.
சென்னையில் அண்மையில் நடந்த ஒரு குற்ற நிகழ்வும், அதை
காவல் துறை கண்டுபிடித்த விதமும், வேகமும் மிகவும் வித்தியாசமாக
இருந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பாராட்டுதலுக்குரியவர்கள்.
தன் வீட்டில் நகைகள் திருட்டுப் போனதை புகார் கொடுக்கப் போன
ஒரு நபர் எப்படி மூன்று கொலைகளுக்கு காரணமாக இருந்தார் என்பது
கண்டுபிடிக்கப்பட்ட விதம் விருவிருப்பாக இருந்தது.
தங்களை பாதிக்காத வரையில், நம்ம ஊர் மக்கள் எதையும்
கண்டுகொள்வதில்லை என்பது மிகவும் அதிர்ச்சியான,
வருந்தத்தக்க விஷயம். ஊர் கெட்டுப்போவதற்கு, மக்களின்
இந்த அலட்சியமும் ஒரு முக்கியமான காரணம்.
வழக்கமான அரசியல் இடுகைகளுக்கு இடையே, ஒரு சுவையான
“போலீஸ் ஸ்டோரி”யை கொடுப்போமே என்று நினைத்தேன்.
கதை கீழே –







இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால், தவறுகளுக்கு சாட்சி வைத்துக்கொள்ளாதே. அப்படி வைத்துக்கொண்டால், என்றைக்கும் அது தலைக்குமேல் தொங்கும் கத்தி.
இந்த இன்வெஸ்டிகேஷன் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினீயர், தன் மனைவியைக் கொன்றுவிட்டு, முன்னாள் காதலியை அடைவதற்காக, காதலியின் கணவனை பயங்கரவாதியாகச் சித்தரித்து மொத்தமாக மாட்டிக்கொண்ட கதைதான் நினைவுக்கு வருகிறது. அதில், அந்த இஞ்சினீயரின் ஒரே குழந்தையை, அந்தக் காதலியே தன் மகளாக வளர்ப்பதாக ஏற்றுக்கொண்டது.
காவல் துறையினரும், குற்றங்களோடே (குற்றவாளிகளோடே) எப்போதும் பயணிப்பதால், அவர்கள் எதையும் ஸ்மெல் பண்ணிவிடுவார்கள். பாராட்டவேண்டியதுதான்.
///////////தங்களை பாதிக்காத வரையில், நம்ம ஊர் மக்கள் எதையும்
கண்டுகொள்வதில்லை என்பது மிகவும் அதிர்ச்சியான,
வருந்தத்தக்க விஷயம். ஊர் கெட்டுப்போவதற்கு, மக்களின்
இந்த அலட்சியமும் ஒரு முக்கியமான காரணம்./////////////////////
ஐயா என்ன செய்ய வேண்டும் . பரிதாபம் தான் வருகிறது. இன்றைய நகர வாழ்க்கை அப்படி ஆகி விட்டது.
எங்கள் ஊரில், அந்த தெரு மக்கள் கூடி நின்று பேசி ஒரு முடிவு எடுப்பார்கள். உதாரணமாக எப்படி தடுப்பது மற்றும் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்று .
நீங்கள் சொல்லுங்கள்.
cruel