“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்”
நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !!
நேற்றைய தினம் திமுக உயர்நிலைக்குழுவில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று –
———————–
“சிறுதாவூர் நிலத்தை மீட்டு, அதை
ஏழை மக்களுக்கு உடனடியாக வழங்கிட
அரசு ஆவன செய்திட
வேண்டுமென்று – கேட்டுக்கொள்ள –
திமுக போராட்டம்
நடத்திட முன் வர வேண்டும் ”
(தீர்மானம் போராட்டம் நடத்த முன்வருமாறு
கேட்டுக்கொள்வது காஞ்சிபுரம்
மாவட்ட திமுக வை ! )
—————————–
நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழக அரசை !
அதை தலைமை தாங்கி நடத்திக்கொண்டு வருவது
திமுக தலைவரும் முதல்வருமாகிய கலைஞர் தான்.
நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் – ஒன்று,
முதலமைச்சர் கலைஞர் தாமாகவே உத்திரவு போடலாம்.
அல்லது நடவடிக்கை எடுக்கும்படி
தமிழக அரசை கேட்டுக்கொண்டு திமுக சார்பாக
ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளும்கட்சி என்கிற
முறையில் அந்த தீர்மானத்தின் அடிப்படையில்
அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
இதையெல்லாம் விட்டு விட்டு -போராட்டம்
நடத்த முன்வருமாறு காஞ்சீபுரம் திமுக வை
கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவது
எந்த வகையில் பொருந்தும் ?
அதாவது, திமுக தலைவராக, தான்
சொல்வதை, திமுக முதலமைச்சராக
தானே கேட்க மாட்டாராம் – அதற்காக,
தனியே காஞ்சிபுரம் திமுக போராட்டம்
நடத்த வேண்டுமாம் !
எனக்கென்னவோ ஒரு திரைப்படத்தில்
(பெயர் நினைவில் இல்லை)நடிகர் விஜய்
“சில சமயங்களில் என் பேச்சை நானே
கேட்க மாட்டேன்” என்று வசனம்
பேசியது தான் நினைவுக்கு வருகிறது !
உங்களுக்கு இந்த தீர்மானத்தின்
பின்னணியைப்பற்றி
வேறு எதாவது தோன்றுகிறதா ?





நிஜமான சாமியாரா இல்லை ….