கலைஞருக்கு, திருமதி இந்திராவுடன் ஏற்பட்ட அனுபவங்கள்…..!!!

 

k with indira

கலைஞர் தொலைக்காட்சியில் தொடர்ந்து 70-களில் கலைஞர்
புரிந்த சாதனைகளைப் பற்றிய செய்தி-விளம்பரங்களை ஒளிபரப்பி
வருகிறார்கள். கலைஞரின் 70-களைப் பற்றி இன்றைய
புதிய வாக்காளர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது.

தெரிந்திருக்கக்கூடிய பழைய வாக்காளர்களுக்கோ அவையெல்லாம்
மறந்திருக்கும்….!!!

மறைக்கப்பட்டவை அல்லது மறக்கப்பட்டவை சிலவற்றை
வாசக நண்பர்களுக்கு நினைவுபடுத்தவே இந்த இடுகை ….

நான் சொன்னால் சில நண்பர்கள் நம்ப தயங்கலாம்…..
– ப.திருமாவேலன் அவர்களே சொன்னால் …..?
இதோ அவரது வார்த்தைகளிலேயே –

 

k-0

k-1

k-2

k-3

k with soniaji

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to கலைஞருக்கு, திருமதி இந்திராவுடன் ஏற்பட்ட அனுபவங்கள்…..!!!

  1. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    See Dinamani opinion poll.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ஷரோன்,

      பார்த்தேன். நன்றி நண்பரே.
      தினமலர் செய்யும் தில்லுமுல்லுகளைக் கண்டு
      கடுப்பாகி, அதை சமன்செய்ய தினமணியும் போட ஆரம்பித்து விட்டது
      என்று நினைக்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. mdsalih1993's avatar mdsalih1993 சொல்கிறார்:

    Please use camscaner to scan documents it’s available in Google play store Android App

  3. mdsalih1993's avatar mdsalih1993 சொல்கிறார்:

    Scaned documents export JPEG or PDF format

  4. Narasimhan's avatar Narasimhan சொல்கிறார்:

    எம்ஜியார் கொடுத்த மனுவிற்கு மஞ்சத்துண்டு “படித்தேன் ரசித்தேன்” என்ற நக்கல் மறந்ததோ ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப நரசிம்ஹன்,

      சில விஷயங்கள் அரைகுறையாக நினைவில் நிற்கின்றன.
      இது முழுவதுமாக எழுத்து வடிவில் கிடைத்ததால்
      எடுத்து போட்டு விட்டேன். இன்னமும் கூட பழைய விஷயங்களை
      தேடிக்கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு முன், அவற்றை
      புதிய வாக்காளர்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.
      உங்கள் பார்வைக்கு கிடைத்தாலும் அனுப்புங்கள்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்
    திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது ” நான் பார்த்த அரசியல் ” எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.
    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
    கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
    திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
    “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
    செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
    நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
    “என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
    மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
    “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
    “என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
    “எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
    “இருக்காதே” என்றேன்.
    “இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
    இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
    அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
    கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
    “உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
    “என்ன நினைக்கிறாய்?” என்றார்.
    “கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
    “பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
    ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
    1971 பொதுத் தேர்தலே சான்று.// https://ta-in.facebook.com/iraivanMGR/posts/395123200582495 என்று நீள்கிறது … அதில் // திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
    ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
    இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை. // மேலும் // அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்….. அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
    எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள். // என்றும் நிறைய விஷயங்களை தனது புத்தகத்தில் திரு கண்ணதாசன் பதிவு செய்து இருக்கிறார் … ” தன்னை காப்பாறிக்கொள்ள எதையும் செய்யும் தலைவரல்லவா … ? புதிய தலைமுறை மற்றும் வாக்காளர்கள் — பழைய செய்திகளை தேடி படிப்பது நல்லது — அநேக தலைவர்களின் ” முகமூடிகளை ” விலக்கி — உண்மை முகத்தை காணலாம் அல்லவே … ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.
      இயன்ற வரை இந்த மாதிரி பழைய செய்திகளை எல்லாம்
      புதிய வாக்காளர்களின் பார்வைக்கு அவசியம் கொண்டு
      போக வேண்டும்.

