…
…
அற்புதமான இயற்கைச் சூழலில், மொரிஷியஸில்
கடந்த சில வருடங்களாக உருவாக்கப்பட்டு
வந்த துர்கா தேவியின் சிலை முழு வடிவம் பெற்று, கடந்த
வாரம், விஜயதசமியன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா மற்றும் மொரிஷியஸைச் சேர்ந்த கட்டிடக்கலை,
மற்றும் சிற்ப நிபுணர்களின் 6 வருட கடும் உழைப்பில்
உருவாகி இருக்கிறது இந்த சிலை.
108 அடி உயரத்துடன், உலகிலேயே பெரிய துர்கா தேவியின்
சிலை என்கிற பெருமையை இது பெறுகிறது.
மொரிஷியஸில் கடந்த 2015-ல் அமைக்கப்பட்ட 108 அடி உயர
சிவன் ( மங்கள் மஹாதேவ் ) சிலையின் அருகில், சில
அடி தூரத்திலேயே, இந்த துர்கா தேவியின் சிலையும்
நிறுவப்பட்டிருக்கிறது….
இந்த இரண்டு சிலை வடிவங்களிலும் காணப்படும்
ஒரு சிறப்பு – அவற்றின் முகத்தில் காணப்படும் அற்புதமான ஒரு புன்னகை….!!! இவ்வளவு பெரிய வடிவத்தில், அந்த புன்னகையை அவ்வளவு அழகாக எப்படித்தான் கொண்டு வந்தார்களோ தெரியவில்லை…அந்த கலைஞர்கள்
பாராட்டுதலுக்குரியவர்கள்…
இந்த இரண்டு அற்புதமான படைப்புகள் குறித்த
காணொளிகள் கீழே –
துர்கா தேவி –
இதனை உருவாக்கும்போது எடுக்கப்பட்ட காணொளி –
அருகில் இருக்கும் சிவன் ( மங்கள் மஹாதேவ் )
சிலை வடிவம் –
——————————————————————-



அழகு. அவ்வளவு அழகு.
உள்ளத்தை அள்ளுகிறது.
A BIG salute to Mauritius Indians.
பார்க்க பல கோடி கண்கள் வேண்டும். நன்றி நண்பரே