…
…
……….
……….

….
இவர் ஒரு நிறைந்த சந்திரன் …..நம் மனதை நிறைத்த நிலவு …
என்றும் நினைவை விட்டு அகலாத நிலவு…
…
.
———————————————————————————————————————————————————————-
…
…
……….
……….

….
இவர் ஒரு நிறைந்த சந்திரன் …..நம் மனதை நிறைத்த நிலவு …
என்றும் நினைவை விட்டு அகலாத நிலவு…
…
.
———————————————————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
// நான் ஏன் வரல தெரியுமா? கண்ணீர் விட்டு அழுத புது மாப்பிள்ளை.. மறக்க முடியாத எம்ஜிஆர் //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/mgr-memorial-day-today/articlecontent-pf343925-337268.html இது போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை கூறலாம் …! நல்லவர்களுக்கு மரணம் கூட ” மறு பரிசீலனை ” செய்யும் என்பதை தன் வாழ்வில் நிஜமாக்கிய மக்கள் திலகத்தின் மங்காத புகழுக்கு காரணமே அவரது மனித நேயம் தானே ….!!!
எம்.ஜி.ஆர் பற்றி படித்தவற்றை இங்கு பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் அவ்வளவு நல்லவராக இருந்தார். இருந்தபோதும்,
கடைசி காலத்தில் (அதாவது ஒரு வருடமாக) கஷ்டப்பட்டார். அவரது பெர்சனல் ஸ்டில் புகைப்படக்காரர், தன்னுடைய அனுபவங்களில் எழுதியிருந்தார்.
அவரும், அவர் மனைவியும் அவரைப் பார்க்க ராமாவரம் தோட்டம் சென்றார்கள். அப்போது அவர் யாரையும் பார்க்கும் உடல் நிலையோடு இல்லை. அதனால் எல்லோரும் திரும்ப அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவரை மட்டும் ஜானகி அம்மா சிறிது இருக்கச் சொன்னாராம். எம்ஜியார் அவருடைய படுக்கை அறையிலிருந்து லிஃப்ட் மூலமாக கீழே வந்து அங்கேயே ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாராம். இவர் பார்த்தபோது, அவருடைய கைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தனவாம். அப்போது டெலிபோனை ரிசீவரைத் தூக்கவே முடியவில்லையாம். உடனே இவர் உதவப் போனபோது முகத்தில் கடுமையோடு தடுத்து மிக மிக கஷ்டப்பட்டு ரிசீவரைத் தள்ளிவைத்தாராம். அதாவது அந்தச் சமயத்தில்கூட தன் இமேஜை மெயிண்டெயின் பண்ண முயற்சித்தாராம்.
அவர் இவரிடம், ஜனவரி பொங்கல் கழிந்து வா, உனக்கு உதவிசெய்யறேன் என்று சொன்னாராம். இவர் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டாராம், ஆனால் இவர் மனைவி, உடனே, ‘ஐயா நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே’ என்றாராம். எம்ஜியார் உடனே அழுதுவிட்டாராம். (இவருக்கு அதுதான் கடைசி முறையா அவரைப் பார்க்கிறோம்னு தோன்றவில்லையாம்.).
இந்த மாதிரி கடைசி கால நிகழ்ச்சிகளை வலம்புரி ஜான் அவர்களும் எழுதியிருந்தார்கள். அவைகளைப் படிக்கும்போது மனதில் வருத்தமும் நெகிழ்ச்சியும் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.
மீண்டும் இவரோ அல்லது ஜெ.அவர்களோ உயிர்த்தெழுந்து வந்தால், அடுத்த எலெக்ஷனில் அவர்தாம் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார். வேறு யார் உயிர்த்தெழுந்தாலும் இந்த கெளரவம் கிட்டாது. இதுவே போதும் இவர்கள் பெருமையைப் பேச.