சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!

சோனியா காந்தி காலில் விழச் சொன்ன
யோசனையை ஏற்றுக்
கொண்ட திருமாவளவன் !!!

திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் !
இன்னும் சோனியா அவர்கள் நேரம்
ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத்
தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின்
ஒரு பகுதி –

“காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை
நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு
பிரச்சினையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை
என்பதை விளக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டிருந்தேன்.

ஆனால் சோனியாகாந்தி பிகார் மாநில தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாலும்,
வருகிற நவம்பர் 2ம் தேதி கட்சியின் அகில
இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
நடைபெற இருப்பதாலும் 2ம் தேதிக்கு
பிறகு நேரம் கேட்டு சந்திக்க இருக்கிறேன்.”

பி.கு : அவரது கடந்த கால வரவு செலவு,
கணக்கு வழக்குகள் குறித்தும், வெளிநாட்டு
விஜயங்கள் குறித்தும், மத்திய புலனாய்வுப் பிரிவு
திடீரென்று விசாரிக்கத் துவங்கி இருப்பதாக
வந்துள்ள செய்திகளுக்கும் இதற்கும் எதாவது தொடர்பு
உண்டா – தெரியவில்லை !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜீவ் காந்தி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!

  1. raj's avatar raj சொல்கிறார்:

    he cheat all eelam tamils

  2. யாழ்'s avatar யாழ் சொல்கிறார்:

    கொலைக்தரர்கள் காலில் விழுவதென்றால் இந்த மீசை முறுக்கு தமிழனுக்கு கைவந்த கலையோ? முன்னர் சிங்கள இனவெறியனுடன் கை கோர்த்து அவன் கொடுத்த தேனீரை அருந்தி வாழ்த்தியும் போர்த்தியும் விட்டு வந்தவர் இப்போது ஒரு மோசடிக்கார வெளிநாட்டு அவலத்தின் காலில் விழ….. ஐயகோ இந்த அரசியல் வியாதிகள் இப்படி எ ன்றால் தமிழ் மக்களை உங்களை காப்பாற்றுவது யார்? இந்த அழகில் ஈழத்தமிழனைப் பற்றி புலம்பல் வேறு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.