சிம்மக்குரல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு… பகுதி -14 – இன்றைய சுவாரஸ்யம்…!

..
..

சிவாஜி காலத்தைய பொது நிகழ்ச்சிகள் குறித்த
வீடியோக்கள் அபூர்வம்… அப்போதெல்லாம்
வீடியோ இந்த அளவுக்கு பரவலாகவில்லை…

” அண்ணன் தம்பிகளாகப் பழகிய எங்களைப் பிரித்தது
இந்த பாழாய்ப்போன அரசியல்…
” எம்.ஜி.ஆர். உடனான தனது நெருக்கம் குறித்து சிவாஜி தான்
எவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார் ….

எனக்கு சிவாஜியை பார்ப்பதும்,
அவர் குரலைக்கேட்பதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
உங்களுக்கும் அப்படித்தான் இருக்குமென்று நம்புகிறேன்…

.
——————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சிம்மக்குரல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு… பகுதி -14 – இன்றைய சுவாரஸ்யம்…!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! இது திரு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தபின் 20 – 11 – 1983 அன்று திரைத்துறையினர் எடுத்த விழாவில் கணீர் குரலில் நடிகர் திலகம் ஆற்றிய உரை … அதே விழாவில் திரு மக்கள் திலகம் பேசும் போது அண்ணன் தம்பியை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியது மட்டுமின்றி நாடகத்தில் நடித்த காலங்களை பற்றியும் கூறியது — நாடகம் தான் சிறந்த கலைஞர்களை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு — ! மனிதாபிமானம் பற்றி நடிகர் திலகம் கூறிய வார்த்தைகளில் பெரும் தலைவர் போன்றவர்களை எடுத்துக்காட்டியது உற்று நோக்கத்தக்கது … ! இன்று மனிதாபிமானம் என்பதை ஒரு பலனை நோக்கி லாப – நஷ்ட கணக்கின்படி செய்பவர்களை நினைத்தால் மனம் வேதனை அடைவதை தவிர்க்க முடியவில்லை …!! உன்னத திலகங்கள் வாழ்க …!!!

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! நீங்கள் முன்பு ஒரு இடுகை திரு அதானி பற்றி பதிவிட்டு இருந்திர்கள் அது : — // ஆஸ்திரேலிய சுரங்கம் – அதானிக்கு மோடிஜி தரும் Return Gift – ஆ ….!!! மிகவும் தவறல்லவா …???
    Posted on நவம்பர் 18, 2014 by vimarisanam – kavirimainthan … என்று சுட்டிக்காட்டி இட்ட தலைப்பு — இன்று கீழே உள்ள செய்தியின் மூலம் நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது … அப்படித்தானே …? இதில் தாங்கள் இறுதியில் // மக்களும், மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் –
    முனைந்தால் இந்த முடிவைத் தடுக்க முடியலாம்…..
    விழித்துக் கொள்வார்களா …..? // —–என்று வினவியது இங்கே நடக்காது போனாலும் தற்போது அங்கே ஆஸ்திரேலியாவில் நடக்கிறது —- இதுதான் இந்த ” விமரிசனம் ” தளத்தின் சிறப்பு … !!!
    // ஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்! //

    Read more at: https://tamil.oneindia.com/news/sydney/australian-people-are-protesting-against-adani-s-coal-project-336804.html

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    What a speech by Sivaji!! His body language particularly his facial reactions for every word he utters proves why he is Nadigar Thilakam. No doubt Sivaji lives in the hearts of millions of his fans. I, as a teenager, remember watching Pasa Malar movie in Chitra along with my elder brother. Many scenes shook me to the core. I was weeping at the end of the movie. My brother reminded me that it was after all a movie. I don’t know why I became sentimental and emotional all my life. Probably after watching Sivaji’s movies in my young age, Very rare video clipping. Thanks for sharing.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சிவாஜி அவர்களின் பொதுக்கூட்டப் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். இதனையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ஆனால், அவர் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுபவர். நம்மிடையே இருக்கும் சாதாரண ஒருவர் எப்படிப் பேசுவாரோ அப்படிப் பேசுவார். காமராஜர் அப்படிப் பேசினதாலேயே, ஒரு இமேஜ் இல்லாத அவருக்கு அதுவே பெரிய இமேஜாக ஆகிவிட்டது. ஆனால் சிவாஜி, எத்தனையோ படங்களில் சிம்மக் குரலில் நடித்துவிட்டு, அவருடைய மேடைப் பேச்சு சாதாரண மக்களிடையே எடுபடவில்லை. நான் கேட்டபோதும் அவ்வளவாக இம்ப்ரஸ் ஆகவில்லை. ஆனால் அவர் தன் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாகப் பேசினார். அதில் நடிப்பில்லை அதனால் அந்தப் பேச்சுகள் என்னைக் கவரவில்லை. அதுதான் அவரது அரசியல் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.