      இல்லையென்றால் – இப்படித்தான்

      //திமுக – காங்கிரஸ் இடையிலான உறவு ஆழமானது //

      என்று கலைஞர் கதை விட்டுக் கொண்டிருப்பார்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // திமுக – காங்கிரஸ் இடையிலான உறவு ஆழமானது – கருணாநிதி
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-campaign-chennai-theevu-thidal-252941.html // … எவ்வளவு ” ஆழம் ” என்று அவருக்கு தான் தெரியும் … ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து ஆழம் பார்த்தவராச்சே … 1967 – க்கு முன்னும் — பின்னும் இன்றுவரை … !!! அய்யா … அ .தி.மு.க. தேர்தல் அறிக்கை … ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      அதிமுக தேர்தல் அறிக்கை பற்றி கேட்டிருந்தீர்கள்…

      ஜெ. அவர்கள் இந்த விஷயத்தை மிக புத்திசாலித்தனமாக
      கையாண்டிருக்கிறார் என்பது என் அபிப்பிராயம்.

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

        // வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும். // இது ஒன்றே போதும் – மற்றவர்களின் குறிப்பாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் ” கல்விக் கடன் ரத்து ” என்று கூறி இருக்கிறார்கள் — ஏனென்றால் பின்னாளில் ” இது மத்திய அரசு விவகாரம் ” என்று சொல்லி தப்பித்து கொள்ள ஒரு தந்திரம் — ஆனால் ஜெயா ஆணித்தரமா — கடன் பெற்று வேலையில்லாமல் இருப்பவர்களின் வங்கிக் கடனை அரசே செலுத்தும் என்று கூறியிருப்பது ஏற்க தக்கது … ! அதைப்போலவே அடிமட்டத்தில் இருப்பவர்களும் ” எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் — இங்கு இல்லாமை இல்லாத- நிலை வேண்டும் ” என்கிற குறிக்கோளும் அவரது அறிக்கையில் தெரிகிறது — ஏழைகளின் இன்றியமையாத – முக்கிய செலவினங்களின் ஒரு பகுதியை அரசு ஏற்றுக்கொள்வது — அவர்களது நிம்மதிக்கு ஒரு வழி தானே — மக்களுக்கு சேர வேண்டியதை அரசு செய்தால் — அதை கொச்சை படுத்தும் விதமாக – சிலர் இலவசம் — பிச்சை — கையேந்த வைக்கிறார்கள் என்று கூறுவது – மக்களுக்கு செய்யும் கைம்மாறா … ? நெத்தியடி ” தேர்தல் அறிக்கை ” — இதைபார்த்து ” தி.மு.க . போன்ற மற்றவர்கள் ” தங்களது அறிக்கையை ” திருத்தப்பட்ட அறிக்கை ” என்று வெளியிடாமல் இருப்பார்களா .. ? என்ற கேள்வியும் எழுகிறது … அப்படி தானே … ?

  7. CHANDRAA's avatar CHANDRAA சொல்கிறார்:

    It is a fact that the present day karuna nidhi is not at all inspiring
    the present younger generation……..
    what he talks is not understood by them
    they consider karuna iyyah only as a avaricious
    politician who wants to become C M
    yes just see dmk will hardly get fifty seats in 2016
    Jeya had actually FIRED
    BRAHMASTRAM km ji

  8. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    When MGR was expelled from the party the DMK leadership would not have foreseen the emergence of MGR as a force to reckon with -That is why even today the DMK is wary of encouraging any one from the cine world to become very powerful in the party –After MGR many have joined the party from the kollywood but have not allowed any one to become too influential —

  9. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    from 1967 to 1978 I was reading all news papers. I am happy to see Mr. Selvarajan’s comments. Thanks to him.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.