…
…

டெக்னாலஜி எங்கேயோ போய் விட்டது….
செய்தி வாசிப்பில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை இங்கே காணலாம்.
மழை, புயல், வெள்ளம் பற்றி செய்தி அறிவிப்பாளர் அறிவிக்கும்போது –
பின்னணியில், அந்த நிலையை அப்படியே உருவகப்படுத்தி காட்டுகிறார்கள்….
…
.
—————————————————————————————————-



பிங்குபாக்: செய்தி வாசிப்பில் ஒரு அற்புதம் ….!!! – TamilBlogs
காணொளி நல்லா இருக்கு.
தெரியாதவங்களும் தெரிஞ்சுக்கணும். 2 அடியில் (சில சமயம் 1 அடி உயரத்தில்) பாய்ந்துவரும் தண்ணீர் நம்மைக் கீழே தள்ளிவிடும். அதனால் மழைநீர் அல்லது ஏரி நீர் பெருக்கெடுத்து உடைத்துக்கொள்ளும்பொழுது அதன் குறுக்கே செல்ல (கடக்க முடியும் என்ற தைரியத்தில்) முயலக்கூடாது. (பல வருடங்களுக்கு முன்னால் கர்நாடகா குக்கே சுப்ரமண்யா போயிருந்தபோது, அந்த கிராமத்துக்குச் செல்ல பெரிய பாலம் இருந்தது (நீளமானது). அதன் மேல் 1/2 அடிக்கும் குறைவான தண்ணீர்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் சென்ற பேருந்தை கரைக்குச் சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டார். அப்போது எனக்கு, பஸ் முழு பயணிகளோடு கடப்பது மிகச் சுலபமே ஏன் டிரைவர் செய்யவில்லை என்று தோன்றியது.
ஹொகோனக்கல்லிலும், அருவிக்குச் சற்று தொலைவில் உள்ள ஆற்றில், தண்ணீர் அருவியிலிருந்து வரும்போது, 1, 1 1/2 அடி உயரம்தான் தண்ணீர் இருக்கும். ஆனால் அது மிக வேகமாக நம்மை இழுக்கும்.
காணொளி, 2-3 அடித் தண்ணீரே காரை இழுத்துச்செல்லப் போதுமானது என்று சொல்கிறது.