ஒரு சுவாரஸ்யமான காட்சி – நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியிலிருந்து..


பாருங்களேன்… எம்.ஜி.ஆர். -க்கு எப்பேற்பட்ட ரசிகர் என்று…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஒரு சுவாரஸ்யமான காட்சி – நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியிலிருந்து..

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ”

    ‘நான் நாலாவது படித்துக்கொண்டிருந்தபோது, என் நண்பன் ‘மாறன்’ அவங்க வீட்டுல கரும்பு ஜூஸ், கரும்பு கடை நடத்திக்கிட்டிருந்தாங்க. எம்ஜியார் கட்சி ஆரம்பித்தபோது அவங்க கடைல சிறப்பு சலுகையா 15 பைசாவுக்குப் பதிலாக 5 பைசாவுக்கு கரும்புத் துண்டுகள் வித்தாங்க. (72.ல). அவனோட சேர்ந்துக்கிட்டு அதுக்கு சற்று முன்பாக (எம்ஜியாருக்கு சின்னம் கிடைக்காமல், ‘தாமரை’ச் சின்னம் இருந்ததுன்னு நினைக்கறேன். எதுனாலன்னு எனக்கு இப்போ தெரியலை) தாமரைச் சின்னம் நானும் அவனும் வரைந்து, ‘எம்ஜியார்’ வாழ்கன்னு எழுதி பஸ் பின்புறம் ஒட்டிய ஞாபகம் இருக்கு. (இப்போ அதையெல்லாம் நினைத்தா சிரிப்புதான் வருது). நான் இருந்த ஊருக்கு ஒரு சமயம் (73) கஞ்சித் தொட்டி திறக்கும் விழாவுக்கு எம்ஜியார் அண்ணன் சக்கரபாணி அவர்கள் வந்தார்கள். வரவேண்டிய நேரத்துக்கு 5 மணி நேரம் தாமதமாக வந்தார்கள். அவ்வளவு கூட்டம் அவருக்காகக் காத்திருந்தது.

    எம்ஜியாரிடம் அப்போது மக்களுக்கு இருந்த அபிமானம் மிக மிக அதிகம். எம்ஜியாரால் எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காத அத்தகைய அபிமானிகள் வேறு யாருக்கு அமைந்திருந்தார்கள்?

    அவரது குணம், அவர் நிறத்தைப் போல. எல்லார் மனதிலும் எப்போதும் அவர் இருப்பார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.