சத்தியமா மூணே மூணு அடி ஆழம் தான் —இதுக்குப் போய்,E.D. ரெய்டா….??? அடுக்குமா…? நீங்களே வேணா, இந்த போட்டோவைஎல்லாம் பாருங்களேன்…!!!

……………..

………………………

………………..

……………….

…………………………….

செம்மண் குவாரி 3 அடி ஆழம் வரை மட்டும் தோண்டி, அதில் வரும்
செம்மண்ணை விற்றுக்கொள்ளத்தான் அப்போதைய அரசு லைசென்சு
கொடுத்திருந்தது… திமுக அரசாகவே இருந்தாலும், இயற்கை
வளங்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அதற்கு
மேல் வழிவகை இல்லையே என்ன செய்வது ….!!!

ஆனால், நம்ம ஆட்சி தானே….என்று மந்திரி தன் மகனுக்கும்,
மற்ற உறவினர்களுக்கும் கொடுத்த லைசென்சில் அவர்களால்
ஆன மட்டும் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தார்கள். தங்கள் கட்சி ஆட்கள் தானே என்பதால், அன்றைய அரசும் கண்டுகொள்ளவில்லை.

தற்போதைய புகைப்படங்களில், தண்ணீர் தேங்கி இருப்பதால்,
முழு ஆழமும் தெரியவில்லை…!!!

விட்டால், பாதாளம் மட்டும் தோண்டி, பூமியின் அடுத்த பக்கம்
மெக்சிகோ-விலிருந்து வெளியே வந்திருப்பார்கள்…

ஆனாலும் மக்கள் அநியாயம் செய்து விட்டார்கள். ஆட்சியை
மாற்றி விட்டார்கள். புது ஆட்சி வந்ததும், ரிப்போர்ட் போய்,
லைசென்சை ரத்து பண்ணி விட்டார்கள்.

புகைப்படங்களை எல்லாம் பார்த்திருப்பீர்களே….

73 வயது முதியவர் ஏதோ கொஞ்சம் ஆசைப்பட்டு, கூடக்குறைய
தோண்டி விட்டார்… இதற்குப் போய் E.D. ரெய்டா…?
இருந்தாலும் திமுக வக்கீல் சொன்னது போல்
இது அநியாயம் தான் சார்…!!! ஆண்டவனுக்கே பொறுக்காது….!!!

.
………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.