………………………………………..
…………………………………………………………………………………………………………..
ஊழலா, ஃபாசிஸமா என்று கேட்டால் ஊழலை பொறுத்துக் கொள்ளலாம் – ஃபாசிசத்தைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களை – முக்கியமாக … கம்யூனிஸ்டுகளை கடுமையாகச் சாடுகிறார் மணி …!!! ( புரிகிறது…. நம்ம 5 கோடி, 10 கோடி தோழர்களைத் தான் சொல்கிறார்…!!!)
அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்…. ஆனால், தன் மனதில் தோன்றுவதையெல்லாம் அவர் வெளிப்படையாகப் பேசுகிறார் என்பது தான் இங்கே முக்கியம்.
கொஞ்சம் பொறுமையாக கேட்டால் – மிகக் கடுமையான வார்த்தைகளை
பயன்படுத்தினாலும் கூட, மணி அவர்கள் சில விஷயங்களைப் பொருத்த வரை ரியலிஸ்டிக்காகப் பேசுவது தெரிய வரும்.
எத்தனை சர்வே முடிவுகள் வந்தாலும்,
மக்கள் மனதில் இருப்பதை முழுமையாக அறிய யாரால் முடியும் ….???
நடப்பு அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம் இந்த வீடியோவை –
…………………………
.
………………………………………………………………………………………………………………………………..
அந்த காலத்தில் பத்தாவது வரை மட்டுமே படித்தவர்களை , எதுவரை படித்துள்ளீர்கள் என்று விசாரித்தால் ,தாங்கள் SSLC வரை மட்டுமே படித்துள்ளோம் என்று கூறமாட்டார்கள் ..
மாறாக ,தாங்கள் அந்த காலத்து SSLC என்று கூறி, சமாளிப்பார்கள்.
அதுபோன்று தான் தற்போதைய சமாளிப்புகளும் உள்ளன.
யார் வெற்றிபெறுவார், யார் தோல்வியுறுவார் என்று கேட்டால்,
மறந்தும் கூட காங்கிரஸ் தோல்வியுறும் என்றும் கூறி விட மாட்டார்கள்..
மேலும் ,பிஜேபி வெற்றிபெறும் என்று கூற மாட்டார்களாம். மாறாக, பிஜேபி , குறைந்த அளவு மெஜாரிட்டியுடன் தான் வெல்லும் என்று அறிவாளித்தனத்துடன் தான் பதிலளிப்பார்கள் .
என்னமோ போங்க….
காங்கிரசின் தோல்விக்கு யாராவது ஆலோசனை வழங்க மாட்டார்களா ….
மாறாக பிஜேபி தோல்வியுற போகும் மாநிலங்களை பிரதானப்படுத்தி விமரிசித்து, கடைசியில் பிஜேபியின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்றும் வாதாடுவார்கள், இதே அறிவாளிகள்.
வெற்றி வெற்றிதான்…
தோல்வி, தோல்விதான்….
இது புரிந்த பாடில்லை…
எவ்வளவு சமாதானங்களோ … பாவம் இவர்களின் நிலைமை …
உண்மை நண்பரே இங்கு பிஜேபி வளர்ச்சியை
யாரும் விரும்பவது இல்லை நல்லவரான மோடி நன்றாக
வாழ்வார் வெல்வார் ஈசன் அருளால்