…
…
BSF ( Border Security Force ) ராணுவ வீரர்கள் எத்தகைய
சூழலில் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள்
என்பதை, BSF -ஐ சேர்ந்த மேஜர் சுரேந்திர பூனியா
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தின் மூலம்
தெரிவித்திருக்கிறார்.
…

…
இந்த வீரர் காவல் காத்து நின்று கொண்டிருப்பது, இந்தியா
-பங்களா தேஷ் எல்லையில் லோங்காய் நதிக்கரையின்
இந்திய பக்கத்தில்…. ஜூலை 4-ந்தேதி இந்த புகைப்படம்
எடுக்கப்பட்டிருக்கிறது.
இவரைப்போன்ற கண்துஞ்சாத கடமை வீரர்களை
நம்பித்தானே, 125 கோடி இந்திய மக்களும், நிம்மதியாக
உறங்கிக்கொண்டிருக்கிறோம் …!!!



கே.எம்.சார்,
அற்புதமான பதிவு.
“சல்யூட்”டில் உங்களோடு நானும் சேர்ந்துகொள்கிறேன்.
சீன வீரர்கள் இந்திய எல்லையில் கைகலப்பு என்று கூறி ஒரு காணொலி சென்ற வாரம் வைரலானது. ஆனால் இந்திய ராணுவ அதிகாரி அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்கிறார். இதில் எதை நம்புவது?
ஆனால் மேஜர் சுரேந்தர பூனியா போன்றோரின் தன்னலமற்ற உழைப்பு அரசியல்வாதிகளினால் கொச்சைப்படுத்தப்படுவதாக நான் கருதுகிறேன்.