தன் வினை …..
“தன் வினை தன்னைச் சுடும் –
வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ”
– பட்டினத்தார்
ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் –
தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர்
எண்ணிக்கை.
இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம்
ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ),
துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு ,
பாமாலின் எண்ணை வாங்குகிறார்கள்.
ஒவ்வொரு ஒரு கிலோ பாக்கெட்டிலும் –
கலைஞர் கருப்புக் கண்ணாடியுடன்,
சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்.
அதிகாரத்தில் இருந்ததால் –
கலைஞர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்,
வீட்டுக்காரர் விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்,
வலுக்கட்டாயமாக நுழைந்து கொண்டிருந்தார்.
இப்போது கீழே நீங்கள் பார்ப்பது –
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரேஷன் கடையில்
எடுக்கப்பட்ட புகைப்படம்.
கடையில் பணி புரிபவர், வேண்டாத வேலையை
கொடுத்த கலைஞரை சபித்துக்கொண்டே
ஒவ்வொரு பாக்கெட்டிலும்
இருக்கும் கலைஞர் புகைப்படத்தை
ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறார்.
காரணம் – தேர்தல் கமிஷன் உத்திரவு.
புகைப்படம் போடச்சொன்னவரே இப்போது
மறைக்கச் சொல்ல வேண்டிய கட்டாயம் !
தன் வினை ……..





தன் வினையாவது ;மற்றவன் வினையாவது! Bullshit!!
வீணாவது நம்ம வரிப்பணம் ஐயா!!
ஒரு 10 கோடி sticker வாங்கியதாக கணக்கு எழுதி இதிலும் மு க ஒருகோடி ரூபா வாவது பண்ணியிருப்பார்.
நாம , தன் வினை,தெய்வம் நின்று கொல்லும் ன்னு ஏதாவது
சொல்லி நம்மை தேத்திக்க வேண்டியதுதான்
அதேதான்!! தன்வினையாவது.. பொதுவினையாவது!!
ஸ்டிக்கருக்கான காசும் மக்கள் பணத்திலேருந்துதானே செலவாகுது!
தமிழக அரசின் சின்னம் போட்டாலாவது அதில் ஒரு நியாயமிருக்கிறது! ஏதோ இவன் அப்பன் சொத்திலிருந்து பாமாயிலைக் கொடுப்பதுபோலல்லவா போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
“தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் .” என்பதே பட்டினத்தார் அப்பத்தில் விஷம் வைத்த சகோதரியின் வீடு எரிய பாடிய பாடல்.