…
…

…
திருவாளர் ஹெச். ராஜா அவர்கள்
மிகவும் நேர்மையானவர்.
சொன்ன சொல் தவறாதவர். மானஸ்தர்.
வாக்குறுதி கொடுத்தால்,
உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றக்கூடியவர்….
இந்த வீடியோவை பார்த்து விட்டு – அவர் சொன்னதைச் செய்து
விட்டால் என்ன செய்வது…?
தமிழக அரசியலே சூன்யமாகி விடுமே….!!!
சுவாரஸ்யமே இல்லாமல் போய் விடுமே… 🙂 🙂 🙂
….
.
————————————————————————————————————–



appada ..h raja ozhinja sari ..loka kshemam ..
வீடியோ ஆதாரம் வெளியாகி விட்டது. இப்போது ராஜா அரசியலை விட்டு விலகவில்லை என்றால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரலாமா ? 🙂
என்ன மணி சார்
டபக்குணு இப்படி கேட்டுட்டீங்க…
அதான் பதில் தாயாரா இருக்கே!
“என் அட்மிண் சொன்னது அது. எனக்கு தெரியாது”
பிங்குபாக்: ரொம்ப பயமாக இருக்கிறது….ஹெச்.ராஜா சொன்னதைச் செய்து விட்டால்….??? – TamilBlogs
ஹெச் ராஜா சொல்றது சரிதானே. மோடி அவர்கள் எப்போ, ‘ஒத்தொருத்தர் அக்கவுண்ட்ல 15 லட்சம் போடறேன்’னு சொன்னார். அவர் ஏதோ ‘பேங்க்மே… ஜமானா…. ‘ என்று ஏதோவல்லவா சொல்கிறார்… தமிழர்களுக்குத்தான் ஹிந்தி தெரியாதே… (உடனே என்னை ஹெச் ராஜாவுக்கு அசிஸ்டெண்டா வேலை வாங்கித்தர முயற்சிக்காதீர்கள் ஹா ஹா ஹா)
மதம் மாறி மணம்புரிந்த ஒரு ஜோடியைத் தொந்தரவு செய்த தனது அமைச்சக ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்த ஒரே காரணத்துக்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமூக வலைதளங்களில் பாஜக கட்சி ஆதரவாளர்களாலேயே கடுமையாக(எழுத்தில் கொண்டு வர முடியாத அளவுக்கு) விமர்சிக்கப்படுவது பற்றி இது வரை மௌனச் சாமியார் மௌனம் கலையவில்லை.
வெளியுறவுத் துறை அமைச்சருக்கே இந்த கதி என்றால்….இந்த நாட்டில் நாம் அனைவரும் பாதுகாப்பாக தான் இருக்கிறோமா…?
சுஷ்மா சுவராஜ்தான், தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு வேற்று நாட்டு விசா ஏற்பாடு செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கு, ‘மனிதாபிமானம்’ காரணம் என்றொரு புதிய காரணத்தையும் சுஷ்மா கண்டுபிடித்தார். அத்தகைய மனிதாபிமானம், ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளின்மேல் அவருக்கு வரவில்லை.
அந்த லலித் மோடி எல்லா கட்சிகளுக்கும் பெரிய அளவில் டொனேஷன அளித்தவர். அவருக்கு எல்லா கட்சியும் உதவத்தான செய்யும் . அவருக்கு இன்றும் எல்லா கட்சி முக்கிய ஆடகளுடன தொடர்பு உள்ளது.
புதியவன் சார்,
ஒங்க ஃபார்முலாவை மாத்துங்க சார்.
ஒவ்வொரு தடவையும் கதயை மாத்தி ஒரே தந்திரத்தை
செய்யறீங்களே ?
அறிவழகு கேட்டது சுஷ்மா விஷயத்தில் மௌனசாமியார்
கையது கொண்டு, வாயது பொத்தி கம்’முனு கெடப்பது ஏனென்று.
நீங்கள் ஜகா வாங்கி வேறு பக்கம் ஓடுகிறீர்கள்.
முதலில் மௌன சாமியார் விஷயத்திற்கு வாங்க சார். அதுக்கு
பதிலைச் சொல்லி விட்டு நீங்க பின்னர் வேறு பக்கம் போகலாம்.
ராஜீவ் கொலை வழக்குக்கும் அறிவழகு பின்னூட்டத்திற்கும் நீங்கள்
ஏன் சம்பந்தமே இல்லாமல் முடிச்சு போடுகிறீர்கள் ?
அதற்கும் ஒரு தனி சாமர்த்தியம் வேண்டும்….!!!
நான் நண்பர் புதியவனின் திறமையை பாராட்டுகிறேன்…. 🙂 🙂 🙂