இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் !

இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும்
பத்மபூஷன் கிடைத்தது எப்படி ?
வியப்பூட்டும் தகவல் !

ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது –
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் !

இசையமைப்பாளர்கள்  இளையராஜாவிற்கும,
ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் இந்த ஆண்டு குடியரசு
தினத்தன்று  பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததற்கு
கலைஞர் கருணாநிதியின் (தமிழக அரசின் )
பரிந்துரை தான் காரணம் என்று
எல்லாருமே  நினைத்திருந்தோம்.

ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள்
இருவருக்குமே
தமிழக அரசு பரிந்துரை செய்யவில்லை.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேடும் குழு –
தானாகவே அவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்து
கௌரவித்திருக்கிறது ! மிகவும் பெருமைப்படத்தக்க
செய்தி !

இன்னொரு  காமெடியான  செய்தியும்
வெளிவந்திருக்கிறது –

கலைஞர் அரசு பத்ம விருதுகளுக்காக பரிந்துரை
செய்த  பெயர்களில்  சில –

கி.வீரமணி, (ஆம் தொண்டரடிப்பொடியார் தான் !)

எஸ்.வி.சேகர்  (மஞ்சள் சட்டை மகிமை !)

என்.ராம் (அதே ராஜபக்சேயின் உயிர் நண்பர் –
இந்து ஆசிரியர் தான் !)

இதில் நம் சந்தோஷம் –

ஏதோ காரணத்திற்காக (?)
இவர்கள் சம்பந்தப்பட்ட தமிழக அரசின் பரிந்துரைகள்
மத்திய அரசால்  ஏற்கப்படவில்லை !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, இசை அமைப்பாளர், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, இளையராஜா, எஸ்.வி.சேகர், ஏஆர்ரெஹ்மான், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திரம், சுதந்திரம், தமிழ், திமுக, திரைப்படம், நாளைய செய்தி, பத்ம விருதுகள், பரிந்துரை, பொது, பொதுவானவை, மகா கேவலம், மஞ்சள் சட்டை, முதலமைச்சர், ராஜ பக்சே, ராம், வீரமணி, Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் !

  1. chollukireen's avatar chollukireen சொல்கிறார்:

    காணக்கிடைக்காத தங்கத்தை தேடிப் பிடித்ததாக தகவல். பாராட்டப் படவேண்டிய அம்சம் இம்மாதிரியே
    ஆழ்கடலில் முத்தெடுங்கள் எனச் சொல்லி பாராட்டுவோம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.