
திருவாளர் விஜய்காந்த் என்ன நினைக்கிறார்…
என்ன பேசுகிறார்.. என்பதை புரிந்துகொள்ளக்கூடிய
அளவிற்கு நமக்கு அறிவுத்திறன் போதாது என்பதால்,
செய்திகளில் வந்ததை மட்டும் கீழே தருகிறேன்.
நேற்றைய தினம் திருவாளர் விஜய்காந்த் அவர்களை
சந்திக்க மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பிரதிநிதியுமான
திரு.ஜவடேகர் – விஜய்காந்த்தின் சாலிக்கிராம இல்லத்திற்கு
சென்றபோது,
மத்திய அமைச்சர் ஒருவரை தான் வாசலில் வந்து வரவேற்பது அவருக்கு (எவருக்கு…? ) கௌரவக்குறைச்சலாக இருக்கும் என்று கருதியதாலோ என்னவோ, விஜய்காந்த் வாசலுக்கு வரவில்லை. அவர் சார்பாக அவரது மெய்க்காப்பாளர்களே (இதில் திரு.பார்த்தசாரதியும் அடக்கம் ) வரவேற்று, உள்ளே அமரச்செய்திருக்கின்றனர்.
பின்னர், திரு.ஜவடேகருக்கும், அவருடன் வந்தவர்களுக்கு,
விஜய்காந்த் சார்பாக –
2 மசால் வடை,
ஒரு ப்ளேட் காரட் அல்வா,
மற்றும் ஒரு கப் மசாலா டீ
– தரப்பட்டிருக்கிறது.
அவர்கள் அதை சாப்பிட்டு முடித்து
ஐந்து நிமிடங்கள் ஆன பிறகு,
விஜய்காந்த் அந்த அறைக்குள் பிரவேசம் செய்திருக்கிறார்…
எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
ஜவடேகரைப் பார்த்து கைகூப்பிய விஜய்காந்த், “வாழ்த்துக்கள்,”
“வாழ்த்துக்கள்” ( congratulations ….) என்று இரண்டு முறை
கூறி இருக்கிறார்…
புரியாத ஜவடேகர் எதற்காக வாழ்த்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய்காந்த் –
” இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி,
சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மிகவும்
பலமான கூட்டணி அமைத்திருக்கிறீர்களே … அதற்குத்தான்…!!!”
என்று கூறி இருக்கிறார்…
பின்னர் இரு தரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் பேசி
இருக்கின்றனர். ( எது பற்றி என்பது பற்றி தான்
கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது….!!!)
வெளியே வந்த ஜவடேகர் – “கூட்டணி பற்றி பேசினோம்.
விஜய்காந்த் சில விஷயங்கள் கூறி இருக்கிறார்… இதுகுறித்து
கட்சித்தலைவர் அமீத் ஷா மற்றும் பிரதமரிடம்
எடுத்துச் சொல்வேன்…” என்று கூறி விட்டு கிளம்பி இருக்கிறார்.
அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து தேமுதிக தலைமை
அலுவலகத்திலிருந்து ( என்றும் இல்லாத வழக்கமாக ) செய்தியாளர்களுக்கு ஒரு குறிப்பு வருகிறது.
” மரியாதை (….! ) நிமித்தமாக, திரு.பிரகாஷ் ஜவடேகர்,
தலைவரை சந்தித்து விட்டு சென்றார்..”
( அவ்வளவே…..!!!)
இந்த முறை திரு.விஜய்காந்த் கொடுத்த “அல்வா”விலேயே
திருப்தி அடைந்து விட்டால், திரு.ஜவடேகர் மீண்டும்
விஜய்காந்தை பார்க்க வர மாட்டார் என்றும்,
ஒருவேளை அவரது பசி அடங்காமல் –
மீண்டும் சாப்பிட வேண்டுமென்று ஆவல்
தோன்றினால் அடுத்த வாரமும் மீண்டும் வந்து பார்ப்பார்
என்றும் செய்திகள் கூறுகின்றன.
