…………………………………………………

………………………………………………….
சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….???
………………….
………………….
…………………………………………………

………………………………………………….
சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….???
………………….
………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…
Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…
Puthiyavan, Thank you.... with best wishes, Kavirimainthan
I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
என்ன ஆயிற்று….
.
டாக்டர் சுமந்த் சி ராமன் என்ன சொல்ல வருகிறார்
என்பது யாருக்கும் புரியவில்லையா…?
வழக்கமாக “எக்ஸ்பர்ட் கமெண்ட்ஸ்” கொடுக்கும்
நண்பர் புதியவனுக்கு கூட புரியவில்லையா என்ன ….?
.
சுமந்த் சி ராமன் சொல்வது அபத்தம். எப்போ உலகத்திலேயே கிடைக்காத வெள்ளைக் குடையை உபயோகித்தார்களோ அப்போதே, அவங்க ஸ்ட்ராடஜி, மோடியைப் பகைத்துக்கொள்ள வேண்டாம், உள்ளூர் அரசியலில் மாத்திரம் மோடி, பாஜக எதிர்ப்பு வைத்துக்கொள்வோம் என்பது. சமீபத்தில், கே என் நேரு, என்னிடத்தில் 47 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்று யாரையோ மிரட்டினாராமே. அதன் பிறகுதான் அன்பில் பொய்யாமொழியை வைத்து முதன் முதலாக கே என் நேருவின் எதிர்ப்பாளர் திருச்சி சிவாவை ஒரு மீட்டிங்குக்கு அழைக்கவைத்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், திமுகவில் ஷிண்டேக்கள் உண்டு, அதனால் தேவையில்லாமல் நேரடியாக பிரதமர் மோடியை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதுதான். எப்படியும் 2024ல் அவர் பிரதமராவதற்குத்தான் வாய்ப்பு, அப்படி இருக்கும்போது மோடியைப் பகைத்துக்கொண்டால், அது எம்.பி. தேர்தலில் பின்னடைவைக் கொடுக்கும் (மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது. இவங்களைத் தேர்ந்தெடுத்து என்ன புண்ணியம் என்று மக்கள் நினைக்க வாய்ப்பு இருக்கும்). என்றும் நினைத்திருக்கலாம்.
அண்ணாமலை தமிழகத்தில் இல்லாததற்கு வேறு காரணங்கள் உண்டு (கர்நாடக தேர்தல், அங்கு புகழேந்திக்கான சீட் என்பது போன்ற காரணங்கள்). அண்ணாமலையின் வேண்டுகோளால்தான் காவிரி டெல்டாவில் உள்ள 3 பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் கைவிடப்படுவதாக சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறாரே. அண்ணாமலையும் நேற்று உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாகப் படித்தேன். பிரதமரும், நேற்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் சந்திக்கவில்லை. சென்ற முறை வந்திருந்தபோது அண்ணாமலையைத் தன் காரில் கூட்டிச் சென்றதுபோல இந்த முறை ஆளுநரைக் கூட்டிச் சென்றார். அதனால் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையவில்லை.
தற்போது எல்லா இடங்களிலும் உதயநிதியை அனுப்புவதற்குக் காரணம் இருக்கிறது. (மற்ற அமைச்சர்கள் எல்லோருமே உதயநிதிக்கு ஜூனியர்கள்தாம், கனிமொழி மெதுமெதுவாக வெளிச்சத்திலிருந்து விலக்கப்படுகிறார்). இந்தக் காரணத்தை இப்போது எழுத விரும்பவில்லை. காலம் அதனைக் காட்டும்.