…
முதலில் இறவாப்புகழ்பெற்ற மைக்கேல் ஏஞ்சலோவின்
தலைசிறந்த சலவைக்கல் படைப்புகளில் ஒன்று பார்வைக்கு –

…
அடுத்து லண்டனின் மார்பிள் டவர் -லிருந்து சில காட்சிகள் –

MARBLE ARCH
…
இடுகையின் மையத்திற்கு போகும் முன்னர், வெள்ளை
சலவைக்கல் மலை ஒன்றின் சில காட்சிகளை இங்கு
பதிய விரும்புகிறேன்.
உலகின் மிகச்சிறந்த சில சிலைகளை வடிக்கவும்,
அற்புதமான கட்டிட அமைப்புகளை உருவாக்கவும்
பயன்படுத்தப்பட்ட மார்பிள் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட
இத்தாலியில் உள்ள மார்பிள் மலை….Carrara quarries in
Tuscany – யின் சில காட்சிகள் கீழே –

…

…

…

…
Italy, Tuscany : Carrara marble quarries-
(அடுத்து பகுதி-2-ல் தொடர்கிறது )



மைக்கேலாஞ்சலோ படைப்புகள் பார்த்திருக்கிறேன் (இங்கு கொடுத்ததைப் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் லூவர் மியூசியத்தில் பார்த்திருக்கிறேன்), மார்பிள் ஆர்ச்சையும் லண்டனில் பார்த்திருக்கிறேன்-ஹைட் பார்க் பக்கம். (வெறும்ன புகைப்படம் எடுத்துக்கொண்டேனே தவிர அதனின் சிறப்பம்சம் தெரியவில்லை. சாதாரண ஆர்ச் மாதிரித்தான் என் மனதுக்குப் பட்டது)
கீழே மார்பிள் மலைகளின் படங்களைப் பார்த்தேன்.
நான் நினைப்பது சரியா இருந்தால், அடுத்த இடுகை, தமிழகக் குவாரி கொள்ளையர்களைப்பற்றி இருக்கப்போகிறது என நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால், இதுவரை பார்க்காத படங்களாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.
தமிழன்,
மன்னிக்க வேண்டுகிறேன்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அங்கும் பளிங்கு மலைகள் இருக்கின்றன. அதனையும் காட்டியுள்ளீர்கள். அதிலிருந்து தேவைக்கான பளிங்கு மட்டும் எடுக்கப்பட்டு அவை சிலையாகவோ அல்லது மற்றவையாகவோ கலைப்பொருட்களாக உருவாக்கப்படுகின்றன. They have that responsibility to nature & their country. ஆனால் இங்கு, கற்கள், அதே காரணத்துக்காக வகை தொகை இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்டு பிற தேசங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில வருடங்களில் (10-20 வருடங்களில்) அங்கு மலை இருந்த இடமே தெரியாமல் எல்லாவற்றையும் பேராசையால் விற்றுவிடுகின்றனர்.
இதேபோல்தான், நம் ஆற்றின் மணலைக் கொள்ளையடித்து கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் கர்னாடகாவுக்கும் கடத்துகின்றனர். கேரளா 15 வருடங்களுக்கு முன்பே, அவர்களின் எந்த நீர்ப்பரப்பிலும் மணல் அள்ளுவதைத் தடை செய்துவிட்டது. ‘தமிழன்’ புத்திசாலியா அல்லது மற்ற மானில மக்கள் புத்திசாலியா?
தேசச் சொத்தை மூடர்களாக இப்படி விற்கின்றனரே என்று அதைப்பற்றி எழுதப்போகிறீர்கள் என்று நான் நினைத்தேன். தவறாக எண்ணவேண்டாம்.