்திர பதிவு உயர் அதிகரிககுக்கு தெரியாமல்
நடந்ததா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் மாவட்ட சார்பதிவாளர் தணிக்கையில் இந்த மோசடி பதிவு
சிக்கியதா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. முக்கியமாக
இதில் குலாப்தாஸ் நாராயணதாஸ் 1946 இல் மகாராஷ்டிராவில்
இறந்ததாக ஒரு இறப்பு சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார்,

ஆனால் மற்றொரு புறம் இவர் 1944 இல் சென்னையில் இறந்ததாக
வேறு ஒரு இறப்பு சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது. ( …!!!!!) 🙌🙌

நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் திருநெல்வேலி MLA பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக
இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் IPC
சட்ட பிரிவுகளை மீறி இது ஆவணம் பதிவு செய்யப்பட்டதாக
அறிகிறோம்.

எனவே MLA நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

  • இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை இருந்தால்,
    நமது எந்த நிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
    இந்த மோசடி பத்திரப்பதிவுகள் குறித்து
    அறப்போர் இயக்கம் அரசு தலைமை செயலர்,
    பதிவு துறை அமைச்சர், பதிவுத்துறை செயலர்,
    வருவாய் செயலர், சென்னை காவல்துறை ஆணையர்
    ஆகியோருக்கு புகார் அளித்துள்ளது.

அரசு இது போன்ற நிலங்களின் உண்மை தன்மையை கண்டுபிடித்து
வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை
பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இது போன்ற நிலங்களில் ஏழ்மையில் உள்ள வீடுகள் இல்லாத
எண்ணற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கலாம்.

மோசடி ஆவணங்கள்: ”இந்த மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து
செய்யப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட முகாந்திரம் உள்ள
இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும்
MLA நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
எடுக்க அறப்போர் கோரி உள்ளது.

முக்கியமாக பள்ளிகரணை சதுப்பு நிலத்தை ராயபுரத்தில் பதிவு
செய்த போதே அங்கயற்கண்ணி மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இளையராஜா போன்றவர்கள் அதே தவறை செய்ய துணிந்து இருக்க மாட்டார்கள்.

ஆனால் தப்பு செய்யும் நில அபகரிப்பு குழு மற்றும் அதிகாரிகள்
தொடர் விதிமீறல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் மூர்த்தி ( …??? ) மற்றும் செயலர்கள் இதன் மீது உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மோசடி ஆவணங்களை ரத்து செய்யும்வரை, சட்டவிரோத
பத்திரப்பதிவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை
அறப்போர் தொடரும்.” இவ்வாறு அந்த புகார் மனுவில் அறப்போர்
இயக்கம் தெரிவித்துள்ளது.

( https://tamil.oneindia.com/news/tamilnadu/arappor-iyakkam-complaint-about-nainar-balaji-son-of-bjp-legislator-nainar-nagendran-506981.html?story=4 )
Updated: Wednesday, April 12, 2023.

.
………………………………………………………………………………………………..….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அடேயப்பா – 100 கோடி …!!! ஆனால் அதெப்படி மந்திரிகள் யாரும் சம்பந்தப்படாமல் …???

  1. புதியவன் சொல்கிறார்:

    யார் இந்த அறப்போர் இயக்கம்? ஏப்ரல் 14 அண்ணாமலை செய்திகளைப் பின்னுக்குத் தள்ளுவதற்காக வந்திருப்பவர்களா?

    • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      அண்ணாமலை ஊழல்பட்டியலிலிருந்து ஏன் சொத்து விவரங்களுக்கு மாறினார்.. மேலிடத்து உத்தரவா😆

      • புதியவன் சொல்கிறார்:

        1. ஊழல் பட்டியலினால் பிரயோசனமில்லை. ஊழல்னா வழக்கு போடு என்ற கேள்வியை எதிர்நோக்க வேண்டியிருக்கும். சொத்து விவரங்கள் – இதை எப்படி முழுமையாகச் செய்யமுடியும் என்று தெரியவில்லை.

        2. என்ன விவரங்கள் கொடுத்தாலும், தேர்தலுக்குப் போட்டியிடும்போது கொடுத்த விவரங்களைத் தாண்டி மற்றவற்றைச் சொல்வது இயலாது. பினாமி, எல்லாத் தொழில்களிலும் 20 சதம் என்பதெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது. ஜெகத்ரட்சகன் என்ன செய்து 50,000 கோடி சொத்து சேர்க்க முடிந்தது? அதில் எவ்வளவு யாருடையது என்றெல்லாம் கண்டுபிடிப்பது கஷ்டம். திருநெல்வேலிக்கு ஒரு விஷயமாகப் போயிருந்தபோது, அங்கிருந்த டாக்சி டிரைவர், ஒரு மருத்துவமனையைக் காட்டி, இதன் ஓனர்களை மிரட்டி க.ழி வாங்கிட்டாங்க, இப்போ இந்த ஹாஸ்பிடல் அவங்களோடது என்று சொன்னார். இதையெல்லாம் எப்படி கண்டுபிடித்து லிஸ்டில் சேர்ப்பது? என்று இதைச் செய்யமுடியும்?

        3. நம்ம நீதித்துறை மாதிரி மிகச் சிறப்பான நீதித்துறை உலகத்தில் கிடையாது. ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவனெல்லாம் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனதை (2ஜி ராசாவின், உறவினர்களெல்லாரும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனதை), எந்தப் பணம் எங்கேயிருந்து வந்தது என்பதையெல்லாம் கண்டுபிடிக்கத் திராணி இல்லாத உளவுத் துறை மற்றும் அரசுத் துறைகள். கேபிளை வீட்டுக்குப் போட்டு கோடிக்கணக்கில் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தவனை இன்று வரை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இத்தகைய துறைகளை வைத்துக்கொண்டு ‘ஊழல்வாதிகளை’ ஒன்றுமே செய்ய இயலாது.

        4. அண்ணாமலை இந்த விஷயத்தை ரொம்பவே விளம்பரப்படுத்திட்டார் என்று எனக்குத் தோணுது. அதனால் புஸ்ஸாகிவிட மிக அதிக வாய்ப்பு. முன்பு, பொங்கல் பரிசு, ஆவின் இனிப்பை புறம்தள்ளி A2Bல கமிஷன் போட்டது என்பதையெல்லாம் சொல்லி, அரசை வேறு வழியில்லாமல் பின்வாங்க வைத்ததுபோலச் செய்தால் அர்த்தம் இருக்கும்.

        5. அண்ணாமலைக்கு இன்னும் சில மாதங்கள் கிரக நிலை சரியில்லையாம். அதனால்தான் அவருக்குப் பின்னடைவாம். பிறகு நல்ல உச்சத்திற்குச் செல்வாராம். இப்படி சில ஜோஸ்யங்களை நான் கண்டேன்.

        அண்ணாமலை, கட்சியை மீறி புகழ் பெறுவது (அவரது திறமையால்) கூட இருக்கும் சகாக்களுக்கே பிடிக்கவில்லை. திமுக அதிமுக என்று இருந்த இரு முனைகளை, பாஜக என்று (அண்ணாமலை என்று) மும்முனையாக மாற்றுவது அந்த இரு கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை. அதனால் அண்ணாமலையைப் பற்றி அளவுக்கு அதிகமாக நெகடிவ் செய்திகள் இணையம் மற்றும் பேட்டிகளில் வருகிறது. ஹேஸ்யங்களும் அதில் அதிகம். எல்லாம் ‘வரவு’க்காகத்தான்.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    I think – this question is meant for – புதியவன்…..!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s