சொல்வதும் –
சொல்லாமல் தெரிவதும் !
இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும்
தலைப்புகளைப் பார்த்தவுடனேயே –
நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே
உருவாவதை தவிர்க்க முடியவில்லை !
உதாரணத்திற்கு – இன்றைக்கு வந்துள்ள
சில செய்தி தலைப்புகளையும்
உடனடியாக மனதில்
தோன்றுவதையும் பாருங்களேன் –
கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு
அதிகாரம் இல்லை : யுவராஜா
(ரொம்ப சரி – ஆனால் இதைச்சொல்ல
உங்களுக்கு அதிகாரம் உண்டா ? )
தி.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்:
ஏராளமானோர் கைது !
( தி.க. ஆர்ப்பாட்டம் என்கிறீர்கள்.
பிறகு ஏராளமானோர் என்று வேறு
சொல்கிறீர்களே !)
(பின்னர் புகைப்படத்தை பார்த்தேன்
13 முழு டிக்கெட்டும்,
3 அரை டிக்கெட்டும்
தான் அந்த ஏராளமானோர் ! )
மாநில, தேசிய அரசியல் குறித்து
கருணாநிதி, பிரணாப் பேசிக்
கொண்டனர்: தங்கபாலு
(ஏன் – ஹிலாரி க்ளிண்டன்,
ஏஞ்சலினா ஜூலி
பற்றி எல்லாம் பேசவில்லையா ?
இன்னும் தெளிவாக “கனிமொழி”
பற்றியோ, “திகார் சிறை”
பற்றியோ பேசவில்லை
என்று தங்கபாலு
சொல்லி இருக்கலாமே !)
வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்:
ஸ்டாலின் திருச்சி, ஜூலை 8:
(சட்டப்படி கூட சில காரியங்களை
செய்யலாம் என்பது இப்போது
எங்கள் நினைவிற்கு வந்து விட்டது !)
தயாநிதி மாறனுக்கு மாற்றாக வேறு
யாருக்கும் மந்திரி பதவி
கேட்க மாட்டோம்: டி.ஆர்.பாலு
(ஏனென்றால் அவருக்கு இணையாக
இன்னும் ஒருவரை எங்களால்
கண்டு பிடிக்க முடியாது !)




நிஜமான சாமியாரா இல்லை ….