Category Archives: Uncategorized

யாருக்கு ஓட்டு -? மோடி .., பாஜக .., அல்லது ….? (பகுதி-1)

This gallery contains 1 photo.

துவக்கத்திலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நான் ஏற்கெனவே பலமுறை இந்த தளத்தில் சொன்னது போல் – நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனல்ல.. சார்ந்திருக்க எனக்கு விருப்பமும் இல்லை. எந்த கட்சியையும் சாராதிருந்தால் தான் எந்த விஷயத்திலும் சுதந்திரமாக கருத்து சொல்ல முடியும் என்பது என் அபிப்பிராயம். இல்லையேல் சார்ந்திருக்கும் கட்சியின் தவறான முடிவுகள், செயல்களுக்கெல்லாம் அநாவசியமாக … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

“நான் ஒரு ‘அனார்கிஸ்ட் “- என்றால் என்ன ஆகும் ..?

This gallery contains 4 photos.

“நான் ஒரு ‘அனார்கிஸ்ட்’ தான் – நான் ஒரு அராஜகவாதி என்று அழைக்கப்படுவதை ஏற்கிறேன்” என்று ஒரு அரசியல்வாதி, அதுவும் முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சொன்னால் என்ன விளைவு ஏற்படும் ..?   இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நமக்குப் பெற்றுத்தர எத்தனை எத்தனை பேர் அடி பட்டார்கள், உதை பட்டார்கள், செக்கிழுத்தார்கள், வெஞ்சிறையில் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“ஞாநி” அவர்களே -ஊரார் பணம் உங்களுக்கு எதற்கு …?

This gallery contains 1 photo.

தேர்தல் லட்சியம் குறித்து ஆப் கட்சி அறிவித்தது என்ன ? “ஊழல்வாதிகள் போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகளில் எல்லாம் அவர்களை எதிர்த்து ஆப் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்” என்பது தானே ? அதிருஷ்டவசமாக, திருவாளர் ஞாநி வசிக்கும் சென்னையிலேயே, தொலைபேசி ஊழல் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். ஞாநி அவரை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவது தானே சரியாக இருக்கும் ..? … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…?

This gallery contains 3 photos.

போன மாதம் (மார்ச் 5ந்தேதி ) “நண்பர் “ஞாநி”அவர்களுக்கு ஒரு திறந்த மடல் ….” என்கிற தலைப்பில், தேர்தலில் போட்டியிடுவது என்கிற அவரது முடிவு குறித்தும், ஆம் ஆத்மி கட்சி பற்றியும், இடுகை ஒன்று இதே தளத்தில் வந்திருந்தது. அதில் ஞாநி அவர்களிடம் – பல நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன். இன்று வரை, அவரிடமிருந்து … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இன்று கார்ட்டூன் ஸ்பெஷல் …

This gallery contains 14 photos.

      —————————————— எழுதிக்கொண்டிருக்கிறேன் – முடித்த பிறகு வருகிறேன்…அடுத்து – “ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…? ——————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்..(பகுதி-3) (கடல்களைக் கடந்து -4)

This gallery contains 9 photos.

1000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தோனேஷியாவில்தமிழர் ஆட்சி நடைபெற்று வந்தது என்பதற்கு ஏகப்பட்ட  சான்றுகள் உள்ளன. — ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் சாவகம்(ஜாவா) பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும்சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை கூறுகிறது. — சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்…! (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4)

This gallery contains 5 photos.

பொதுவாக நமக்கு கடல் கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர் என்பதைப் பற்றி ஏற்கெனவே ஒரு உருவகம் இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும் பணி புரிவதற்காக வெவ்வேறு காலனி நாடுகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்ற பிழைப்பற்ற தமிழ் மக்கள் ஒரு பக்கமும், பிரிட்டிஷ் காலத்திலேயே சிறுவணிகம் பொருட்டு பர்மா, மலேசியா போன்ற … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்