அவசியமான ஆலோசனையொன்று…… பகுதி-16 – இன்றைய சுவாரஸ்யம்….


தெளிவாக, அர்த்தமுள்ள ஒரு ஆலோசனையை – இன்றைய பெற்றோர்களுக்கு வழங்கி இருக்கிறார் திருமதி ரேகா பத்மனாபன் –

– உரையாளர் சொல்வதை நான் முழுவதுமாக ஏற்கவில்லை. ஓரளவு அவர் சொல்வது சரியே என்றாலும்,

அறியாத வயதில், இளம் பிராயத்தினரை, எல்லாவற்றையும் அவர்களே அனுபவித்து – அடிபட்டு, உதைபட்டு – உணர்ந்து, தெரிந்து – கொள்ளட்டும் என்று விட்டு விடுவது சரியாக இருக்காது.

அதே சமயம் எல்லாவற்றிலும் தலையீடு, எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு என்று வைத்துக் கொள்வதும் எதிர்மறையான விளைவையே உண்டாக்கும் என்பதும் உண்மையே…..

இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் – அவர்கள் பயணிக்கக்கூடிய திசைகள், உதவக்கூடிய பாதைகள் இன்னின்ன என்பதைப்பற்றி அவர்களுக்கு ஓரளவு தெரியவைத்து விட்டு –
பிறகு அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டு விட்டு – தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரங்களில் மட்டும் course correction செய்வது சிறந்த முறையாக இருக்கும் என்பது என் கருத்து.

அதே போல், சில அறிவுரைகள், guidance( வழிகாட்டுதல்கள் ) எல்லாருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க முடியாது… அந்தந்த குழந்தைகள் பிறந்து வளர்ந்த, வளரும் சூழ்நிலைகளைப் பொருத்தும் மாறுபடும்.

முக்கியமான கருத்து ஒன்றை அழகாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கும் விதத்தில் – திருமதி ரேகா பத்மனாபன் பாராட்டிற்குரியவர்.

.
——————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.