“பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராததற்கும்உதயநிதி வந்ததற்கும் இருக்கும்ஓர் அரசியல்” – சுமந்த் சி. ராமன்

…………………………………………………

………………………………………………….

சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….???

………………….

………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to “பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராததற்கும்உதயநிதி வந்ததற்கும் இருக்கும்ஓர் அரசியல்” – சுமந்த் சி. ராமன்

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    என்ன ஆயிற்று….

    .
    டாக்டர் சுமந்த் சி ராமன் என்ன சொல்ல வருகிறார்
    என்பது யாருக்கும் புரியவில்லையா…?

    வழக்கமாக “எக்ஸ்பர்ட் கமெண்ட்ஸ்” கொடுக்கும்
    நண்பர் புதியவனுக்கு கூட புரியவில்லையா என்ன ….?

    .

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சுமந்த் சி ராமன் சொல்வது அபத்தம். எப்போ உலகத்திலேயே கிடைக்காத வெள்ளைக் குடையை உபயோகித்தார்களோ அப்போதே, அவங்க ஸ்ட்ராடஜி, மோடியைப் பகைத்துக்கொள்ள வேண்டாம், உள்ளூர் அரசியலில் மாத்திரம் மோடி, பாஜக எதிர்ப்பு வைத்துக்கொள்வோம் என்பது. சமீபத்தில், கே என் நேரு, என்னிடத்தில் 47 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்று யாரையோ மிரட்டினாராமே. அதன் பிறகுதான் அன்பில் பொய்யாமொழியை வைத்து முதன் முதலாக கே என் நேருவின் எதிர்ப்பாளர் திருச்சி சிவாவை ஒரு மீட்டிங்குக்கு அழைக்கவைத்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், திமுகவில் ஷிண்டேக்கள் உண்டு, அதனால் தேவையில்லாமல் நேரடியாக பிரதமர் மோடியை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதுதான். எப்படியும் 2024ல் அவர் பிரதமராவதற்குத்தான் வாய்ப்பு, அப்படி இருக்கும்போது மோடியைப் பகைத்துக்கொண்டால், அது எம்.பி. தேர்தலில் பின்னடைவைக் கொடுக்கும் (மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது. இவங்களைத் தேர்ந்தெடுத்து என்ன புண்ணியம் என்று மக்கள் நினைக்க வாய்ப்பு இருக்கும்). என்றும் நினைத்திருக்கலாம்.

    அண்ணாமலை தமிழகத்தில் இல்லாததற்கு வேறு காரணங்கள் உண்டு (கர்நாடக தேர்தல், அங்கு புகழேந்திக்கான சீட் என்பது போன்ற காரணங்கள்). அண்ணாமலையின் வேண்டுகோளால்தான் காவிரி டெல்டாவில் உள்ள 3 பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் கைவிடப்படுவதாக சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறாரே. அண்ணாமலையும் நேற்று உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாகப் படித்தேன். பிரதமரும், நேற்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் சந்திக்கவில்லை. சென்ற முறை வந்திருந்தபோது அண்ணாமலையைத் தன் காரில் கூட்டிச் சென்றதுபோல இந்த முறை ஆளுநரைக் கூட்டிச் சென்றார். அதனால் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையவில்லை.

    தற்போது எல்லா இடங்களிலும் உதயநிதியை அனுப்புவதற்குக் காரணம் இருக்கிறது. (மற்ற அமைச்சர்கள் எல்லோருமே உதயநிதிக்கு ஜூனியர்கள்தாம், கனிமொழி மெதுமெதுவாக வெளிச்சத்திலிருந்து விலக்கப்படுகிறார்). இந்தக் காரணத்தை இப்போது எழுத விரும்பவில்லை. காலம் அதனைக் காட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.