கர்ண மகாராஜா …
தான் சாப்பிடவே மாட்டார்….
ஆனால் நண்பர்கள் எல்லாரும் சாப்பிட –
வாரி வாரி வழங்கும் வள்ளல்….
போகும் இடங்களில் எல்லாம் “பிஸினஸ்”
வாங்கிக் கொடுத்துக் கொண்டே
இருக்கும் கொடை வள்ளல்…!!!
லேட்டஸ்ட் கொடை –
போகிற போக்கில் கஜகஸ்தானில் ரெயில் ஓட்ட,
அடானி ( குஜராத் துறைமுக கம்பெனி )க்கு காண்ட்ராக்ட்
கிடைத்திருக்கிறது….
துறைமுக கம்பெனி – ரெயில் ஓட்டப்போகிறது….!
“அடானி கே அச்சே தின் ஆ கயே…! “
வெளியுறவுத்துறை அதிகாரி திருவாளர் விகாஸ் ஸ்வரூப்
அவர்களின் ட்விட்டர் செய்தி கீழே …!!!





ஜி, போட்டோவுக்கும் பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்து போட்டிருக்கிறீர்களா? அல்லது
நண்பர் டுடேஅண்ட்மீ,
ஒரு மாறுதலுக்கு, தஜிகிஸ்தான் முகத்தையும் தான் மக்கள்
பார்க்கட்டுமே என்று தான் அந்த போட்டோ….!!!
ஆமாம் – அங்கெல்லாம் ராணுவ மரியாதையை/வரவேற்பை கூட
ஹாலுக்கு உள்ளேயே ( மூடிய அரங்கத்தில் ) வைத்துக் கொள்கிறார்களே –
அதைப்பற்றி எதாவது தெரிய வந்ததா உங்களுக்கு …?!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: அடானி கஜகஸ்தானில் ரெயில் ஓட்டப்போகிறார்….!!!! | Classic Tamil
Your thirst in search of Modi’s inclination to Adani quenches by this tweet.In my angle let us wait for further details & crddit to other MOUs
அதாவது தமிழ் நாட்டில் மின்சாரம் தயாரித்து கஜகஸ்தானில் ரயில் ஓட்டப்போறாருங்கோ, அதானி.
“ஒரேவொருத்தர்” முன்னேறினா பொறுக்காதே உங்களுக்கெல்லாம்!
தப்பு அஜீஸ்….
அடானி ஒரு தட்டு, அம்பானி இன்னொரு தட்டு –
இடுகை படிக்கவில்லையா …?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அப்புறம், அடுத்து எந்த நாட்டுக்கு? என்ன ஒப்பந்தம் ? யாருக்கு ?. இங்கு வளர்ச்சி ஒரு சிலருக்கு மட்டுமே மடை திருப்பி விடப்பட்டுள்ளது. இங்கு விவசாய நிலம் எடுப்பதும், மேலை நாட்டில் ஒப்பந்தம் போடுவதும் ஒரு சிலருக்கே !. உங்களது டிஜிட்டல் இந்திய பதிவு (ஜூ.வி) தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி மட்டுமே சிந்தனையாக உள்ளது. மக்கள் வளர்ச்சி என்பது ஏமாற்றமே ….
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் – நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் –
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா..!
ஒருத்தர் சிரிச்சா அவமானம்
ஊரே சிரிச்சா கல்யாணம்
பழமொழி வெகுவாக பயன்படுகிறது.
மேலும்,
“ஒண்ணுமே புரியலே இந்தியாவிலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது!”
எனும் பாடல்
தேசீய கீதமாக ஆகிவிட்டது
நாமதான் அரசியல்வாதிகளைப் பார்த்து ஏமாறுகிறோம். நாம ஏதாவது நல்லவங்களுக்கு கேரண்டியா திருப்பி ஆட்சிக்கு வரச் செய்வோம் என்று செய்திருக்கிறோமா? அதனால், நம் மனது மாறும்வரை எப்படி கட்சி நடத்துவது? நம்ம இந்திய அரசியல் இப்படிப் போய்க்கிட்டிருக்கு.