பின் குறிப்பு –
திரு.விஜய்காந்த் கிண்டி வைத்திருக்கும் “அல்வா”
இன்னமும் மீதி இருப்பதாகவும், அதை “கலைஞருக்கு”
கொடுப்பதா அல்லது ” மக்கள் நலக் கூட்டணி
தலைவர்களுக்கு” – கொடுப்பதா என்று இன்னமும்
அவர் தீர்மானிக்கவில்லை என்றும் கோயம்மேடு தகவல்கள்
சொல்கின்றன…!!!



6 சதவிகித வாக்குகள் இருக்கின்றன என்பதற்காக, விஜயகாந்த் நடந்துகொள்ளும் முறை சரியானதாக இல்லை. பாமக போல் 4 சதவிகித ரேஞ்சிலேயும், வடதமிழ்னாடு மட்டும் ஆதரவாகவும் இருந்திருக்குமானால், விஜயகாந்துக்கு இவ்வளவு மௌஸ் வந்திருக்காது.
அவரும், 40 வயதிலேயே அரசியலுக்கு வந்திருந்தால் நல்லா பிரகாசிச்சிருக்கலாம். இப்போது பேச்சு குழற ஆரம்பித்துவிட்டது.
“மயங்கினேன் சொல்ல தயங்கினேன்” என்கிற பாடலை கலைஞருக்கு டேடிகாட் செய்கிறேன் .
அய்யா … நீங்கள் கூறியதை போலவே ” போன தடவை வந்தப்ப — சாப்பிட கொடுத்த மீதி அல்வாவை ” இந்தமுறை சாப்பிடாமல் வாங்கி செல்ல …. // கூட்டணி பேச்சுவார்த்தை… மீண்டும் சென்னை வருகிறார் ஜவடேகர்…. http://tamil.oneindia.com/news/tamilnadu/javadekar-visit-chennai-tomorrow-248007.html //
” கொடுத்த காரட் அல்வாவில் ” மீதி கொஞ்சம் இருக்கிறது — மசால்வடையும் கூட நூல் உட்டு சூப்பரா இருக்கிறது — டீ கூட ஆறாமல் சூடாகவே இருக்கு — அதை அமித்ஷாவின் உதவியோடு — ” தக்க – கேட்கும் காசை — வியாபாரம் செய்யும் கடைக்காரரின் மனைவி – மற்றும் மச்சானிடம் ” கொடுத்து வாங்கி செல்ல மீண்டும் வருகிறார் … இந்த முறையும் வியாபாரம் படியவில்லை என்றால் — ! அடுத்து ” ஆல்இன் ஆல் கட்சி தலைவர் ” வந்து கண்டிப்பா வாங்கிடுவாரா — ? ஏனென்றால் ரெடியா இருக்கிற ” தானைத்தலைவர் ” கூட்டம் வாங்குவதற்குள் — ? மக்கள் விரலை நன்கு சூப்பி — மை வைத்து கொண்டு ஓட்டு பட்டனை அழுத்திடுவாங்கோ …. என்று நினைகின்ற — பேரம் பேசும் கூட்டங்களின் செயல்களுக்கு எப்போது தான் முடிவு ஏற்படும் …. ? இதனுடைய பின் விளைவுகள் வேறுவிதமாக மாற வாய்ப்புள்ளது என்பதை இவர்கள்மறந்தது ஏனோ … !!!
செல்வராஜன்,
இவ்வளவு நாட்கள் பொறுத்திருந்தோம்…
இன்னமும் கொஞ்சம் பொறுப்போமே….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Vkanth would have welcomed prakash ji manmohan ji and his wife welcomed modi ji at their doorsteps many times so also other leaders but v kanth………….
Kushboo is abundantly confident about v kanths entry into dmk congresss alliance………
Let us witness these DRAMATIC DEVELOPMENTS…..ji
// கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு சாம்ராஜ்ஜியம்: பல்வேறு நாடுகளில் பல லட்சம் கோடி முதலீடு ….. http://www.dinamani.com/india/2016/03/01/… // பிடி இருகுமா … ? அடுத்து … // ப.சிதம்பரம் விவகாரம்: மாநிலங்களைவையை முடக்கியது அதிமுக…. http://www.dinamani.com/india/2016/03/01/…. //
நண்ப செல்வராஜன்,
தனியே இடுகை போடுகிறேன்.
விவரமாக விவாதிக்கலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்