இந்த நேரத்தில் பொருத்தமான வீடியோ ஒன்று ….
2018-ல் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி,
அவரது நினைவாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்
பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
அதில், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான
மோகன்பாபு தமிழில் பேசிய பேச்சு, மிகவும் சுவாரஸ்யமாக
அமைந்திருந்தது.
சிவாஜி சாரு, எம்.ஜி.ஆர். சாரு,
கலைஞ்சர் சாரு – என்று தெலுங்குக்காரர் தமிழில்
பேசிய விதம் ….!!!
வாசக நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்துகொள்கிறேன்….
……………….
………………..
மேற்கண்ட இடுகைக்கும் இதற்கும் தொடர்பில்லை –
———————————————————————————
பலர் 2-வது டோஸை எடுக்காமல்
அலட்சியமாக இருப்பதைக் காண்கிறேன்.
கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ்
எடுக்க வேண்டியதன் அவசியம் இங்கு
விளக்கப்படுகிறது….
முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நண்பர்கள்
அனைவரும் தவறாமல் 2-வது டோஸ் எடுக்கவும்….
….
….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உண்மைதான். இருந்தாலும் மாஸ்க், இடைவெளி காப்பது, தேவையில்லாமல் கூட்டமான பகுதிகளுக்கோ இல்லை closed room where many persons are there (like lift) இல் இருப்பதோ நல்லதில்லை. இரண்டு டோஸ் போட்டுக்கொண்டாலும், நான் மின் தூக்கி உபயோகிப்பதை நிறுத்திவிட்டேன். வெகு அதிகாலை நடைப்பயிற்சியின்போது மட்டும் மாஸ்கை விலக்கிக்கொள்கிறேன் (50 அடிகள் தூரத்தில் யாரும் இல்லாத போது). கூட்டமான இடங்களில் புழங்கும்போது, மற்றவர்களிடம் உள்ள இஃபெக்ஷன் தும்முதல் மூலம் நமக்குப் பரவலாம் (மாஸ்க் இருந்தாலும்). இல்லை தொடுவதன் மூலம் பரவுவது, நம்மை அறியாமல் கண்ணையோ மூக்கையோ தொட்டாலும் அதன் மூலமாகப் பரவும். இதனை கண்ட்ரோல் செய்வது கடினம் என்பதால், வெளியில் செல்லாமல் இருப்பது உத்தமம். வேலைக்கான உதவியாளர்களை வீட்டிற்கு அனுமதிப்பதும் மிகவும் ரிஸ்கானது.
வயதிற் குறைந்த பலரும் இதற்கு தற்போது பலியாகிறார்கள். அதனால் இது அலார்மின் situation.