ஓஷோ’விற்கு அவர் வாழ்ந்த காலத்தில் மரியாதை இல்லாமல் போனது ஏன்…?


ஓஷோ – ஒரு மிகச்சிறந்த தத்துவவாதி… ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அவரை புரிந்துகொள்ளவில்லை…. இப்போது அவரது புத்தகங்களை படிக்கும்போது எல்லாரும் அதை
உணர்கிறார்கள்…

ஒரு காலத்தில் மதம் தான், ஜாதிகளை தூக்கிப் பிடித்தது…. ஆனால், இன்று – ஜாதிகளை தூக்கிப் பிடிப்பது அரசியல்வாதிகளே….

தன்னலமற்ற தலைவர்கள் உருவானாலொழிய இந்த சமூகத்தை, நிர்வாகத்தை – சீர்படுத்துவது இயலாத காரியம்….

பிள்ளைகளிடம் ஒழுக்கம் வர வேண்டுமானால், அவர்களது பெற்றோர்கள் முயற்சி எடுத்து, அதற்கு முன்னுதாரணமாக இருக்க முயல வேண்டும்…பிள்ளைகள் முதலில் கற்றுக்கொள்வது
அவர்களது பெற்றோர்களைப் பார்த்து தான்.

என் தந்தையிடமிருந்து நான் பல நல்ல பழக்கங்களை, ஒழுக்க முறைகளை கற்றுக்கொண்டேன்…

மிகச்சிறந்த மனிதர் என்று ஒருவர் பெயரைச் சொல்ல வேண்டுமானல், புத்தர் பெயரை சொல்லலாம்…. ஆனால், இலங்கையில் புத்தரின் பெயரையும், பௌத்த மதத்தையும் – தவறான
விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இப்படி – பல தலைப்புகளில் ஆழமான கருத்துகளை, அழகாக, தெளிவாகச் சொல்லும் –
திரு.சுகி சிவம் அவர்களின் அருமையான உரையொன்று கீழே….

.
————————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.