தன்னந்தனியராக …. வட்டமலை பாக்கியலட்சுமி…!!!


நான் என்னையும், என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதே பெரிய காரியம் … இந்த நிலையில் – லட்சியமாவது, கொள்கையாவது, சமூக சேவையாவது …என்பதே இன்று பலரின் நிலை…!

ஆனாலும், சிலர் ஒன்றிணைந்து, சிறு அல்லது பெரு குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கென்று ஒரு குறிக்கோளை நிச்சயித்துக் கொண்டு – சமூக சேவையில் ஈடுபடுவதையும் பார்க்கிறோம்.

சில ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள் – குறிப்பிட்ட ஏரியாவில், குறிப்பிட்ட விஷயங்களில் இறங்கி சேவை செய்வதையும் பார்க்கிறோம்.

இப்படி எல்லாம் எந்தவித சிந்தனைகளும் இல்லாமல் –
இயற்கையாகவே, தன்னுணர்வால் உந்தப்பட்டு, சில செயல்களை
வழக்கமாக செய்து வருவதன் மூலம் –

” அப்படியெல்லாம் விதியொன்றுமில்லை.
உனக்கு தோன்றுவதை செய்து கொண்டே போ…
நீ பிறந்த பூமிக்கு, உன்னால் இயன்றதை
சேர்த்துக் கொடுத்து விட்டு போ ” –

– என்று சொல்லாமல் சொல்லி, நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறார்
இந்த 90 வயது – வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி…!

கீழேயுள்ள காணோளியை காணுங்களேன்…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தன்னந்தனியராக …. வட்டமலை பாக்கியலட்சுமி…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சுய’நலவாதிகள், எதிர்மறைச் சிந்தனை உள்ளவர்கள், எதற்குமே அரசுதான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தான் ஒதுங்கிக்கொள்பவர்கள், வேறு ஏதோ தேவன் வந்து நம் தேசத்தில் உள்ள மாசுகளை நீக்கப்போகிறான், தாங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் இருக்கும் உலகில், நல்லவர்களையும் ஆங்காங்கே நீங்கள் காண்பித்துவருகிறீர்கள்.

    அதிலும் குறிப்பாக மிகுந்த கல்வியறிவு இல்லாதவர்கள், இத்தகைய நல்ல குணத்தோடு இருப்பதைக் காணும்போது, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாராட்டுகள் பகிர்ந்தமைக்கு.

  2. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Salute,should be recognised

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.