ஒரு நாளும் உனை மறவாத …

.
“கேளடா மானுடா – இங்கு தாழ்ந்தவர் உயர்ந்தவர் இல்லை …”
-என்று சொன்ன புரட்சிக்கவியை –

” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” – என்று கேட்டு,
நொந்து, வெந்து, மறைந்தவர்களை –

அவர்கள் செய்த தியாகங்களை,
அவர்கள் நெஞ்சம் உருகி சொன்ன வார்த்தைகளை –

நினைத்து – அவர்கள் மீது மட்டற்ற அபிமானமும், மரியாதையும்
கொண்டவர்கள் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் நாளிது –

மஹாகவி பாரதி பிறந்த நாள்….

.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஒரு நாளும் உனை மறவாத …

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இன்று நாம் அனுபவிக்கும் இந்த இனிய சுதந்திரத்தைப் பெற்றுத்தர சொல்லொணாக்கொடுமைகளுக்கு உள்ளாகி, தங்களது இன்னுயிரையும் பறிகொடுத்த அந்த தியாகிகளுக்கு நமது வீர வணக்கங்கள்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது வானுயர கோயில்களையும் …நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பாடல்

    ”முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே – அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே” என்ற பாரதி, இதைத் தொடர்ந்து,

    ”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
    சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
    அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
    ஆர்ந்ததும் இந்நாடே”

    நம் நாடும் அதன் கலாசாரமும் எவ்வளவு பழமையானது என்றால், ‘பழங்காலத்தில் நிகழ்ந்ததை, இன்றைய காலகட்டத்தில் துல்லியமாக உணரும் ஆற்றல் வாய்ந்த கலை நிபுணர்களாலும் வகுத்துக்காட்ட முடியாத அளவுக்கு நம் நாட்டின் ” பழமை சிறப்பு அறியதாக ‘‘ உள்ளது என்பார் பாரதி.

    ”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
    சூழ்கலை வாணர்களும் – இவள்
    என்று பிறந்தவள் என்றுணராத
    இயல் பினளாம் எங்கள் தாய்”
    இதைப் பாடுகிற குழந்தைகளுக்கு தாய்நாட்டைப் போற்றும் தன்மை தானாக வந்திடுமே !…. வந்திட வேண்டும் …!!

    நம் மக்கள் வீறு பெற்று , அன்னிய சக்திகள் நம்மீது மீண்டும் ஆளுமை செலுத்தாமல் இருக்க, பாரதியின் இப்பாடல் வழிகாட்டும் :
    ”ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய
    வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
    காக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்
    கடலினிலே உயர்நாடு” … உம் எல்லாம் சொன்ன பாரதி வாழ்க …. ஆனால் இன்று நாடு செல்லும் பாதை …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.