.
.
தமிழில் வெளிவந்த முதல் நாளிதழ் “சுதேசமித்திரன்” பற்றியும், அதன் நிறுவனர், ஆசிரியர் திரு.ஜி.சுப்ரமணிய அய்யர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் பல விவரங்களை முதல் தடவையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜூ.வி. ஆசிரியர் திரு.ப.திருமாவேலன்.
சுப்ரமணிய அய்யரின் சமுதாய சீர்திருத்த
முயற்சிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்பதாலேயே –
சுதந்திரப் போராட்ட களத்தில் அவர் செய்த தியாகங்களும்,
ஆற்றிய சமூகப்பணிகளும் – வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமல்போய் விட்டது என்பதையும் விரிவாக விவரிக்கிறார்
திருமாவேலன். நம் விமரிசனம் தள நண்பர்கள் அவசியம்
படிக்க வேண்டும் என்பதால் அதனை கீழே பதித்திருக்கிறேன்.
பின் குறிப்பு –
இதில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் சிலவற்றைப் பற்றி நான்
என் இளம் வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் –
அதை விவரமாக உணரும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது.
இந்த கட்டுரையை இங்கே பதிவு செய்வதில் எனக்கு
வித்தியாசமான ஒரு ஆனந்தமும் திருப்தியும் கிடைக்கிறது.
காரணம் –
இதே ஜி.சுப்ரமணிய அய்யரின் நிர்வாகத்தில்,
சுதந்திர போராட்ட காலத்தில் –
” சுதேசமித்திரன் ” நாளிதழில் –
புரட்சிக் கவி சுப்ரமணிய பாரதி பணியாற்றிய அதே அறையில்,
சில வருடங்கள் என் தந்தையும் பணியாற்றினார் என்பதே….!!!







https://soundcloud.com/vikatan/periyorkalae-thaimarkalae-junior-vikatan-18
same in audio format
பிங்குபாக்: பெண்களின் திருமண வயது 10 ஆக இருந்தபோது – காந்திஜி தமிழகம் வரும் முன்னரே …… | Classic Tamil