…
…
உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கிறார் ராஜா சார்….
ஆமாம் – இன்று முதல் “பத்மவிபூஷண்” இளையராஜா…!!!
வாழ்த்துகள் ராஜா சார்…!!!
அந்த மகிழ்ச்சியில் கொஞ்ச நேரம் மனதை அவரது இசையால் நிரப்பிக்கொள்வோமே…!!!
…
…
இந்த பாடலுக்கு நிச்சயம் “ஒன்ஸ்மோர்” கேட்க வேண்டும் அல்லவா…!!!
…
…
…
Experience With Maha Periyava :
Isaignani Ilayaraja – “ஒளியைத் தேடிய ஒலி”
…
…
——————————————————————————-
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்….!!!
———————————————————————————



இளையராஜாவின் திறமையை நினைவுகூற பாடல்கள் உங்களால் செலக்ட் செயவது சாத்தியமா? நீங்கள் எந்தப் பாடலைக் கொடுத்தாலும், அதை விட்டுவிட்டீர்களே என்று கேட்கத் தோன்றுமளவு நிரம்பத் திறமை பெற்றவர். என்ன பின்னணி அவருக்கு, என்ன மாதிரி திறமை. இறைவன் கொடுத்த கொடை. அவருக் முதல் படம் கிடைப்பதுவரை மிகவும் கஷ்டப்பட்டவர். கங்கை அமரன் கொஞ்சம் ரிலாக்ஸ் மனிதர். இளையராஜா, முன்னேறவேண்டும் என்று இசை சம்பந்தமாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டவர். இவரது ‘பக்தி’ சிலிர்க்கவைக்கக் கூடியது. எங்களது பதின்ம வயது, பள்ளி கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியுறச் செய்தவர்.
எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர் இளையராஜா. அவரது அடக்கமும் மிகவும் பிரசித்திபெற்றது. தன் துறையின் முன்னோடிகளை அவ்வளவு மதித்தவர் அவர்.
உங்கள் தளம் மூலமாக என்போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் சார்பாக அவருக்குப் பாராட்டுகளையும், நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இளையராஜாவின் ‘அடக்கம்’ என்ற குணத்தை எழுதும்போது பெரியவர்கள் எல்லோரிடமும் இந்த குணம் மிகையாக இருந்தது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. எம்ஜியார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி போன்ற பலர், அவர்கள் வாழ்வை ஒட்டிய சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.